“இரு தீஷி சொல்றேன். நீங்க இங்க வாங்க” என்று அவர்களை அழைத்தார். அவர்களிடம், “நீங்க இப்போ பண்ணினது பெரிய தப்புதான். ஆனா என் பொண்ணு சின்ன வயசுல பாதுகாப்பா, வேளைக்கு சாப்பிட்டு, நல்லா படிச்சிருக்கானா அதுக்கு நீங்கதான் காரணம். நாட்டில இப்போ சின்னக் குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பு இல்லை. ஆனால் நீங்க அந்த வயசுல சம்முக்கு பாதுகாப்பு குடுத்திருக்கிறீங்க. அதுக்கு நன்றிக்கடனா உங்களுக்கு உதவி பண்ணலாம்னு இருக்கேன். தீஷி இவங்களை நாங்க இருந்த அந்த ஆச்சிரமத்துல சேர்த்து விடு. அங்க வேலை பார்த்திட்டு இருக்கட்டும். அப்போதான் இவங்களுக்கு பாசம், உறவுகளோட அருமை புரியும்” என்றார்.
தீஷிதனும் துர்க்கா கூறியதற்கு எதிர்த்துப் பேசாமல், “சரிங்க அத்தை. இப்பவே அனுப்பி வைக்கிறன். ஆனால் இவங்க போவாங்களா?”
அவர்களை எப்படியாவது அங்கே அனுப்பினாலாவது அவங்க திருந்த வாய்ப்பு இருக்கும் என்று நினைத்த வித்யா அவர்களிடம் வந்து, “உங்களுக்கு கிடைச்ச கடைசி வாய்ப்பு இது. துர்க்கா அம்மா சொல்ற அந்த ஆச்சிரமத்துக்கு போங்க. அப்பிடி அங்க போனா நான் எப்பவாவது வந்து பார்த்துக்குவேன். இல்லை இவங்களை பழிவாங்கணும், சம்மு அக்காவை கஷ்டப்படுத்தணும்னு ஏதாவது பண்ணப் பார்த்தீங்க அப்புறம் பொண்ணுனு சொல்ல நான் இருக்க மாட்டேன்” என்றாள்.
இதைக் கேட்ட லீலாவதி, “ஐயோ வித்து என்னம்மா இப்பிடி சொல்ற? நீ சொல்ற மாதிரி அங்கேயே போயிடுறோம். எங்களுக்கு நீ நல்லா இருந்தா போதும். சம்மு எங்களை மன்னிச்சிடுமா.. உனக்கு எவ்வளவு கெடுதல் பண்ணியிருக்கம். ஆனால் நீ எப்பவும் எங்க மேல பாசத்தையே காட்டின. இதுக்கு பிறகு எங்களால உனக்கு எந்த தொந்தரவும் இருக்காது. அம்மா நீங்க சொல்ற மாதிரி அந்த ஆச்சிரமத்துக்கே நாங்க போயிடுறோம்” என்றார்.
அப்போதும் அவர்களை சந்தேகத்துடன் பார்த்த தீக்ஷிதனைப் பார்த்த மணிகண்டன், “தம்பி நாங்க நிஜமா திருந்திட்டோம். எப்போ எங்க பொண்ணு எங்களோட இருக்கிறது பாதுகாப்பு இல்லைனு சொன்னாளோ அப்பவே நாங்க செத்துட்டோம். எங்களை அந்த ஆச்சிரமத்தில விட்டிருங்க” என்றார்.
பின்னர் தீஷிதன் அவனின் ஆட்களில் ஒருவனை அழைத்து அவர்களை ஆச்சிரமத்தில் கொண்டு விடும்படி கூறினான்.
அதன் பிறகு பரந்தாமன் பேச ஆரம்பித்தார்.
“தீஷி நீ எப்பிடி துர்க்காவை கண்டுபிடிச்ச?”
“சொல்றன் அப்பா. நீங்க அன்னைக்கு எங்கிட்ட யுக்தா பற்றி சொன்னீங்க.. உங்களோட தங்கச்சி பொண்ணுனு. ஆனா அத்தை எங்க இருக்காங்கனு சொல்லலை. அதை வச்சு நான் தேட ஆரம்பிச்சப்போதான் அத்தையும் மாமாவும் இருக்கிற இடம் தெரிஞ்சது. அப்பறம் அங்க இருக்கிற ஒருத்தர் கிட்ட ஹெல்ப் கேட்டேன். அதுமட்டுமல்ல அத்தை மாமாவோட டிஎன்ஏவோட யுக்தா டிஎன்ஏ ஒண்ணாகுதான்னு பார்த்தேன். அதுவும் மேட்சாகிட்டு. சோ யுக்தா இவங்களோட பொண்ணுனு கன்பார்மாகிடிச்சி.. எங்களோட கல்யாணத்துக்கு அத்தை இருக்கணும்னு நினைச்சேன். அதுக்கே ஏற்ற மாதிரியே அவங்களும் கண்ணு முழிச்சிட்டாங்கனு அங்க இருந்து எனக்கு போன் வந்திச்சு அதுதான் நைட்டே கிளம்பி புகழை கூட்டிட்டு போனேன். அப்புறம் நைட் புகழ் வீட்ல இவங்களை தங்க வச்சேன்” என்று நடந்தது முழுவதையும் சொல்லி முடித்தான்.
அனைத்தையும் கேட்ட தமயந்தி, “தீஷி உன்னை நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு.. யுக்தா மேல எவ்வளவு பாசம் வச்சிருந்தா இப்படி அவளுக்காக பாத்து பாத்து இவ்வளவு பண்ணுவா. ரியலி யூ ஆர் கிரேட் தீஷி.”
“ஐயோ அத்தை. அதெல்லாம் ஒண்ணுமில்லை. யுக்தாக்காக நான் என்ன வேணாலும் செய்வேன். யுக்தா நான் சொன்ன மாதிரியே உன்னோட அம்மா அப்பாவை உன்கிட்ட கொண்டு வந்து சேர்த்துட்டேன். இப்போ சந்தோஷமா?”
“ரொம்ப ரொம்ப சந்தோஷம்ங்க. என்னை இனிமே யாரும் அநாதைனு சொல்ல மாட்டாங்கல” என்று குழந்தை போல கேட்டவளை அணைத்துக் கொண்ட தீஷிதன்.
“இல்லை யுக்தா நீ அநாதை இல்லை.. உனக்கு இவ்வளவு பெரிய குடும்பம் இருக்கு… நீ அநாதை இல்லடா” என்றான்.
சம்யுக்தாவின் அருகில் வந்த துர்க்கா, “அம்மாடி உன்னை வளர்க்கிற பாக்கியம் எங்களுக்கு கிடைக்கல.. இனிமே உன்னை நாங்க பாத்துக்குவம்” என்றார்.
இப்படியாக அங்கே அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர். அன்று மாலை தீஷிதன் சம்யுக்தாவிற்கும் ரிஷப்ஷனும் வித்து விக்ராந்த் மற்றும் மதுரா புகழின் என்கேஜ்மென்ட்டும் பெரியவர்களின் ஆசிர்வாதத்துடன் சிறப்பாக நடந்தேறியது.
வந்திருந்த விருந்தினர்கள் அனைவரும் வாழ்த்தி விட்டு பரிசு கொடுத்து விட்டுச் சென்றதும், அங்கிருந்த வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.
தீஷிதன் சம்யுக்தாவிற்கு தமயந்தி ஆர்த்தி எடுத்து வரவேற்ற பின்னர் துர்க்கா கிருபாகரனுக்கும் ஆர்த்தி எடுத்தார். சம்யுக்தா சுவாமி அறைக்குள் சென்று விளக்கேற்றி வணங்கினாள். அனைவரும் ஹாலில் வந்து இருந்தனர்.
அப்போது மதுரா, “இன்னைக்கு நம்ம வீடே நிறைஞ்சு இருக்கு.. எனக்கு ரொம்ப ஹேப்பியா இருக்கு” என்றாள்.
“ஆமா மது.. இத்தனை நாள் இந்த வீட்டுல பெரும்பாலும் நான் மட்டும்தான் இருப்பேன். இனிமேல் என் மருமக, தங்கச்சி, பொண்ணு எல்லோரும் இருப்பாங்கன்னு நினைக்கும் போது சந்தோஷமா இருக்கு.. தமயந்தி நீங்களும் இங்கேயே வந்திடுங்களேன்.”
“அதுக்கென்ன தமயந்தி, உனக்கு இங்க இருக்கிறான் சந்தோஷம்னா இங்கேயே ஒண்ணா இருக்கலாம். மாசத்துக்கு ஒரு தடவை நான் அங்க போய் பிஸ்னஸை பார்த்திட்டு வர்றேன்” என்றார் அமரேந்திரன்.
அவரது இந்தப் பதில் அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.
பின்னர் துர்க்காவும், “எல்லோருக்கும் டயர்டா இருக்கும்.. போய் தூங்குங்க காலையில பேசிக்கலாம்” என்றார். சிறுசுகள் அங்கிருந்து சென்றதும் தமயந்தியிடம் வந்த துர்க்கா, “தீஷிக்கும் சம்முக்கும் சடங்கு வைக்க ஏற்பாடு பண்ணலையா தமயந்தி?”
“இல்ல அக்கா, தீஷி இப்போ எதுவும் வேணாம்னு சொல்லிட்டான். சம்மு கொஞ்சம் ரிலாக்ஸாகட்டும், இந்த லைஃபை அவ ஏத்துக்கிட்ட அப்புறம் அதை பாத்துக்கலாம்னு சொன்னான் அக்கா. அதுதான் எதுவும் ஏற்பாடு பண்ணலை.”
“தீஷி சம்முக்காக பார்த்து பார்த்து பண்றதை நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு.. இப்பிடி எல்லோரும் சந்தோஷமா இருந்தா அதுவே போதும்.”
“ஆமா அக்கா, அக்கா நீங்களும் டயர்டா இருப்பீங்க. போய் தூங்குங்க அக்கா. நான் இங்க இருக்கிற வேலையை முடிச்சிட்டு தூங்குறேன்.”
“சரி தமயந்தி.. நீயும் ரொம்ப நேரம் இருக்காம தூங்குமா” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார்.
தீஷிதனின் தனது அறையில் இருந்தான். சம்யுக்தா அவளது அறைக்குள் சென்று குளித்துவிட்டு விட்டு ஒரு புடவையை அணிந்து கொண்டு கட்டிலில் அமர்ந்திருந்தாள். சம்யுக்தாவுடன் தீஷிதன் பேசுவதை தவிர்த்துக் கொண்டிருந்தான். அது சம்யுக்தாவைப் பெரிதும் பாதித்தது. அவனிடம் பேச வேண்டும் என்று நினைத்து தீஷிதனின் அறைக்குள் சென்றாள். அங்கே தீஷிதன் அப்போதுதான் குளித்துவிட்டு வந்து தலையை துவட்டிக் கொண்டு நின்றான்.
அவன் அறைக் கதவை திறந்து வாசலில் நின்றவள், “என்னங்க” என்றாள். திரும்பிய தீஷிதன் அவளை ஒரு நொடி பார்த்து விட்டு, “யுக்தா வாடா” என்றான். அவ்வளவுதான் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாக சென்று அவனை அணைத்துக் கொண்டு அழுதாள்.
“ஏங்க.. ஏன் என்கூட பேசாம அவாய்ட் பண்றீங்க?”என்று அழுதாள்.
சிரிப்புடன் அவளை அணைத்துக் கொண்டவன், “இதோ இதுக்காகத்தான் உன் பக்கமே வரலைடா. நான் உன் பக்கத்தில வந்திருந்தா நீ இருக்கிற இடம் மறந்து இப்படி அழுதுட்டு இருப்ப.. அங்க நீ அழுதா உன்னை நான் எப்படி சமாதானப்படுத்துவது? நம்ம ரெண்டு பேரு மட்டும் இருக்கும் போது சமாதானப்படுத்துறது ரொம்ப ஈஸி.. அதுதான் கொஞ்சம் விலகி இருந்தேன்.” என்றவன் நெஞ்சில் குத்தியவள் பின்னர் அழ ஆரம்பித்தாள்.
“எனக்காக நீங்க பண்ண இதுக்கு என்னால கைமாறாக என்னங்க பண்ண முடியும்? ஒரே நிமிஷத்துல என்னோட வாழ்க்கையேயே மாற்றி விட்டீங்க.. அநாதையாக இருந்த எனக்கு இவ்வளவு பெரிய குடும்பத்தை கொடுத்திருக்கிறீங்க. எனக்கு சந்தோஷத்துல மூச்சு முட்டுதுங்க.” என்று அழுது கொண்டு இருந்தவளை அப்படியே அணைத்துக் கொண்டு சோபாவில் அவன் அமர்ந்து அவளை தனது மடியில் வைத்துக் கொண்டான்.
“யுக்தா.. இது வரைக்கும் அழுதது போதும். இனிமேல் நீ எப்பவும் அழவே கூடாது.. இந்த கண்கள்ல கண்ணீரை நான் பார்க்க விரும்பவே இல்லை. இதுக்கு மேல நீ அழுதா நான் இல்லைனு அர்த்தம் யுக்தா.” என்றவனைப் பார்த்து, “இப்படி எல்லாம் சொல்லாதீற.. நான் இனிமே அழமாட்டேன்.. நான் எதுக்கு அழணும்? என்னைப் பார்த்துக்கத்தான் என் புருஷன் இருக்காரே.” என்றவள் இதழோடு இதழ் சேர்த்தான் தீஷிதன்.
இப்படியாக அனைவரும் சேர்ந்து மகிழ்ச்சியாக இருந்தனர். இரண்டு நாட்களின் பின்னர் தீஷிதன் சம்யுக்தாவை அழைத்துக் கொண்டு சென்னை போக வேண்டும் என்றான். இதைக் கேட்ட பரந்தாமன், “எதற்கு தீஷி இப்போ சென்னைக்கு போகணும்னு சொல்ற?”
“அங்க ஒரு ப்ரொஜெக்ட் பண்ண வேண்டி இருக்கு அப்பா, இதுக்கு யுக்தா தான் லீடர்.. அதனால அங்க போயேயாகணும்” என்றான்.
“அப்டியா.. சரி பார்த்து பத்திரமா போயிட்டு வாங்க” என்றார்.
அவர்களிடம் சொல்லி விட்டு, இங்க இருக்கும் கம்பனியை பார்த்துக் கொள்ளுமாறு புகழிடம் சொல்லிவிட்டு தீஷிதன் சம்யுக்தாவை அழைத்துக் கொண்டு சென்னைக்குச் சென்றான்.
சென்னையில சம்யுக்தா வீட்டிலே இருவரும் தங்கினார்கள். அடுத்த நாள் காலையில் மணிகண்டனிடம் இருந்து சம்யுக்தா பெயருக்கு மாற்றிய கம்பெனிக்கே சம்யுக்தாவை அழைத்துச் சென்றான் தீஷிதன்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
“ஆமாம் சார்.. அது உள்ளே இருந்து வர்ற ஒயர் எரிஞ்சுக்கிட்டே வந்தது.. அப்புறம் நான் லேசா எரியும்போதே உள்ளே இருந்து தண்ணி எடுத்துட்டு வந்து கொட்டணும்னு வேக வேகமா அங்க சுத்தி முத்தி பார்த்தேன்.. அங்கே எதுவும் தண்ணி இல்லை.. அப்புறம் எங்க கடைக்கு ஓடி வந்து நான் தண்ணி எடுத்துட்டு போறதுக்குள்ள கடை முழுக்க எரிஞ்சிருச்சு.. அதுக்கப்புறம் உள்ள போக பயமா இருந்ததுனால தான் நான் வெளியேவே நின்னுட்டேன்..”
ஆதி கேட்ட கேள்விக்கு சிறிது பதட்டத்துடனே சொன்னார் மாலன்..
“ஓ… அப்படியா? ஓகே.. தேங்க்ஸ்..” என்றவன் மறுபடியும் அல்லியோடு அவர்களுடைய கடைக்கு சென்றான்..
“ஆமா.. உங்க அப்பா கடைக்கு வரும்போது தண்ணி எல்லாம் எடுத்துட்டு வர மாட்டாரா? ஆனா நான் அங்க ஒரு தண்ணி பாட்டில் பார்த்தேனே.. அதுவும் அரைகுறையாக எறிஞ்சு கிடந்தது..”
அப்போதுதான் அல்லிக்கும் தோன்றியது.. அவள் அப்பா எப்போது கடைக்கு வரும்போதும் தண்ணீரும் மதிய உணவும் எடுத்துக் கொண்டுதான் வருவார்.. அவளும் அந்த தண்ணீர் குடுவையை அங்கே பார்த்தாள்..
“அதானே..? அங்க கேஷ் கவுண்டர் பக்கத்திலேயே தண்ணி பாட்டில் இருந்ததே.. அங்கிள் ஏன் தண்ணி இல்லன்னு சொன்னாரு? ஒருவேளை கவனிக்கலையோ?”
அவள் யோசனையாய் கேட்க “ஆமா.. உங்க கடைக்கு இன்சூரன்ஸ் எல்லாம் பிராப்பரா இருக்கா?”
அவன் ஏதோ போலீஸ் போல விசாரிக்க அவளோ “அதெல்லாம் எங்க அப்பா சரியா செஞ்சுருவார்… ஆனா அதுலயும் முழு பணமும் கிடைக்காது.. முழுக்க நஷ்டம் ஆயிடுச்சு..” என்றாள் அவள்..
“சரி நீ இப்ப வீட்டுக்கு போ.. எனக்கு ஒரு டூடேஸ் டைம் குடு.. அப்புறம் கடையில ஆக்சிடென்ட் ஆனா பண்ண வேண்டிய இன்சூரன்ஸ் ப்ரோசிஜர்ஸ் இதெல்லாம் பார்த்து இந்த கடைக்கு எவ்வளவு நஷ்ட ஈடு வாங்க முடியும்னு நான் உனக்கு டீடைல் சொல்றேன்.. இது கூட உங்க அப்பாவை பாத்தா எனக்கு எங்க அப்பா ஞாபகம் வருது.. அவர் அழறதை பார்க்க கொஞ்சம் கஷ்டமா இருக்கு.. அதனால இந்த விஷயத்தில கொஞ்சம் ஹெல்ப் பண்ணலாம்னு நினைக்கிறேன்.. அதுக்காக நம்ம டீலிங்கை மறந்துடாத.. நீ இன்னைக்கு ஆஃபீஸ்ல பேசுன பேச்சுக்கு இப்படியே உன்னை இழுத்துட்டு போய்
சைன் வாங்கணும்னு தான் தோணுது.. ஆனா இப்போ உன் வீட்டோட நிலைமையும் சரி இல்ல.. அதனால போனா போகுதுன்னு நாளைக்கு வரைக்கும் உனக்கு டைம் தரேன்.. நாளைக்கு காலைல 10வது மணிக்கு நீ ஆஃபீஸ்க்கு வரணும்.. ஒன்னு வாடகை தாயா இருக்கிற டாக்குமெண்ட்ல சைன் பண்ணு… இல்ல கம்பெனி பார்ட்னர்ஷிப் கேன்சல் பண்ற டீல்ல சைன் பண்ணு.. உன் இஷ்டம்.. ஆனா மார்னிங் 10 மணி வரைக்கும் தான் உனக்கு டைம்.. இதை நல்லா மைண்ட்ல போட்டு வச்சுக்கோ..”
அவள் தலையில் சுட்டு விரலை தட்டி சொன்னவன் நேராக சென்று தன் காரில் ஏறி வண்டியை எடுத்துகொண்டு தன் வீட்டுக்கு புறப்பட்டான்..
அல்லி ஒரு பெருமூச்சை விட்டவள் மறுபடியும் தன் வீட்டிற்கு செல்லும் வழி முழுக்க அவனை பற்றி தான் யோசித்த படி போனாள்..
“இவன் என்ன மேக்கோ தெரியல.. ஒரு நேரம் ஹெல்ப் பண்றேங்கறான்.. ஒரு நேரம் என்கிட்ட இருக்கிற கம்பெனியை புடுங்கிக்கிறேன்கறான்.. ஐயோ.. இவனை புரிஞ்சிக்கவே முடியலையே.. மொத்தத்துல என்னை டார்ச்சர் பண்ணனும்னே வந்து இருக்கான்..” என்று புலம்பிக் கொண்டே போனாள் தன் வீட்டிற்கு..
அன்று இரவு அல்லியின் தந்தை செழியன் நிகழ்ந்ததை நினைத்து புலம்பியபடியே இருக்க அல்லியும் அவள் அன்னையும் அவர் கூடவே அவரை சமாதானப்படுத்துவதில் தங்கள் உறக்கத்தையே மறந்திருந்தார்கள்..
ஒருவழியாக விடியற்காலை 3 மணிக்கு செழியன் உறங்க அதன் பிறகு தாமரையை உறங்க சொல்லிவிட்டு அல்லி தன் அறைக்கு சென்று படுத்தாள்.. ஆனால் அதன் பிறகும் அவள் கண்கள் உறக்கம் கொள்ளவில்லை..
காலை பத்து மணிக்கு ஆதி வைத்திருந்த கெடு அவள் மனத்தை உறங்கவிடாமல் அலை கழித்து கொண்டு இருந்தது.. இப்போது தன் குடும்பம் இருக்கும் நிலையில் தன் மசாலா நிறுவனத்தையும் இழந்தால் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்று புரிந்தது..
அடுத்த பத்து நாட்களில் இருக்க இடமும் இன்றி திண்டாட வேண்டி இருக்கும் என்று உணர்ந்து தான் இருந்தாள்..
ஆனால் அதற்காக திருமணம் செய்யாமல் குழந்தை பெறுவதை அவளால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை..
அப்படியே விழியோரம் நீர் வழிந்தோட சிறிது நேரம் படுத்திருந்தவள்.. சீக்கிரமே படுக்கையில் இருந்து எழுந்து காலை கடன்களை முடித்து குளித்துவிட்டு வந்தவள் தன் கோலம் போடும் வேலையை முடித்து தன் அன்னை தந்தைக்கும் சேர்த்து காபி போட்டு அவர்களுடைய அறைக்கு எடுத்து போனாள்..
அவர்களை எழுப்பி பருக காபி கொடுத்து உற்சாகமாய் அவர்களோடு பேசியவள் அன்றைய காலை சிற்றுண்டியையும் மதிய உணவையும் தானே சமைத்து அவர்கள் இருவரோடும் உட்கார்ந்து சிற்றுண்டியை இருவருக்கும் ஊட்டி விட்டு தானும் சாப்பிட்டு பிறகு தாமரையிடம் அவள் தந்தை செழியனை எங்கேயாவது கோவிலுக்கு அழைத்துப் போகச் சொல்லி ரகசியமாய் சொல்லிவிட்டு தனக்கு மதிய உணவை எடுத்துக் கொண்டு அவர்களிடம் அலுவலகத்திற்கு போவதாக சொல்லிவிட்டு கிளம்பினாள்..
வீட்டிலிருந்து கிளம்பியவள் நேராக அவள் வீட்டு பக்கத்தில் இருந்த பிள்ளையார் கோவிலுக்கு சென்றாள்.. அங்கு கோவிலின் உள்ளே சென்று பிள்ளையார் எதிரே அமர்ந்தவள்.. கண்களில் இருந்து தாரைதாரையாக கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது..
“கடவுளே.. ஏன் என்னை இப்படி தர்ம சங்கடமான நெலைக்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கே.. நான் என்ன பண்ணுவேன்? இந்த ரெண்டு விஷயமும் எனக்கு ரொம்ப முக்கியம்.. அந்த பொண்ணுங்களையும் நடுத்தெருவில நிறுத்த முடியாது.. என் குடும்பத்தையும் நடுத்தெருவுல நிறுத்தமுடியாது.. அதுக்காக கல்யாணம் பண்ணாம நான் ஒரு குழந்தையை சுமக்க முடியாது.. நீ எல்லாருடைய விக்னங்களையும் தீர்த்து வெப்பன்னு எல்லாரும் சொல்றாங்க.. இந்த பிரச்சனைக்கு நீ தான் ஒரு முடிவு சொல்லணும் பிள்ளையாரப்பா… எங்க அப்பாவோட கௌரவத்துக்கு எந்த பாதிப்பும் வராம அதே சமயம் எங்க வீட்டோட.. அந்த பொண்ணுங்களோட வாழ்வாதாரத்துக்கும் எந்த பாதிப்பும் வராம எனக்கு ஏதாவது ஒரு முடிவு சொல்லு..” அழுதபடி மனமார கரைந்து வேண்டினாள் கணபதியை…
அந்தப் பிள்ளையார் கோவிலில் விநாயகரின் எதிரில் அமர்ந்து அழுது கொண்டிருந்தவளின் கண் முன் ஒரு சிறிய குடும்பம் பட்டது.. அவர்கள் ஒரு 3 வயது பெண் குழந்தையை கையில் வைத்திருந்தார்கள்..
குழந்தையை ஒரு தள்ளுவண்டியில் தள்ளி கொண்டு வந்தவர்கள் பிரகாரத்தில் அந்த குழந்தையை இறக்கிவிடவும் அவள் வேகமாக பிரகாரத்தின் இன்னொரு பக்கத்திற்கு கண் மறைவாக ஓடி சென்று விட்டாள்..
அவள் பின்னே ஓடி சென்று அவளை தூக்கி வந்த அந்த குழந்தையின் தந்தை மறுபடியும் அவளை தள்ளுவண்டி இருக்கையிலே அமர வைத்து தள்ளிக் கொண்டு போனார்..
குழந்தை தன்னைக் கீழே இறக்கி விடச் சொல்லி கேட்டது..
அதற்கு அவளின் அம்மா “நான் உன்னை கீழே இறக்கி விடுறேன்.. ஆனா எங்க கண்ணு முன்னாடி தான் விளையாடணும்.. அந்த பக்கம் எல்லாம் கண் மறைவா போகக்கூடாது.. அப்படின்னா இங்க இறக்கிவிடுறேன்.. இல்லன்னா இந்த வண்டியிலதான் நீ உட்கார்ந்திருக்கணும்” என்று சொன்னாள்..
இதைக் கேட்ட அந்த குழந்தை “நான் இங்கேயே விளையாடுறேன்..” என்று சொல்லவும் அவளைக் கீழே இறக்கி விட்டார்கள். அந்த குழந்தை அவர்கள் கண் முன்னாடியே விளையாடிக் கொண்டிருந்தாள்..
இதைப் பார்த்த அல்லிக்கு தன் கஷ்டத்தை தாண்டியும் சிரிப்பு வந்தது.. இந்த குழந்தை போலவே இருந்திருந்தால் இப்போது இருக்கும் கஷ்டம் ஒன்றுமே இருந்திருக்காது என்று எண்ணியவள் மறுபடியும் தன் பிரச்சினைக்கு என்ன தீர்வு என்று யோசித்தாள்..
அப்போது அவள் மூளையில் ஒரு பொறி தட்டியது.. அந்தத் தாய் எடுத்த முடிவினால் அந்த குழந்தையும் அவள் ஆசைப்பட்டபடி விளையாடினாள்… அதே சமயம் அந்த தீர்வு பெற்றோரின் கவலைக்கேற்ப அவர்கள் கண் முன்னால் அந்த குழந்தை பாதுகாப்பாக விளையாடுவதற்கும் உதவியது..
இப்போது தனக்கு இருக்கும் பிரச்சினையிலும் தான் இதையேதான் செய்ய வேண்டும் என்று எண்ணினாள்.. என் மானத்திற்கும் எந்த பாதிப்பும் வரக்கூடாது.. அதே சமயம் தன் அலுவலகத்தில் உள்ள பெண்களுக்கும் எந்த பாதிப்பும் வரக்கூடாது என்று சிறிது யோசித்தவளுக்கு சட்டென ஒரு நல்ல தீர்வு புலப்பட்டது..
விநாயகரின் பக்கம் திரும்பியவள் கண்ணில் நீர் மல்க அவருக்கு நன்றி சொல்லிவிட்டு தன் நிறுவனத்தை நோக்கி புறப்பட்டாள்..
அங்கே ஆதித்யா அவன் சொன்னபடி அந்த அலுவலக அறையிலேயே அமர்ந்திருந்தான்..
“என்ன அல்லி.. யோசிச்சிட்டு வந்துட்டியா? என்ன முடிவு பண்ண? எந்த டாக்குமெண்ட்ல சைன் பண்ண போறே?”
அவன் திமிராய் கேட்க “நான் வாடகை தாயா இருக்க ஒத்துக்கற டாக்குமென்ட்லயே சைன் பண்றேன்” என்றாள் அவள்..
அவன் தான் நினைத்தது போலவே எல்லாம் நடக்கப் போவதை எண்ணி இதழ் விரித்தான்..
“ஆனா அதுக்கு முன்னாடி நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து இன்னொரு டாகுமெண்ட்ல சைன் பண்ணனும்”
அவள் அவனைக் கூர்ந்து பார்த்தபடி கூறவும் அவன் ஒன்றும் புரியாமல் ஒரு குழப்பத்தோடு அவளை பார்த்தான்..
“எந்த டாக்குமெண்ட்ல நாம இரண்டு பேரும் சேர்ந்து சைன் பண்ணணும்?”
அவனுக்கு தலை சுற்றியது.. “நானே ரெண்டு பத்திரத்தை கொண்டு வந்து அவ முன்னால நீட்டி இருக்கிறேன்.. இவ என்னடான்னா இன்னும் ரெண்டு பத்திரத்தில கையெழுத்து போடணும்னு சொல்றா..”
அவளை ஆச்சரியமாக பார்த்தவன் “கொஞ்சம் எனக்கு புரியிற மாதிரி சொல்றியா? என்கிட்ட நிறைய டைம் கிடையாது உன்னோட வளவளன்னு பேசுறதுக்கு” என்றான்..
“முதல்ல நம்ம சைன் பண்ண வேண்டிய டாக்குமெண்ட் நம்ம கல்யாண ரிஜிஸ்ட்ரேஷன் டாக்குமெண்ட்..” என்றவுடன் “என்னது?” என்று அவன் ஆரம்பிக்கவும் “ஒரு நிமிஷம்.. நான் சொல்றதை முழுசா கேட்டுட்டு அதுக்கப்புறம் இதுக்கு உனக்கு சம்மதமா இல்லையான்னு சொல்லு..” என்றாள் அவள்..
அன்றைய தினம் காலேஜ் முடிந்ததும் பஸ்ஸிற்காக காத்திருந்தாள் சுதர்ஷினி. மாலை நேரம் என்றபடியால் பஸ் கூட்டமாக இருந்தது. அதனால் சுதர்ஷினி அதில் ஏறாமல் அடுத்த பஸ்ஸிற்காக காத்திருந்தாள். அப்போது ஒருவன் உடம்பில் காயத்துடன் வேகமாக ஓடி வந்தான். அவனைத் துரத்திக் கொண்டு பின்னால் வேகமாக வந்தான் வீரேந்திர ப்ரசாத். அவனைப் பார்த்த சுதர்ஷினி. ‘இவன்தானே இன்னைக்கு காலேஜ்ல ஒரு ஸ்டூடண்டைப் போட்டு அடிச்சது… இப்போ என்ன இவன் இன்னொருத்தனை துரத்திட்டு போறான்… இவனுக்கு யாரையாவது அடிக்கிறதான் வேலையா….?’ என நினைத்தவள், பஸ் வந்ததும் அதில் ஏறி வீட்டிற்குச் சென்றாள்.
இங்கே வீரேந்திர ப்ரசாத் துரத்திக் கொண்டு வந்தவன், வீதி ஓரத்தில் இருந்த இளநீர் வைத்திருந்த தள்ளு வண்டியைப் பார்த்தான். அவன் ஓடி வந்த வேகத்திலே அந்த வண்டியில் இருந்த இளநீர் குலை ஒன்றை எடுத்து முன்னால் ஓடியவன் மீது வீசினான். கனமான இளநீர் குலை அவனின் முதுகில் பட கீழே விழுந்தான். கீழே விழுந்தவன் எழ முயலும் போதே அவனை பிடித்தான் வீரேந்திர ப்ரசாத். அவன் முதுகில் முட்டுக்காலைப் ஊன்றி, அவனின் கையை முதுகுப் புறம் கொண்டு வந்தான். அதில் அவன் அலறினான்.
அவன் வாயிலையே ஒன்று போட்டு, “ஏன்டா உனக்கு எவ்வளவு தெனாவட்டு இருந்தா என் ஸ்டேஷனுக்கு வந்து… லாக்கப்ல இருக்கிற அந்த பொறுக்கிய கூட்டிட்டு போக பாத்திருப்ப…? நீ எப்பவுமே வெளிய வராத மாதிரி பண்றேன் வாடா ஸ்டேஷனுக்கு….” என்று அவனை இழுத்துக் கொண்டு செல்ல, அவன் முன்னால் ஒரு ஜீப் வந்து நின்றது. அதில் இருந்து எட்டிப் பார்த்தான் பரத்.
“ஹாய் மச்சான்…”
“நீ எங்கடா இங்க…? என் பின்னாடில நீ ஓடி வந்த…?”
“மச்சான் நீ சொல்றது கரெக்ட்… உன் பின்னாடிதான் நான் ஓடி வந்தன்.. ஆனால் நீ ரொம்ப வேகமாக ஓடின.. என்னால ஓட முடியல.. அதுதான் ஸ்டேஷன் போயிட்டு ஜீப்பை எடுத்துட்டு வந்தன் இவனை பிடிக்க… எப்படி மச்சான் என்னோட ஐடியா…?”
“ரொம்பபபபபப சூப்பர்… நீ எல்லாம் போலீஸ்னு வெளியில சொல்லிடாத மச்சான்…”
“ஓ.. சரிடா சரி… நீ ஜீப்ல ஏறு.. இவனை ஸ்டேஷன் கொண்டு போயிட்டு லாக்கப்ல வச்சி நம்ம வேலையை ஆரம்பிக்கலாம்…”
“அப்படியே பண்ணிடலாம்….” என்றவன் அவனை ஜீப்பில் ஏற்றி விட்டு அவனும் ஜீப்பில் ஏறினான்.
………………………………………………….
வீட்டுக்கும் வாசலிலுக்குமாய் நடந்து கொண்டு இருந்தார் சுமதி. சோபாவில் இருந்து காப்பி குடித்துக் கொண்டு இருந்த சரவணன் இவர் அங்கும் இங்கும் நடப்பதைப் பார்த்து சிரித்துக் கொண்டார்.
“என்ன சுமதி வீட்டை அளந்துட்டு இருக்க…?”
“வீட்டை ஒண்ணும் அளக்கல.. நம்ம பொண்ணை காணோம்னு நேரத்தை பாக்குறதும் வாசலை பாக்குறதுமா இருக்கேன்…. ஆபிஸ் வேலைக்கு போற நீங்களே வந்துட்டீங்க… இவ இன்னும் வீடு வந்து சேரல….” என்று சத்தம் போட்டார்.
“சுமதி அவ ஒண்ணும் ஸ்கூல் படிக்கிற சின்னப் பொண்ணு இல்லை… காலேஜ்ல பாடம் படிப்பிக்கிற டீச்சர்… நீ இன்னும் அவளைச் சின்னப் பொண்ணுனு நெனச்சிட்டு இருக்காத சுமதி…”
“நீங்க புரிஞ்சுதான் பேசுறீங்களா…? நேரம் போயிட்டு இருக்கு… மழை வேற வர மாதிரி இருக்கு… எனக்கு பயமா இருக்கு…” என்றார்.
“பயப்படாத சுமதி… உன் பொண்ணு தைரியமானவ… அவ வந்திடுவா… ஒருவேள பஸ் வர லேட்டாயிருக்கும்…”
“என்னை சமாதானப்படுத்துறத விட்டுட்டு போய் ஒரு எட்டு அவளைப் பாத்துட்டு வாங்க…” என்றார்.
“அப்பா பாருங்க அம்மாவை… அம்மா ஸ்கூட்டிய வாங்கினா ஓடணும்மா… ஆனா இந்த ஸ்கூட்டி வாங்கினதுல இருந்து ஒரு நாலு தடவைதான் அதை ஓட விட்டுருப்ப…”
“நீ சாப்பிடாம அழுது அடம்பிடிச்சதனாலதான் நான் அந்த ஸ்கூட்டிய வாங்கிக் கொடுத்தன்… அதுல போறது உனக்கும் ஷேஃப்டி இல்ல… உனக்கு முன்னால வர்றவங்களுக்கும் உன்னால ஷேஃப்டி இல்ல…”
“அம்மா என்னமா நீ…. அங்க காலேஜ் படிக்கிறவங்க எல்லாம் ஸ்கூட்டில வர்றாங்க… படிப்பிக்கிற நான் பஸ்ல போறன்… ப்ளீஸ் மா… நான் பத்திரமா போயிட்டு பத்திரமா வருவன்மா… ப்ளீஸ் மா… அப்பா அம்மாக்கிட்ட சொல்லுங்கபா….”
“சுமதி…. அவதான் ஆசப்படுறால்ல போயிட்டு வரட்டுமே….” என்று ஒருவாறு மனைவியை சமாதானப்படுத்தினார். அதன் பின்னர் சுமதி, “சரி பாத்து பத்திரமா போகணும்… வேகமாக போகக்கூடாது…” என்றார்.
“ஐஐஐஐஐ ஜாலி… அம்மா, அப்பா லவ் யூ சோ மச்…. அம்மா நான் போய் ஃப்ரெஷாகிட்டு வந்திடுறன்… எனக்கு ஒரு காப்பி போட்டு வைங்க…” என்றவள் பாக்கை எடுத்துக் கொண்டு அறைக்குள் சென்றாள்.
போகும் மகளைப் பார்த்த சுமதி சரவணனிடம், “இவளுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வச்சிட்டா போதும்ங்க…”
“இப்போதானே சுமதி அவ காலேஜ்க்கு போறா… கொஞ்ச நாள் போகட்டுமே…”
“இப்படி சொல்லிச் சொல்லித்தான் அவள மேலும் மேலும் படிக்க வச்சீங்க… இப்போ இப்படி சொல்றீங்க… பாருங்க சீக்கிரமா வரன் பாக்குற வேலையை பாருங்க…” என்றவர் மகளுக்கு காப்பி போடச் சென்றார்.
…………………………………………………
வீராவும் பரத்தும் ஜீப்பில் ஏற்றியவனை கொண்டு வந்து சர்வேஷின் லாக்கப்லயே போட்டனர்.
“உங்க ஙொய்யாவோட பையனை காப்பாத்தி வெளில கூட்டிட்டுப் போகத்தானே வந்த… இப்போ அவன்கூட ஒரு லாக்கப்ல இருந்து கம்பி எண்ணு….” என்றான். அங்கிருந்த கான்ஸ்டபிளை அழைத்தவன், “இங்க பாருங்க இவனுக்கு டைம்க்கு சாப்பாடு குடுங்க… ஆனால் யாரையும் இவனை பாக்க விட வேணாம்… நான் வீட்டுக்கு போயிட்டு சீக்கிரமா வந்திடுறன்…”
“சரிங்க சார்…”
“மச்சான் வா வீட்டுக்கு போயிட்டு வந்திடலாம்…”
“இல்லடா நீ போ… நான் இன்னொருநாள் வர்றேன்…”
“பரத் சொன்னா கேளு…”
“இல்லடா நான் வரல… ஆஸ்ரமத்துல இருந்து மதர் கால் பண்ணி என்னை வரச்சொன்னாங்க…”
“அப்டியா சரி நீ போய் மதரை பாரு… நானும் அவங்கள கேட்டதா சொல்லு…”
“கண்டிப்பா சொல்றேன் மச்சான்….” என்று சொல்லிவிட்டு பரத் அவனின் புல்லட்டில் செல்ல, வீரா அவனது ஜீப்பில் சென்றான்.
வீரா வீட்டிற்கு வந்ததும், அவனைப் பார்த்த அவனின் பைரவ் (நாய்க்குட்டி) அவனிடம் ஓடி வந்தது. “பைரவ்…” என்று அதைக் கொஞ்சியபடி தூக்கிக் கொண்டு உள்ளே வந்தான். அவனது தாய் சுபத்ரா அவனிடம், “வீரா…” என்று அழைத்து கண்ணைக் காட்டினார்.
“பாத்து கண்ணைக் காட்டி கண்ல சுழுக்கு வந்திடப் போகுது. நான் இங்க இருக்கிறது உன் பையனுக்கு நல்லாவே தெரியும்… நீ ஒண்ணும் சொல்லாத…”
“ஆமா போலீஸ்கார குடும்பத்துல இருந்திட்டு நான் படுற பாடு இருக்கே…”
“அம்மா, இப்போ உங்களுக்கு என்ன பிரச்சனை…?”
“வீரா உன்னோட அப்பாதான் வீட்ட வந்துல இருந்து சத்தம் போட்டுட்டு இருக்கிறாரு…”
“அம்மா உண்மைய சொல்லுங்க அப்பா சத்தம் போட்டாரா இல்ல என்னை திட்டினாரா…?” என்று வீரேந்திர ப்ரசாத் கேட்க, சுபத்ராவோ, “அது வந்து வீரா….”
“சும்மா இரு சுபா… வீரா நீ பண்றது எதுவும் சரியில்லையே….”
“எதுப்பா சரியில்லை…?”
“அந்த கன்னியப்பன் ரொம்ப மோசமானவன் அவன் பையனையே அரெஸ்ட் பண்ணியிருக்க…”
“அரெஸ்ட் பண்ணாம என்ன பண்ணச் சொல்றீங்க அப்பா… நான் ஒண்ணும் நாட்டுக்கு நல்லது பண்ணவனை அரெஸ்ட் பண்ணல… அவன் ஒரு பொறுக்கினா அவன் பையன் கேடுகெட்ட பொறுக்கியா இருக்கான்… காலேஜ்க்குள்ள போதைப்பொருள் விக்கிறான்… அவன விடச் சொல்றீங்களா…?”
“வீரா நான் அவன விடச் சொல்லலை… ஆனா அந்த கன்னியப்பன் ஸ்டேஷனுக்கு வந்தப்போ நீ ஏன் சல்யூட் பண்ணல…? அது தப்புத்தானே வீரா…”
“அப்பா ஐ ஆம் சாரி… என்னால அந்த பொறுக்கிக்கு எல்லாம் சல்யூட் பண்ண முடியாது….”
“வீரா அவன் மோசமானவனா இருந்தாலும் அவனோட பதவிக்கு நாம மரியாதை குடுத்துத் தானேயாகணும்…”
“சாரிப்பா என்னால அது முடியாது… நான் முதல் முதலா இந்த காக்கிச் சட்டையை போட்டுட்டு வந்து உங்க முன்னாடி நின்னப்போ நீங்க என்னப்பா சொன்னீங்க…? வீரா இந்த காக்கிச்சட்டை உன்னோட உடம்புல இருக்கிற வரைக்கும் நீ எந்த தப்புக்கும் துணை போகக் கூடாது… எந்த அய்யோகக்கியனுக்கும் முன்னால தலைகுனியக் கூடாதுனு சொன்னீங்கல… அதனாலதான் அந்த பொறுக்கி அமைச்சராவே இருந்தாலும் நான் சல்யூட் பண்ணல…”
“வீரா புரிஞ்சிக்கோ… உன்னோட கோபத்தை குறைச்சிக்க இல்லனா அது உனக்குத்தான் பிரச்சனை….”
“உங்க பையன் உங்களைப் போலத்தானே இருப்பான்…. உங்களோட கோபத்தின் எல்லை எப்படி இருக்கும்னு எனக்கு நல்லாவே தெரியும்…. இப்போதான் நீங்க உங்க கோபத்தை குறைச்சிருக்கீங்க… வீரா நீ போ.. போய் குளிச்சிட்டு வா சாப்பாடு எடுத்து வைக்கிறன்… நீங்களும் வாங்க….” என்றவர் உள்ளே செல்ல, வீரா தந்தையைப் பார்த்து சிரித்து விட்டு உள்ளே சென்றான்.
…………………………………………………
“அம்மா என்ன சமையல்…?” என்றவாறு சமையல் அறைக்கு வந்தாள் சுதர்ஷினி.
“தோசைதான் சுதர்…”
“ரொம்ப பசிமா குடுமா…” என்றவள் சமையல் அறைக் கட்டில் ஏறி அமர்ந்தாள் தட்டுடன்.
“இன்னைக்கு காலேஜ் எல்லாம் எப்டி போச்சு சுதர்…?”
“ரொம்ப நல்லா போச்சுதுமா… ஆனால் நான் காலேஜ்ல காலை வச்சதும் ஒரு ஸ்டூடண்ட் எங்க இருந்து வந்தான்னு தெரிலமா என் காலடியில வந்து விழுந்தான்மா…”
“என்னடி சொல்ற அம்புட்டு மரியாதையா அந்த ஸ்டூடண்ட்க்கு….?”
“அட நீங்க வேற அம்மா… அவஅவன் மரியாதையில வந்து என் கால்ல விழல… அவனை ஒருத்தன் அடிச்சிருக்கிறான்… அந்த அடியிலதான் வந்து விழுந்தான்மா….”
“ஏன் சுதர் அப்படி அடிதடி நடக்குற காலேஜ் உனக்கு வேணுமா…?”
“அம்மா அதெல்லாம் ஒண்ணும் இல்லமா… இதுக்குப் போய் காலேஜிக்கு போகாம இருக்க முடியுமா…? அதை அப்புறம் பாக்கலாம்.. நீங்க ரெண்டு தோசை வைங்க…”
“சரி சரி எதுக்கும் பாத்து பத்திரமா இருடா மா…” என்றார்.
அவளும் தலையாட்டி விட்டு, சுடச்சுட தோசையை வாங்கி சாப்பிட்டு விட்டு சென்றாள்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
அறைக்குள் சென்ற சம்யுக்தாவிற்கு தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தாள். அவளது மனதில் ஏதேதோ எண்ணங்கள் தோன்றின. அந்த நேரத்தில் அவளது போன் ஒலித்தது. எடுத்துப் பார்க்க தீஷிதன்தான் அழைத்திருந்தான். “ஹலோ யுக்தா.”
“சொல்லுங்க.”
“யுக்தா என்ன பண்ணிட்டு இருக்க?”
“படுத்திருக்கேன்.. நீங்க என்ன இந்த டைம்ல கால் பண்ணியிருக்கிறீங்க?”
“யுக்தா கொஞ்சம் மொட்டை மாடிக்கு வர்றியா?”
“இப்பவா?”
“ஆமா, நான் அங்கதான் இருக்கேன் நீயும் வா”
“ம்ம்ம் சரி” என்றவள் எழுந்து சென்றாள்.
அங்கே நிலவைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் தீஷிதன். சம்யுக்தாவின் கொலுசு சத்தம் கேட்டதும் திரும்பினான். சம்யுக்தா புன்னகையுடன் வந்திருந்தாள். ஆனால் அந்த புன்னகையில் உண்மைத் தன்மை இல்லாததைப் பார்த்தவன் அவளது கையைப் பிடித்தான்.
“யுக்தா, என்ன மனசு ரொம்ப குழப்பமா இருக்கா?” என்றான். அவனைப் பார்த்த சம்யுக்தா, “ம்ம்ம்.. மனசு ஒரு மாதிரி இருக்குங்க. நாளைக்கு என் வாழ்க்கையில நடக்குற ஒரு சந்தோஷமான நாள், ஆனால் என்னோட அம்மா அப்பா யாருமே இல்லையேங்க.. அவங்களை கூட்டிட்டு வருவேன்னு சொன்னீங்க.”
“உனக்கு ஒரு கிப்ட் வச்சிருக்கேன். அதை தர்றதுக்குத்தான் இங்க கூப்டேன்.”
“எதுக்குங்க கிப்ட்?”
“இன்னைக்குத்தான் நாம லவ்வர்ஸ்.. நாளையில இருந்து நம்ம ஹஸ்பண்ட் அண்ட் வைஃப். நான் என்னோட காதலிக்கு தர்ற கிப்ட் இது.” என்றான். அதை வாங்கிப் பார்த்த சம்யுக்தா அதிர்ச்சி அடைந்தாள்.
“என்னங்க இது? எதுக்காக இந்த வேலை பார்த்தீங்க?”
“யுக்தா உன்னை கொடுமைப்படுத்தின பிரகாஷை விட மோசமானவங்க வித்யாவோட அம்மாவும் அப்பாவும். நிற்க இடமில்லாம இருந்த உன்னை, நடுரத்திரியில நாயை விடக் கேவலமா உன்னை அடிச்சு விரட்டினாங்க. அதுக்கு பதிலடி கொடுக்காம நான் விடமாட்டேன் யுக்தா.”
“ஏங்க அதுக்காக அவங்க பேர்ல இருக்கிற சொத்து எல்லாத்தையும் என்னோட பேர்ல மாத்தணுமாங்க? இது எப்படி நடந்திச்சு?”
“அவங்க பணம் வாங்கிருந்த விக்டர், அவனோட பேர்ல சொத்து எல்லாத்தையும் எழுதி எடுத்திருந்தான். அவன்கிட்ட பணத்தை கொடுத்திட்டு நான் உன்னோட பேர்ல வாங்கிட்டேன்.”
“இப்போ இது தேவையாங்க?”
“தேவைதான் யுக்தா கல்யாணம் முடிஞ்சதும் நீயும் நானும் சென்னை போறோம். நீ அங்க இருக்கிற கம்பனியை டேக்ஓவர் பண்ற.”
“நான் எப்பிடீங்க?”
“யுக்தா நீ கண்டிப்பா இதை பண்ணியேயாகணும். சரி ரொம்ப லேட்டாச்சு. நீ போய் தூங்கு காலையில மண்டபத்துல பார்க்கலாம்” என்றான்.
………………..………………..………………
மணிகண்டனும் லீலாவதியும் தீக்ஷிதன் அனுப்பிய காரில் ஊட்டிக்கு வந்து கொண்டிருந்தனர். விடியும் போது ஊட்டிக்கு வந்து சேர்ந்தனர். ஒரு ஹோட்டலில் காரை நிறுத்திய ட்ரைவர்,“இந்த ஹோட்டல்ல போய் ரெடியாகிட்டு வாங்க, நான் வெயிட் பண்றேன்” என்றான். அவர்களும் சரி என்று சொல்லி உள்ளே சென்று ரெடியாகினார்கள்.
பிரகாஷ் மற்றும் சீமாவும் அதே ஹோட்டலில்தான் இருந்தார்கள்.
“இந்த கல்யாணத்துக்கு வர்றதுக்கு எனக்கு விருப்பமே இல்லை” என்றாள் சீமா.
“எனக்கு மட்டும் விருப்பமா என்ன? போய் தானேயாகணும்” என்று சிடுசிடுத்தவாறு ரெடியாகினான் பிரகாஷ்.
………………..………………..………………
புகழும் நேரத்திற்கு எழுந்து ரெடியாகி விட்டு துர்க்காவை அழைக்க, அவரும் கிருபாகரனும் ரெடியாகி வந்தனர்.
“வாவ் அம்மா, அப்பா நீங்கதான் புது ஜோடி மாதிரி அழகா இருக்கிறீங்க. அதுவும் அம்மா அப்படியே மகாலக்ஷ்மி மாதிரி இருக்காங்க” என்றான்.
“ஐயோ உங்க ரெண்டு பேருக்கும் இடையில நான் வரவேயில்லை. போகலாம்” என்றான். மூவரும் மகிழ்ச்சியுடன் கல்யாண மண்டபத்திற்கு வந்தனர்.
………………..………………..………………
கல்யாண மண்டபம் அலங்காரங்களால் கண்களை கவரும் வண்ணம் இருந்தது. பெரிய பெரிய விஐபிகளின் வாகனங்கள் நிறுத்துவதற்கு தனியான ஒரு இடம் மண்டபத்தின் கீழே ஒதுக்கப்பட்டு இருந்தது. மண்டபத்தின் உள்ளே அனைவரும் அழகாக அமரும் வகையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. மேடையில் ஐயர் அக்கினி குண்டத்தின் முன்னே அமர்ந்து மந்திரங்களை சொல்லிக் கொண்டிருந்தார்.
மணமகன் அறையில் தீஷிதன் ஆணழகனாக ரெடியாகிக் கொண்டிருந்தான். அவனை அழகுபடுத்திக் கொண்டிருந்தான் விக்ராந்த்.
“அத்தான் சும்மா சொல்லக்கூடாது நீங்க பார்க்க ரொம்ப ஹேண்ட்ஸமா மேன்லியா இருக்கீங்க.”
“டேய் சும்மா கலாய்க்காத”
“நெஜமாத்தான் அத்தான். நீங்க வேணும்னா பாருங்க இன்னைக்கு சம்மு அக்கா உங்களை வைச்ச கண் வாங்காம பார்த்திட்டு இருப்பாங்க.” என்றதைக் கேட்ட தீக்ஷிதனின் முகம் வெட்கத்தில் சிவந்தது.
“அத்தான் பொண்ணுங்க வெட்கப்பட்டா அழகுன்னு தெரியும். உங்களைப் பார்த்த பிறகுதான் ஆண்கள் கூட வெட்கப்பட்டா அழகுன்னு தெரியுது.” என்று அவனை மேலும் வெட்கப்பட வைத்தான் விக்ராந்த்.
“டேய் போதும்டா,ரொம்ப ஓட்டாத.” என்று அவன் பேசிக் கொண்டு இருக்கும் போது புகழிடமிருந்து தீஷிதனுக்கு கால் வந்தது. அதே நேரத்தில் அமரேந்திரன் ஒரு வேலையாக விக்ராந்தை அழைக்க, “இதோ வந்திடுறன் அத்தான்” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றான். அவன் சென்றதும் போனை எடுத்த தீஷிதன், “சொல்லு புகழ், எங்க இருக்க? அத்தையும் மாமாவும் எங்க?”
“நீ யார் கண்லேயும் படாம நாலாம் நம்பர் அறைக்கு கூட்டிட்டு போ, கல்யாணத்துல கைப்பிடித்துக் கொடுக்க தயாராகும் போது அவங்களை கூட்டிட்டு வா” என்றான்.
“சரி” என்றவன் அவர்களை யாரும் அறியாமல் மெல்ல தீஷிதன் சொன்ன அறைக்கு அழைத்து வந்தான்.
“அம்மா, அப்பா நீங்க இங்கேயே இருங்க, நான் வந்து கூப்பிடுற வரைக்கும் வெளியே வராதீங்க”
“சரி புகழ்” என்றனர்.
பின்னர் புகழ் தீஷிதன் அறைக்கு வந்து அவனுடன் பேசிக் கொண்டு இருந்தான்.
மணமகள் அறையில் ப்யூட்டிஸனின் கைவண்ணத்தில் தேவதை போல தயாராகினாள் சம்யுக்தா. அவளை கேலி செய்து கொண்டிருந்தனர் வித்யாவும் மதுராவும்.
“அக்கா உன்னைப் பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு. இனிமே உன் வாழ்க்கையில எல்லாமே நல்லதுதான் அக்கா நடக்கும்.”
“ஆமா வித்து, அண்ணிக்கு இனிமே கஷ்டமே இல்லை. என் அண்ணா அண்ணியை உள்ளங்கைல வைச்சித் தாங்குவாங்க” என்றாள் மதுரா. இப்படியாக இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது அங்கே வந்த தமயந்தி, “என் பொண்ணு என்ன அழகு.” என்று சம்யுக்தாக்கு திருஷ்டி கழித்தார்.
“சம்மு ஐயர் உங்களை அழைச்சிட்டு வரச் சொல்றாரு.. மதுரா வித்யா ரெண்டு பேரும் சேர்ந்து சம்முவை கூட்டிட்டு வாங்க”
“சரி” என்றனர் இருவரும்.
மணமகன் அறையில் இருந்த தீஷிதனை விக்ராந்த் மற்றும் புகழ் அழைத்து வந்தனர். மணமேடைக்கு வந்த தீக்ஷிதன் பரந்தாமன் காலிலும், துர்க்கா அமரேந்திரன் காலிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினான். அவர்களும் அவனை மனதார ஆசிர்வதித்தனர்.
மணமேடையில் அமர்ந்தவன் சபைக்கு வணக்கம் சொல்லும்போது, அங்கே மணிகண்டன் லீலாவதி ஒரு பக்கமும், பிரகாஷ் சீமா ஒரு பக்கமும் அமர்ந்திருப்பதைப் பார்த்தவன் இதழ்களிலே ஒரு கேலிப் புன்னகை தோன்றியது.
பின்னர் ஐயர் கூறும் மந்திரங்களை சிரத்தையுடன் சொல்லிக் கொண்டிருந்தான். பின் ஐயர் வழமை போல, “பொண்ணை அழைச்சிட்டு வாங்க” என்று சொன்னதும், சம்யுக்தாவை அழைத்துக் கொண்டு மதுராவும் வித்யாவும் அங்கே வந்தனர். சம்யுக்தாவுடன் வரும் வித்யாவைப் பார்த்த மணிகண்டனுக்கு அவளை கொல்லும் வெறி வர எழுந்தார். லீலாவதிதான், “ஏங்க கொஞ்சம் அமைதியா இருங்க. இது கோபப்படுவதற்கான நேரம் இல்லை” என்று அவரை சமாதானப்படுத்தி வைத்திருந்தார்.
தேவதை போல அலங்கரிக்கப்பட்டு வரும் சம்யுக்தாவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் தீஷிதன். அவனைப் பார்த்த புகழ் சற்றுக் குனிந்து, “தீஷி ஹேண்ட்சீஃப் வேணுமா?” என்றான்
அவனை திரும்பிப் பார்க்காமல், “இருடா உனக்கு கல்யாணம் நடக்கும் போது பார்த்துக்கிறன்” என்றான்.
மேடைக்கு வந்த சம்யுக்தா அங்கிருந்த பரந்தாமன் தமயந்தி அமரேந்திரன் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி விட்டு தீஷிதன் அருகில் அமர்ந்தாள்.
அவள் தனக்கு அருகில் அமர்ந்ததும் தீஷிதன் அவள் புறம் சாய்ந்து, “யுக்தா ரொம்ப அழகா இருக்க” என்றான். அவள் வெட்கத்தில் குனிந்து கொண்டான்.
சபைக்கு வணக்கம் சொன்னவள் கண்களில் பட்டனர் மணிகண்டன் மற்றும் லீலாவதி. அவர்களைப் பார்த்ததும் பாசத்தில் கண்கள் கலங்கின. பின்னர் ஐயர் சொல்லும் மந்திரங்களை இருவரும் சேர்ந்து சொல்லி, அவர் கூறும் சடங்குகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது ஐயர், “கன்னிகாதானம் பண்ணணும் பொண்ணோட அப்பா அம்மா வாங்க” என்றார். அப்போது தீஷிதன் புகழைப் பார்க்க அவன் துர்க்காவையும் கிருபாகரனையும் அழைத்து வரச் சென்றான். பரந்தாமன் ஐயரிடம், “ஐயரே சம்யுக்தாவோட அம்மா அப்பாக்கு பதிலா என்னோட தங்கச்சியும் அவங்க வீட்டுக்காரரும் செய்யலாமா?” என்றார்.
இதைக் கேட்டதும் லீலாவதி அங்கிருந்து எழுந்து, “அதெப்டி சம்முவோட அம்மா அப்பா நாங்க இருக்கும் போது இவங்க செய்யணும்?” என்றார். அப்போதுதான் வித்யா அவர்களைப் பார்த்தாள்.
‘ஐயோ என்ன அம்மாவும் அப்பாவும் வந்திருக்கிறாங்க. இவங்களுக்கு எப்படி அக்காவோட கல்யாணம் தெரிஞ்சது?’ என்று யோசித்தாள்.
அப்போது வாய் திறந்தான் தீஷிதன், “நீங்க ஒண்ணும் யுக்தாவோட சொந்த அம்மா அப்பா இல்லையே.. அதுமட்டுமல்ல நீங்க அவளை வீட்டை விட்டு அனுப்பிட்டு இப்போ எந்த உரிமைல கன்னிகாதானம் பண்ண வர்றீங்க?” என்று கேட்டதும், லீலாவதிக்கு கோபம் வர, “அவளுக்கு எங்களை விட்டா யாரும் இல்லை.. அம்மா அப்பா இல்லாத அநாதைக்கு போனா போகுதுன்னு இந்த சடங்கை பண்ணி வைக்கலாம்னா நீங்க இப்படி சொல்றீங்க?” என்றார்.
“ஹலோ மேடம் ஒரு நிமிஷம். நீங்க சொல்ற மாதிரி சம்யுக்தா ஒண்ணும் அநாதை இல்லை. அவளுக்கு பெரிய குடும்பமே இருக்கு. அம்மா, அப்பா, சித்தி, சித்தப்பா, மாமானு எல்லா சொந்தமும் இருக்கு.” என்று தீஷிதன் சொல்லும் போதே மேடைக்கு துர்க்காவையும் கிருபாகரனையும் அழைத்து வந்தான் புகழ்.
“அத்தை மாமா முன்னாடி வாங்க.” என்றுதும் அவர்கள் முன்னாடி வர, அப்போதுதான் பரந்தாமன், தமயந்தி, கிருபாகரன் எல்லோரும் துர்க்காவைப் பார்த்தனர்.
“துர்க்கா…”
“அக்கா..”
“துர்க்கா நீ எப்படிமா இங்க?”
“தீஷிதான் அண்ணா எங்களை கூட்டிட்டு வந்தான்.”
“அத்தை உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்குனு சொன்னேன்ல.. அன்னைக்கு நடந்த ஆக்ஸிடெண்ட்ல நீங்க தொலைச்ச உங்க பிள்ளை இதோ இவதான், பேரு சம்யுக்தா” என்றான். இதைக் கேட்டதும் சபையே அமைதியானது.
“தீஷி நீ… நீ சொல்றது?”
“நெஜம்தான் அத்தை. யுக்தா இவங்கதான் உன்னோட அப்பா அம்மா.. இனிமே உன்னை அநாதைனு யாரும் சொல்ல முடியாது. நீ என்னோட சொந்த அத்தை பொண்ணு..”என்றான். துர்க்கா பாய்ந்து அணைத்துக் கொண்டார் சம்யுக்தாவை. அவளும் அவரை இறுக்கி அணைத்துக் கொண்டு அழுதாள்.
சில நிமிடங்களில் பரந்தாமன், “துர்க்கா முதல்ல நல்ல நேரம் முடியுறதுக்கு முன்னாடி கல்யாணம் நடக்கட்டும். மற்றதை அப்புறமா பேசிக்கலாம்” என்றார்.
“சரிங்க அண்ணா” என்றார் துர்க்கா.
பின்னர் துர்க்காவும் கிருபாகரனும் சேர்ந்து சம்யுக்தாவை தீஷிதனுக்கு கன்னிகாதானம் பண்ணி வைத்தனர். அனைவரின் ஆசிர்வாதத்துடன் தீஷிதன் சம்யுக்தா திருமணம் நல்லபடியாக நடந்தேறியது.
திருமணம் நடந்து முடிந்ததும், வந்திருந்தவர்கள் சாப்பிட சென்றனர். அவர்கள் சென்றதும் தீக்ஷிதன் மணிகண்டன், லீலாவதி, பிரகாஷ் மற்றும் சீமாவை அங்கே அழைத்தான்.
“மிஸ்டர் பிரகாஷ் உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி, நீங்க வேணாம்னு சொன்னதாலதான் எனக்கு இப்பிடி ஒரு லைஃப் பார்ட்னர் கிடைச்சிருக்காங்க.. அதே போல மிஸ்டர் மணிகண்டன் அண்ட் மிஸஸ் மணிகண்டன் உங்களுக்கு என்னோட நன்றி, நீங்க மட்டும் அன்னைக்கு நடுராத்திரி இவளை வீட்டை விட்டு அனுப்பலனா எனக்கு சம்யுக்தா கிடைச்சிருக்கமாட்டா, அவளுக்கும் அவளோட குடும்பம் கிடைச்சிருக்கமாட்டோம்” என்றான்.
“ரொம்ப பேசாதீங்க மிஸ்டர். இவளை கல்யாணம் பண்ணினதே வேஸ்ட். இவளால உங்களுக்கு ஒரு குழந்தை பெத்ததுக் குடுக்க முடியாது. அது தெரியுமா உங்களுக்கு?” என்று கேட்டார் லீலாவதி.
இதைக் கேட்ட சம்யுக்தாவிற்கு அழுகை வந்தது. அவளது கையை இறுக்கிப் பிடித்த தீஷிதன் புகழைப் பார்க்க, அவன் ஒரு ரிப்போர்ட்டை தீஷிதனிடம் கொடுத்தான். அதை வாங்கியவன், “பிரகாஷ் நீ எல்லாம் மனுஷ ஜென்மமே கிடையாது. உனக்கு சீமாவைத்தான் பிடிச்சிருக்குனா அவளையே கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதானே. இவளை எதுக்கு கல்யாணம் பண்ணி இவளோட வாழ்க்கையை அழிச்ச? என்ன சொன்ன சம்யுக்தாவால குழந்தை பெத்துக்க முடியாதுனுதானே டைவர்ஸ் பண்ண? நீ சொல்றத யுக்தா நம்பலாம் மற்றவங்க யாரு வேணும்னாலும் நம்பலாம். ஆனால் நான் நம்ம மாட்டேன். இதோ இந்த ரிப்போர்ட்ல என்ன இருக்கு தெரியுமா? யுக்தாக்கு தாயாகுற அத்தனை தகுதியும் இருக்குனு சொல்றாங்க” என்றான்.
இதை எதிர்பார்க்காத பிரகாஷ் அதிர்ச்சி அடைந்தாலும், “ என்ன சார் இவளை மற்றவங்க திட்டுறதுல இருந்து காப்பாத்த பொய் ரிப்போர்ட் ரெடி பண்ணியிருக்கிறீங்களா?”
“மிஸ்டர் பிரகாஷ் இதுக்கு மேல எங்க வழியில குறுக்க வந்தீங்க.. அப்புறம் இந்த தீஷிதனோட இன்னொரு முகத்தை பார்ப்பீங்க.. பொறக்க போற இந்த குழந்தைக்காவது நல்ல அப்பாவா இருங்க” என்றான்.
தீஷிதன் சொன்னதை கேட்ட சம்யுக்தா தனது கண்களை துடைத்து விட்டு பிரகாஷ் முன்னால் வந்தவள், அவனது கன்னத்தில் ஓங்கி அறைந்தாள். வேறு எதுவும் பேசாமல் தீஷிதன் அருகில் வந்து நின்று கொண்டாள். பிரகாஷிற்கோ சீமாவுக்கோ எதுவும் சொல்ல முடியாமல் நின்றனர்.
“இதுக்கு மேல நீங்க இங்க இருக்கவே கூடாது.. கெட் லாஸ்ட்” என்றான் தீஷிதன். அவர்களும் எதுவும் பேசாமல் அங்கிருந்து செல்ல, தீஷிதன் அடுத்து மணிகண்டன், லீலாவதி பக்கம் வந்தான்.
“தாய்னா யாருனு தெரியுமா? பிள்ளை ஒரு கஷ்டம்னா தன்னோட உயிரைக் கூட கொடுப்பாங்க. ஆனால் நீங்க எல்லாம் தாயா இல்லை ஒரு மனுஷனா இருக்கவும் தகுதி இல்லாதவங்க. ஒரு பொண்ணு மனசு உடைஞ்சி உங்ககிட்ட வரும்போது அவளுக்கு ஆதரவா இல்லைன்னாலும் மேலும் கஷ்டப்படுத்தாம இருந்திருக்கலாம்.. நீங்க என்ன பண்ணீங்க அவளை நடுரத்திரியில போட்டிருக்க ட்ரெஸ்ஸோட வீட்டை விட்டு அனுப்பியிருக்கிறீங்க.. அதனாலதான் இப்போ நீங்க இருக்க இடம் இல்லாம கஷ்டப்படுறீங்க. இதுதான் நான் உங்களுக்கு குடுக்கிற தண்டனை” என்றான்.
“ஏய் நீ எங்களை பற்றி பேசுறியா? நீ இவகூட குடும்பம் நடத்து இல்லை கும்மியடி எங்களுக்கு என்ன வந்துது. என் பொண்ணு வித்யாவை கூட்டிட்டு நாங்க இங்க இருந்து போயிடுறம்” என்ற லீலாவதி வித்யா அருகதை வர, வித்யா விக்ராந்த் கையை பிடித்துக் கொண்டு அவருடன் வர மறுத்தாள்.
“இல்லை நான் உங்ககூட வர மாட்டேன்.”
“ஏய் யாருடி இவன். இவன் கையை பிடிச்சிட்டு நிற்கிற வா போகலாம். உன்னால்தான் இப்போ சொத்து எல்லாம் இழந்திட்டு நடுரோட்டில நிற்கிறம். வா போலாம்” என்றார் லீலாவதி.
“நான் வரமாட்டேன்.” என்றவளை அடிக்க கை ஓங்கினார் லீலாவதி. ஓங்கிய அவரின் கையைப் பிடித்து நிறுத்தினான் விக்ராந்த்.
“ஹலோ மேடம், அதுதான் அவ வரலனு சொல்றால்ல அப்புறம் என்ன, அவளை விட்டுட்டு நீங்க இங்க இருந்து கிளம்பலாம்.”
“என்ன என்கேஜ்மென்டா? யாருக்கு யாரு மாப்ள? உனக்கு என் பொண்ணை கல்யாணம் பண்ணி தர முடியாது”
“அதை நீங்க சொல்ல முடியாது அத்தை. என்னோட கல்யாணம் வேணாம்னு வித்யாதான் சொல்லணும்”
“வித்யா சொல்லு இவன் உனக்கு வேணாம்.. நாங்க நல்ல மாப்ளையா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறன் வா என்கூட” என்றார்.
“போதும் நிறுத்துங்க.. எனக்கு நீங்க கல்யாணம் பண்ணி வைக்க போறீங்களா? இப்போ உங்கிட்ட ஒரு சொத்தும் இல்லை. உங்களுக்கு பணம் வேணும்னா என்னை யாருக்கும் விக்ககக் கூட நீங்க தயங்க மாட்டீங்க.. உங்களோட வர்றது எனக்கு பாதுகாப்பில்ல” என்றவள் தீஷிதனிடம் வந்து, “மாமா என்னை அவங்க கூட அனுப்பாதீங்க, சொத்துக்காக அந்த கேடுகெட்ட விக்டர்க்கு என்னை கல்யாணம் பண்ணி வைக்கப் பார்த்தவங்க, இப்போ பணத்துக்காக என்னை யாருக்கும் வித்தாலும் விப்பாங்க.. நான் அவங்க கூட போகல மாமா” என்றாள். அவளது தலையை வருடிக் கொடுத்த தீஷிதன்.
“எந்த பிள்ளையும் பாதுகாப்பை உணர்வது பெத்தவங்ககிட்டதான். ஆனால் எப்போ அந்த பெத்தவங்ககிட்டேயே பாதுகாப்பு இல்லைனு இவ சொன்னாளோ அப்பவே நீங்க தரம் குறைஞ்சி போயிட்டீங்க.. இதுக்கு அப்புறம் உங்களுக்கு இங்க இடம் இல்லை. நீங்க கிளம்பலாம்” என்றான்.
அவனை எதிர்த்து பேச முடியாமல் அங்கிருந்து வெளியே செல்ல முயன்றவர்களை தடுத்து நிறுத்தியது ஒரு குரல்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
தீஷிதன் டாக்டரிடம் சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்தான். தீக்ஷிதனின் கார் சத்தம் கேட்டதுமே அறைக்குள் இருந்த சம்யுக்தா வேகவேகமாக கீழே ஓடி வந்தாள். பரந்தாமனும் தமயந்தியும் சம்யுக்தாவைப் பார்த்து சிரித்தனர். ஆனால் சம்யுக்தா அதைக் கவனிக்காமல் வாசலுக்கு ஓடினாள். அதே நேரத்தில் உள்ளே வந்த தீக்ஷிதன் சம்யுக்தாவை அணைத்துக் கொண்டான்.
“அதெல்லாம் இப்போ சொல்ல மாட்டேன்.. டைம் வரும் போது சொல்றன். அத்தை எனக்கு பசிக்குது.. சாப்பாடு எடுத்து வைங்க நான் ஃப்ரெஷாகிட்டு வர்றேன். யுக்தா அதுக்கு முன்னாடி எனக்கு ஒரு காபி கொண்டு வா.” என்றவன் உள்ளே செல்ல, சம்யுக்தா காபி போடச் சென்றாள்.
“தமயந்தி தீஷியோட நடவடிக்கை சரியில்லையே.. எனக்கு ஏதோ சந்தேகமா இருக்கு.”
“என்ன அண்ணா இப்படி சொல்றீங்க?”
“தீஷிதன் ஏதோ பண்றான்னு மட்டும் புரியுது பாக்கலாம்.”
“அவன் எது செய்தாலும் அது நல்லதாகவே இருக்கும் அண்ணா. நீங்க எதையும் போட்டு குழப்பிக்க வேணாம். நான் போய் அவனுக்கு சாப்பாட்டை ரெடி பண்றன்.”
“சரிமா..” என்றவர் அமரேந்திரனுடன் வெளியே இருந்த வேலையைப் பார்க்கச் சென்றார்.
அறைக்கு வந்த தீக்ஷிதன் ஃப்ரெஷாகிவிட்டு வந்து பால்கனியில் நின்றான். அப்போது அவனுக்கு கொலுசு சத்தம் கேட்டது. அதன் ஓசைக்கு சொந்தக்காரியான சம்யுக்தா கதவை திறந்து உள்ளே வந்தாள்.
அவளும் காபி எடுத்துக் கொண்டு வந்து அவனிடம் கொடுக்க, அதை வாங்கி குடித்து விட்டு, அங்கே நின்றிருந்த சம்யுக்தாவை தனது கையணைப்பில் கொண்டு வந்தான். தீக்ஷிதனின் ஒரு கரம் அவளது இடையை இறுகப் பற்றியது. மறு கையோ அவளது நெற்றியில் படர்ந்த முடியை ஒதுக்கியது. சம்யுக்தா கண்களை மூடிக் கொண்டு நின்றாள். அவளது முகத்தைப் பார்த்த தீக்ஷிதன், “யுக்தா..” என்றான்.
“ம்ம்ம்..”
“யுக்தா என்ன பயந்துட்டயா?”
“ம்ம்ம்..” என்றவள் கண்களைத் திறக்க, அவள் கண்கள் குளமாகின.
“என்னாச்சிமா? எதுக்காக இந்த அழுகை? நான் தான் சொல்லியிருக்கேன்ல இப்படி நீ அழவே கூடாதுனு..”
“நான் ரொம்ப பயந்துட்டேன்.. நைட் போனீங்க.. ஈவ்னிங்காச்சு லேட்டாகவும் பயந்துட்டேன்.. உங்களுக்கு அந்த பிரகாஷால ஏதாவது நடந்திடுமோனு பயந்துட்டே இருந்தேன்..”
“என்னை அவனால ஒண்ணும் பண்ண முடியாது.. அப்பிடி எனக்கு எதுவும் நடந்தாலும் உன்னை இங்க இருக்கிற எல்லோரும் நல்லா பாத்துக்குவாங்க..” என்று தீஷிதன் சொல்லி முடிக்கும் முன்பே அவனது வாயில் தனது கையை வைத்து அவனின் பேச்சை நிறுத்திய சம்யுக்தா, “உங்களுக்கு ஏதாவது நடந்தா, சத்தியமா சொல்றேன் அதுக்கு அப்புறம் நான் உயிரோடவே இருக்க மாட்டேன். நீங்க இல்லாம என்னால இருக்க முடியாதுங்க. அதை மட்டும் மறந்திடாதீங்க.” என்றாள்.
உடனே தீஷிதன், “யுக்தா இப்போ நீ என்ன சொன்ன?” என்றான் ஒருவிதமான பதட்டத்துடன். அவனைப் பார்த்தவள், “அவனிடம் தான் சொன்னதை மறுபடியும் சொன்னாள். நீங்க இல்லன்னா என்னால இருக்க முடியாதுங்க.” என்று அவள் மறுபடியும் சொன்னதைக் கேட்ட தீக்ஷிதன் அவளை இழுத்து அணைத்துக் கொண்டான். அவனது அணைப்பின் இறுக்கம் அதிகமாகியது.
“யுக்தா அப்போ உனக்கு என்ன புடிச்சிருக்குன்னு தானே அர்த்தம். என்னை மனப்பூர்வமாத்தானே கல்யாணம் பண்ணிக்கிற. உன்னோட வாயிலிருந்து வந்த இந்த வார்த்தை… இந்த வார்த்தை மட்டும் போதும் எனக்கு. என்ன நடந்தாலும் அதை சமாளிக்க என்னால முடியும்.”
“ஆரம்பத்துல நீங்க எல்லாம் சொல்றீங்கனுதான் நான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன். ஆனா அதுக்கு அப்புறம் நீங்க எப்படி என் மனசுக்குள்ள வந்தீங்க, உங்களை எப்படி எனக்கு பிடிச்சதுனு எனக்கு தெரியாதுங்க.. ஆனா, இப்போ இந்த நிமிஷம் சொல்றேன், நீங்க இல்லன்னா என்னால இருக்க முடியாது. அது மட்டும் நிஜம். ப்ளீஸ் என்னை விட்டு எப்பவுமே போகமாட்டீங்க தானே” என்று அவனைப் பார்த்து ஏக்கமாகக் கேட்டாள்.
“ஏய் உன்னை விடுறதுக்காடி நான் இவ்வளவு பாடுபடுறேன். உன்னை எப்பவுமே இப்படியே என் கைக்குள்ளேயே வச்சிக்குவேன். யுக்தா ஐ லவ் யூ” என்று அவள் நெற்றியில் முத்தமிட்டான்.
பதிலுக்கு சம்யுக்தாவும், “ஐ லவ் யூ மோர் தான் யூ” என்றாள் சிரிப்புடன்.
“ஏய் கேடி…”
“சரிங்க நான் ஒன்னு கேட்கட்டுமா, நீங்க எங்க போனீங்க?”
“கண்டிப்பா சொல்லுவேன். உன்கிட்ட சொல்லாம வேற யார் கிட்ட சொல்லப் போறேன். நாளைக்கு நான் எங்க போனேன் எதுக்கு போனேன்னு எல்லாமே உனக்கும் மற்றவங்களுக்கும் தெரிய வரும். நீ ஒன்னும் வொரி பண்ணாத.”
“சரிங்க வாங்க சாப்பிடலாம்” என்று கீழே அவனை அழைத்துக் கொண்டு வர, தமயந்தி சாப்பாடு எடுத்து வைத்தார்.
சிறிது நேரத்தின் பின்னர் நலங்கு, மெஹந்தி பங்ஷனுக்கான ஏற்பாடுகள் வீட்டில் ஆரம்பித்தன. வண்ண வண்ண விளக்குகளால் அந்த மாளிகையே ஜொலித்தது. வரும் விருந்தினர்கள் அமர்வதற்கான ஏற்பாடுகள் தோட்டத்தில் செய்யப்பட்டிருந்தன. டிஜே ஒரு பக்கம், சாப்பாடு ஒரு பக்கம், மெஹந்தி ஒரு பக்கம் என்று அனைத்தும் நடந்து கொண்டிருந்தது.
சம்யுக்தா அருகே வித்யாவும் மதுராவும் நின்று கொண்டு அவளை கேலி செய்து கொண்டிருந்தார்கள். பியூட்டிஷியன் பெண்ணிடம் சம்யுக்தா தான் வரைந்த ஒரு டிசைனை காட்டி இதை போட்டு விட முடியுமா என்று கேட்க, அவளும் சிரித்துக் கொண்டே, “சரிங்க மேடம்” என்றாள்.
விக்ராந்த் தீஷிதனுடன் சேர்ந்து கொண்டு அங்கு நடைபெற்ற வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தான். பிஸியாக இருந்தாலும் அவன் கண்களை அடிக்கடி வித்யாவிடம் சென்று வந்தது. வித்யாவும் அடிக்கடி விக்ராந்தை பார்த்துக் கொண்டிருந்தாள். கொஞ்ச நேரத்தில் மதுரா தனது போனை எடுத்து புகழுக்கு அழைத்தாள்.
புகழ் தனது வீட்டில், கிருபாகரன் மற்றும் துர்க்காவுடன் சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அப்போது போன் அடிக்க எடுத்துப் பார்த்த புகழ், போனை எடுக்காமல் வைத்து விட்டான். துர்க்கா, “போன் எடுக்கல புகழ்” என்றார்.
“இல்லம்மா மதுரா தான் கால் பண்றா. இன்னைக்கு தீஷி வீட்டில் நலங்கு ஃபங்ஷனும் மெஹந்தி பங்ஷனும் இருக்கு. நான் இன்னும் போகல இல்ல அதான் கால் பண்றா.”
“அதுக்கு என்னப்பா நீ போயிட்டு வரவேண்டியது தானே.”
“இல்ல அம்மா உங்க ரெண்டு பேரையும் தனியா விட்டுட்டு எப்படி போறது?”
“ஐயோ பரவால்ல புகழ் நாங்க ரெண்டு பேரும் எங்கேயும் போக மாட்டோம். வீட்லதான் இருப்போம் பயப்படாம நீ போய் என்ஜாய் பண்ணிட்டு வா.”
“இல்லம்மா நான் உங்க கூடவே இருக்கிறேன். நான் அப்புறமா மதுராவை சமாதானப்படுத்திக்குவேன்.”
“இல்ல புகழ் இதெல்லாம் எப்போவாவது வர்றது தானே. நீ போயிட்டு வா” என்று அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கும்போது, இப்போது புகழுக்கு தீஷிதன் கால் பண்ணினான்.
“சொல்லு தீஷி” என்றான் போனை எடுத்த புகழ்.
“என்ன பண்ணிட்டு இருக்க புகழ்?”
“இங்க எல்லாரும் சாப்பிட்டுட்டு இருக்கோம்.”
“அப்படியா சரி நீ வரலையா இங்க?”
“நான் எப்படி தீஷி வர்றது? அம்மா அப்பா இருக்காங்களே அவங்கள பார்த்துக்கனுமேடா”
“அதுவும் சரிதான் ஆனா புகழ், இங்க உன்னை எல்லாரும் தேடறாங்க. யுக்தா வேற புகழ் அண்ணா வரலையா? என்று கேட்டுட்டு இருக்கா நீ ஒன்னு பண்ணு அத்தையையும் மாமாவையும் நீ இங்க கூட்டிட்டு வர்றியா?” என்றான்.
“என்ன சொல்ற தீஷி?” என்றான்.
அதற்கு தீஷிதன், “அவங்க வந்தா நல்லா இருக்கும். ஆனா என்ன பண்றது எனக்கு அவங்க இங்க இருக்கணும் போல இருக்குடா” என்றான்.
“தீஷி புரிஞ்சிதான் பேசுறயா? ஒன்னும் பிரச்சனை இல்ல நாளைக்கு அவங்க அங்க வரட்டும். இன்னைக்கு வந்து ஏதாவது பிரச்சினை வந்தா எல்லாமே எதிர்பாக்காத மாதிரியாயிடும் தீஷி” என்றான்.
“தீக்ஷி புகழ் இரண்டு பேரும் எதுக்கு இப்படி டென்ஷனாகுறீங்க? எங்களுக்கு எதுவும் பிரச்சனை இல்லை. நாங்க இங்க இருக்கோம் புகழ் அங்க வந்துட்டு வரட்டுமே. இதுல என்ன இருக்கு, அவனும் அங்க இருக்கத் தானே வேணும். புகழ் நீ போ நாங்க இங்க பத்திரமா இருப்போம். நாங்க காலையில வரோம்” என்றார் துர்க்கா.
“அத்தை நீங்களும் மாமாவும் ஏதும் நினைச்சிக்காதீங்க. தப்பா எடுத்துக்காதீங்க அத்தை ப்ளீஸ்” என்றான்.
“ஐயோ தீஷி, இதுல என்ன தப்பா நினைக்க இருக்கு? எங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. உன்னோட நிலைமை எங்களுக்கு புரியுது சரியா? நாளைக்கு காலைல உங்களை இங்க கூட்டிட்டு வர புகழையும் காரையும் அனுப்பறேன். நீங்க புகழ் கூடவே வந்துடுங்க” என்றான் தீஷிதன்.
“சரி தீஷி” என்றவர் போனை வைத்து புகழிடம் திரும்பி, “நீ சாப்பிட்டு போயிட்டு வாப்பா” என்றார்.
அப்போது கிருபாகரனும் புகழிடம் விளையாட்டாக, “ஆமா ஆமா சீக்கிரமா கிளம்பு, எங்களுக்கும் கொஞ்சம் பிரைவசி வேணுமில்ல புகழ்” என்றதும் அவரைப் பார்த்து பொய்யாக அதிர்ச்சி அடைந்தவன், “அடப்பாவி அப்பா அப்போ நீங்க ரெண்டு பேரும் பிளான் பண்ணி தான் என்னை அனுப்புறீங்களா?” என்றதும் துர்க்கா, “ஐயோ நீங்க வேற ஏங்க என் மானத்த வாங்குறீங்க?” என்று தலையில் அடித்துக் கொண்டார்.
புகழ் சாப்பிட்டு முடித்துவிட்டு அவர்களிடம் சொல்லிவிட்டு தீக்ஷிதன் வீட்டுக்குச் சென்றான்.
ஆட்டம் பாட்டம் என்று அங்கே தீஷிதன் வீட்டில் மகிழ்ச்சி மட்டுமே குடி கொண்டிருந்தது. புகழும் வந்துவிட தீஷிதன், புகழ், விக்ராந்த் மூவரும் நன்றாக என்ஜாய் பண்ண ஆரம்பித்தனர். ஸ்டேஜில் விக்ராந்தும் வித்யாவும் ஒரு பக்கமாக ஆட, மதுராவும் புகழும் இன்னொரு பக்கம் ஆடினார்கள். தீக்ஷிதன் சம்யுக்தா அருகே உட்கார்ந்து இருந்தான்.
“அக்கா நீயும் வா” என்று வித்யா அவளை அழைக்க, “இல்ல நான் வரல, நீங்க என்ஜாய் பண்ணுங்க” என்றாள்.
“அட வாக்கா” என்று அவளையும் பிடித்து இழுத்தார்கள் வித்யாவும் மதுராவும். அப்போது அவளுக்கு துணைக்கு வந்தான் தீக்ஷிதன்.
“யுக்தா வா என்கூட” என்றவன் அவள் கையைப் பிடித்து ஸ்டேஜிக்கு அழைத்துச் சென்றான். மெல்ல மெல்ல அவனுக்கு ஈடு கொடுத்து ஆட ஆரம்பித்தாள் சம்யுக்தா.
அங்கே வந்திருந்தவர்கள் எல்லோரும் கைதட்டி தங்கள் மகிழ்ச்சியை தெரியப்படுத்தினார்கள். இப்படியாக நலங்கு ஃபங்ஷன் மெஹந்தி பங்க்ஷனும் இனிதே நடைபெற்று முடிய, புகழ் அவர்களிடம் சொல்லிவிட்டு வீட்டுக்கு புறப்பட்டான்.
“சரி சரி சீக்கிரமா நீங்க எல்லாம் போய் தூங்குங்க. நாளைக்கு நேரத்துக்கு எந்திரிக்கணும்ல. இப்ப தூங்கினால் தான் காலையில முகம் ஃப்ரெஷ்ஷா இருக்கும்” என்று ஹாலில் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருக்கும் சிறுசுகளை அனுப்பி வைத்தார் தமயந்தி.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊