நீ எந்தன் மோக மழையடி

4.9
(9)

பாகம் – 3

மயில் மனதிற்குள், ‘என்ன இவன் அதுக்குள்ளேயே பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டான்… இன்னும் யாழினி காபி கூட கொடுக்கவே இல்லையே ரூம்ல இருந்து இங்க வந்து நிக்கிறதுக்குள்ள பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டான்’ என்று நினைத்துக் கொண்டிருக்க..

குமுதம், “நீ போய் எல்லாருக்கும் காஃபி கொடு ம்மா” என்றார்.

 

பிறகு, யாழினி அனைவருக்கும் காபியை கொடுத்துச் செல்ல அனைவருக்கும் யாழினியை பிடித்துவிட்டது என்பது அவர்கள் முகத்திலேயே தெரிந்தது.

கடைசியாக ருத்ரன் அருகில் சென்று காஃபி கோப்பையை நீட்ட, “தேங்க்ஸ்” என்று அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தான்.

அவன் குரலில் நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்த யாழினிக்கு தூக்கி வாரி போட்டது போல் இருந்தது.

யாழினி, ‘இவனா…..’ என்று நினைத்து கண்களை அகல விரித்து பார்க்க அதிர்ந்து போய் நின்றாள்.

அவள் ஒரே இடத்தில் நிற்பதை பார்த்த மயில் சிரித்துக் கொண்டே அவள்  அருகில் சென்று யாழினியை பின் அழைத்து வந்து நிற்க வைத்தாள்.

சாந்தி, “பொண்ணுக்கும் என் பையனை ரொம்ப பிடிச்சு போச்சுன்னு தான் நினைக்கிறேன்” என்றார் சிரித்துக் கொண்டே.

அதில் தன்னிலை அடைந்த யாழினி திரு திரு என விழித்துக் கொண்டே நிற்க.

குமுதம், “அது எப்படிங்க மாப்பிள்ளையை பிடிக்காமல் போகும்… அவளோட அண்ணன் எந்த ஒரு விஷயம் பண்ணாலும் அது கட்டாயம் அவளுக்கு பிடித்து விடும் சின்ன வயசுல இருந்தே அவ அப்படித்தான்.. அண்ணன் செல்லம்” என்றார்.

சடுதியில் ருத்ரன் முகம் இருகிப் போனது… கோபத்தில் கண்கள் கோபப் பழம் போல் சிவக்க யாழினியை பார்த்து முறைத்தான்.

அதை அறியாத மயில், “பெரியவங்க நீங்களே பேசிக்கிட்டு இருந்தா எப்படி பொன்னையும் மாப்பிள்ளையும் கொஞ்சம் தனியா பேச அனுப்பி வைக்கலாமே” என்றாள் அனைவர் முன்னிலையிலும்.

குமுதம், “வாய மூடு…. எல்லார் முன்னாடியும் நீ என்ன பேசிக்கிட்டு இருக்க… பெரியவங்க எங்களுக்கு தெரியாதா எப்போ என்ன பண்ணனும் என்று” என்றார்.

சாந்தி, “இதுல என்னங்க இருக்கு அந்த பிள்ளை சொன்னதும் சரிதானே… இந்த காலத்து பிள்ளைங்க எல்லாம் ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிக்கிறது சகஜம்தான்”

“நம்மள மாதிரியா…. அந்த காலத்துல நம்ம வீட்டுல பார்த்த மாப்பிள்ளை கருப்பா செவப்பா என்று கூட பார்க்காமலேயே கழுத்தை நீட்டிடுவோம்… ஆனா, இந்த காலத்து பிள்ளைங்க எல்லாம் நேர்ல பாக்கணும் சொல்றாங்க, பேசணும் சொல்றாங்க, பழகணும் சொல்றாங்க”

என்று அவர் பேசிக்கொண்டே செல்ல மகேஷ் மறுபடியும் தன் தொண்டையை சரி செய்தார்‌. அதில் சட்டென்று வாயை மூடிக்கொண்டார் குமுதம்.

அந்த சமயம் மகேஷ் க்கு  ஏதோ ஒரு அழைப்பு வந்துவிட ஃபோனை எடுத்துக் கொண்டு கொள்ளைபுறமாக சென்றுவிட்டார்.

அவர் சென்றதை உறுதி செய்து கொண்ட சாந்தி, “டேய் நீ போய் பொண்ணு கிட்ட பேசிட்டு வா” என்றார்.

சாந்தியின் வார்த்தையில் யாழினி நிமிர்ந்து ருத்ரனை பார்க்க… அவனோ, “சரி” என்று எழுந்து நின்றான்.

மயில், “இங்க பாரு டி உள்ள போனதும் ரொம்ப யோசிச்சு டைம் வேஸ்ட் பண்ணிடாத டக்குன்னு சொல்லிடு இந்த கல்யாணத்தில் உனக்கு இஷ்டம் இல்லை என்று. உன் அண்ணனை பத்தியும் சொல்லி அவங்களையே எப்படியாச்சும் கல்யாணத்த நிறுத்த சொல்லிட்டு” என்றாள் கிசுகிசுப்பாக….

குமுதம், “என்ன யோசிச்சு நின்டுட்டே இருக்க மாப்பிள்ளைய கூட்டிட்டு போய் பேசிட்டு வா…” என்றவர் அவளுக்கு மட்டுமே கேட்கும் குரலில்

“இங்க பாரு போனோமா மாப்பிள்ளை கேட்கிற கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லிட்டு வந்தோமான்னு இருக்கணும் தேவை இல்லாம அவர் கிட்ட வேற ஏதாவது விஷயத்தை பத்தி பேசின தொலைச்சிடுவேன்”

“உன் அண்ணன் எது பண்ணாலும் அது உன்னோட நல்லதுக்கு மட்டும் தான். அதை நல்லா புரிந்துகொண்டு ஒழுங்கா நடந்துக்கனும்” என்று மெல்லிய குரலில் கூறி அனுப்பி வைத்தார்.

ஏதோ ஒரு யோசனையோடு யாழினி வேறு வழியின்றி அவள் அறையை நோக்கி செல்ல ருத்ரன் அவளை பின்தொடர்ந்து நிழலைப் போல் சென்றான்.

பாவம் அவளுக்கு இன்னும் புரியவில்லை காலம் முழுக்க ருத்ரன் அவளின் நிழலைப் போல் தான் இருப்பான் என்று.

யாழினி அறையின் உள்ளே நுழைந்து விட ருத்ரன் அவளை பின்தொடர்ந்து சென்றவன் கதவை சட்டென்று அனைத்து தாழிட்டான்.

அதில் பதறிப்போன யாழினி பதட்ட விழிகளோடு அவனைப் பார்க்க… ருத்ரன் ஒவ்வொரு அடியாக அவளை நெருங்கி முன் வந்தான்.

யாழினி ஒவ்வொரு அடியாக பின் வைத்து சென்றவள் கடைசியாக சுவற்றில் முட்டி நின்று விட்டாள்.

அவளை இரு பக்கமும் தன் கைகளைக் கொண்டு வளைத்து நெருங்கி நின்றவன் அவள் கண்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் பார்வையின் வீரியத்தை தாங்க முடியாத யாழினி பயத்தில் வார்த்தைகள் தந்தி அடித்தவாறு, “நீ…. நீ… நீங்க… எதுக்கு…” என்று வார்த்தைகளை ஒவ்வொன்றாக கோர்த்துக்கொண்டு இருக்க ருத்ரன் அவள் வாயில் தன் ஒற்றை விரலை வைத்து பேசாதே என்னும் படி தலை அசைத்தான்.

தன் கரங்களை கொண்டு அவள் முகத்தை இரு புறமும் ஆட்டிப் பார்த்தவன் சந்தேக பார்வையுடன், “உன் முகத்தை பார்த்தா கல்யாணத்துக்கான சந்தோஷத்தையே காணோமே” என்றான்.

அவன் கை தீண்டிய சடுதியில் யாழினி யின் கண்ணில் இருந்து மல மல வென கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

ஒரு நொடியில் அவள் உடம்பே கூசி சென்றது…. சட்டென்று அவள் கையை தட்டிவிட்டு  கண்களை துடைத்துக் கொண்டு

“பிடிக்காத கல்யாணத்துக்கு சந்தோஷம் எங்க இருந்து வரும்” என்றாள் முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டு.

ருத்ரன் மெல்லிய சிரிப்புடன், “இப்போ மட்டும் வார்த்தைகள் சரளமா வருதே…. மேடம்க்கு” என்றான் ஒற்றைப் புருவத்தை உயர்த்தி அவள் கண்களை உற்றுப் பார்த்தபடி.

யாழினி, “உனக்கு எப்படி என்ன கல்யாணம் பண்ணனும்னு தோணுச்சு? உனக்கு மனசாட்சியே இல்லையா…..‌ எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லன்னு உனக்கு நல்லா தெரியும் ல” என்றாள் விசும்பலுடன்.

ருத்ரன், “உங்க வீட்ல மாப்பிள்ளை பாக்குறதா கேள்விப்பட்டேன் அதான் சரி நம்ம ஒரு அப்ளிகேஷனை போட்டு வைப்போமேன்னு சும்மா ஒரு அப்ளிகேஷனை போட்டேன் அது இவ்வளவு தூரம் கொண்டு வந்துடுச்சு”

“சரி கடவுள் பண்றது எல்லாம் நல்லதுக்கு தான் அப்படின்னு நானும் நினைச்சுட்டு பழ தட்டோடு உன்னை பொண்ணு கேட்டு வந்துட்டேன்” என்றான் கூலாக.

யாழினி, “தயவு செஞ்சு இந்த கல்யாணத்தை நிறுத்திடு…. எனக்கு இந்த கல்யாணத்துல துளி அளவும் இஷ்டம் இல்ல” என்கவும்.

ருத்ரன், “நிறுத்திட்டா உனக்கு சந்தோஷமா…. நீ சந்தோஷப்படுவியா?” என்றான்.

யாழினி, “நான் ரொம்ப ரொம்ப சந்தோஷப்படுவேன்” என்றாள் ஆவலுடன் அவன் பதிலை எதிர்பார்த்து.

மௌனமாக அவள் முகத்தை பார்த்துக் கொண்டே இருந்த ருத்ரன், “அப்போ இந்த கல்யாணம் கட்டாயம் நடக்கும்” என்று விட்டு தன் கேசத்தை கோதி விட்டு கூலாக அங்கிருந்து நகர்ந்தான்.

யாழினி, “உனக்கு அப்படி என் மேல் என்ன தான் கோபம்” என்று கத்தினாள் கண்ணீர் மல்க.

கதவு அருகில் சென்ற ருத்ரன் அவளின் வார்த்தையில் திரும்பி அவளை பார்க்க அவளும் அவனையே தான் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

ருத்ரன் இரண்டு நிமிடம் அவளைப் பார்த்து விட்டு பதில் அளிக்காமலே வெளியேறி விட்டான்.

யாழினி, ‘இன்னும் என் வாழ்க்கையில் என்ன எல்லாம் நடக்க இருக்கிறதோ தெரியலையே… அவன் எந்த ஒரு பதிலும் சொல்லாமல் போயிட்டான்’ என்று நொந்து போய் நிற்க…

அந்த சமயம் மயில், “என்னடி ஆச்சு? அவர் என்ன சொல்லிட்டு போனாரு…”

“இந்த கல்யாணத்தை நிறுத்த சொல்லி நீ அவர்கிட்ட கேட்டு பார்த்தியா அவர் சரின்னு சொன்னாரா” என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே சென்றாள்.

யாழினி எதற்குமே பதில் அளிக்காமல் சிலையென நின்றிருந்தாள். மயில் அவள் கையைப் பிடித்து உலுக்கு, “என்னடி பித்து புடிச்ச மாதிரி நின்னுட்டு இருக்க… என்னதான் நடந்துச்சு” என்றாள்.

அதற்கும் யாழினி மௌனமாகவே இருந்தாள்… மயில், “சரி டி மணியாச்சு நம்ப இங்கேயே இருந்தால் தப்பா இருக்கும்… வா எல்லாரும் அங்க காத்துக்கிட்டு இருக்காங்க நம்மளும் போகலாம்” என்று அவளையும் அழைத்துக் கொண்டு சென்றாள்.

சாந்தி, “என்னப்பா பொண்ணு கிட்ட பேசிட்டியா…” என்றார்.

ருத்ரன், “அவளுக்கும் இந்த கல்யாணத்துல சம்மதம் தான்” என்று சிரித்துக்கொண்டே அவள் முகத்தை பார்த்தான். யாழினி அதிர்ச்சி விழிகளோடு அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

குமுதம், “யாழினியை பொருத்த வரைக்கும் அவளோட அண்ணன் என்ன சொல்றானோ அது தான். பார்த்திபன் யாரை கை காட்டினாலும் எங்க பொண்ணு கண்ண மூடி கொண்டு கழுத்தை நீட்டுவா எப்பயுமே அவ அண்ணனோட செல்லம்

தான்” என்றார் பெருமையாக.

அந்த சமயம் போனை துண்டித்து விட்டு வந்த மகேஷ், “சரி எல்லாம் பேசி முடிச்சிட்டீங்களா…. கிளம்பலாமா…” என்றார்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!