வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 11

4.9
(22)

வாழ்வு : 11

தீக்ஷிதன் சம்யுக்தாவை அண்ணி என்று மதுரா அழைப்பதற்கு சம்மதம் சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டான். அவன் என்ன சொல்லி விட்டுப் போனான் என்று யோசனையில் இருந்த சம்யுக்தாவிடம், “ஆரத்தி எடுமா.. மது உள்ளே போகட்டும்..” என்று பரந்தாமன் சொல்ல, அவளும் சரி என்று தலையை மேலும் கீழுமாக ஆட்டிவிட்டு மதுராவிற்கு மகிழ்வோடு ஆரத்தி எடுத்து திலகம் இட்டு வரவேற்றாள். 

“தேங்க்ஸ் அண்ணி..” என்று அவள் சம்யுக்தாவின் கன்னத்தைப் பிடித்து கிள்ளிவிட்டு உள்ளே குதித்துக் கொண்டு உள்ளே ஓடினாள் சென்றாள். ஆரத்தியை வாசலில் கொட்டி விட்டு உள்ளே வந்த சம்யுக்தா தீஷிதனிடம் பேச வேண்டும் என்று நினைத்து அவனைத் தேடினாள். அவன் எங்கே இங்கே இருந்தான். அவன் எப்போதோ அவனின் அறைக்குள் சென்றிருந்தான். 

‘என்ன இது சார் வெளியில ஏதோ சொன்னாரு இப்போ வந்து அவர்கிட்ட கேட்கலாம்னா இந்த சார் ரூமுக்கு போய்ட்டாரு போலயே இப்ப என்ன பண்றது..’ என்று புடவை முந்தானையில் முடிச்சு போட்டுக் கொண்டு இருந்தாள் சம்யுக்தா. 

அவளிடம் வந்த பரந்தாமன், “என்னம்மா ரொம்ப யோசிக்கிற மாதிரி இருக்கு?” என்று எதுவும் தெரியாத மாதிரி கேட்க, சம்யுக்தா அவரைப் பார்த்து, “சார் எதுக்கு தீஷிதன் சார் அப்படி சொல்லிட்டு போனாரு?”

“மது எதுக்கு என்னை அண்ணி என்று கூப்பிடனும்?” 

“என்னைக் கேட்டா எனக்கு எப்படிம்மா தெரியும்? நீ அவன்கிட்ட தான் அதைக் கேக்கணும்.. நான் எதுவும் சொல்லலையே அவன் தானே சொன்னான்..” என்று அங்கிருந்து நழுவப் பார்த்தார். ஆனால் சம்யுக்தா விடுவாள், “இங்க பாருங்க சார்.. நான் இங்க நிம்மதியா இருந்துட்டு இருக்கேன்.. அதுல ஏதாவது குழப்பம் வந்துச்சுன்னா சத்தியமா சொல்றேன் இங்க இருந்து நான் யார்கிட்டேயும் சொல்லாம போயிடுவேன்.. அப்புறம் நீங்க எப்படி தேடினாலும் நான் கிடைக்கவே மாட்டேன்..” என்றாள் மிகவும் உறுதியான குரலில். அந்தக் குரல் பரந்தாமனை அசைத்துப் பார்த்தது. “என்ன சம்யுக்தா எதுக்குமா இப்படி பேசுற.? இப்போ உனக்கு இந்த வீட்ல என்னாச்சு? உன் நிம்மதிக்கு அப்படி என்ன பங்கம் வந்துச்சு?”

“சார் நான் ஒன்னும் சின்னக் குழந்தை கிடையாது.. நான் வாழ்க்கையில ரொம்பவே அடிபட்டு இருக்கேன்.. அதனால இப்ப யாரு என்ன பேசினாலும் அவங்க எந்த மீனிங்ல பேசுறாங்கனு என்னால புரிஞ்சுக்க முடியும்.. சார் தயவு செய்து உங்க பையன் கிட்ட சொல்லுங்க சார்.. அப்படி எதுவும் பேச வேண்டாம்னு..”

“இங்க பாரு சம்யுக்தா நீ இங்க மூணு மாசமா இருக்க.. நீயும் தீஷிய பார்த்துகிட்டு தானே இருக்க.. அவன் உன்னோட நிம்மதியை கெடுக்கிற மாதிரி எப்பவாவது நடந்துக்கிட்டானா? இல்ல உன்கிட்ட தான் தப்பா நடந்துக்கிட்டானா இல்ல இல்ல.. இப்போ ஏதோ தங்கச்சி ஆசைப்படுறான்னு சொல்லி இருப்பான் நீ நினைக்கிற மாதிரி ஒன்னும் இல்லம்மா.. நீ ஏதுவும் யோசிக்காத..” என்று அவளை சமாதானப்படுத்தும் விதமாக கூறினார். 

“சரிங்க சார்.. நான் நினைக்கிற மாதிரி எதுவும் இல்லைனா எனக்கும் ரொம்ப சந்தோஷம் தான்.. சரி நான் போய் மதுவை பாத்துட்டு வரேன்..” என்ற அவள் மதுராவின் அறைக்குச் சென்றாள்.

சம்யுக்தா அங்கிருந்த நகர்ந்ததும் பரந்தாமன் உதடுகளுக்குள் சிரித்துக் கொண்டார். ‘சம்மு நீ இன்னும் தீஷியை சரியா புரிஞ்சுக்கல.. ஆனா எனக்கு அவனோட ஒவ்வொரு நகர்வும் எப்படி இருக்கும்னு தெரியும்.. எப்படியோ நல்லது நடந்தா சரி..’ என்று தனக்குள் சிரித்துக் கொண்டார். 

…………………………………………………. 

வித்யாவிற்கு அந்த பிரகாஷ்ஷை ஏதாவது ஒரு வழி பண்ண வேண்டும் என்ற வெறி இருந்தாலும் தனது அன்பான அக்காவை முதலில் கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்தாள். சம்யுக்தாவை கண்டுபிடித்த பின்னர் பிரகாஷிற்கு ஒரு முடிவு கட்ட முடிவெடுத்த வித்யா, சம்யுக்தாவைப் பற்றி தேட ஆரம்பிக்க தனது நண்பர்களின் உதவியை பெற நினைத்தாள். அதனால் அங்கிருக்கும் தனது நண்பர்களுக்கு அழைத்து சம்யுக்தா காணாமல் போய் விட்டதாக கூறி அவளை கண்டுபிடிக்க உதவி செய்யும்படி கேட்க, அவளின் நண்பர்களும் அவளுக்கு உதவுவதாக கூறினார்கள். 

…………………………………………………. 

தனது அறைக்குள் வந்த மதுரா, வித்யாவிற்கு அழைக்கலாம் என்று போனை எடுக்க சரியான நேரத்தில் வந்து கதவைத் தட்டினாள் சம்யுக்தா. கதவு தட்டும் சத்தம் கேட்டு, “யாரு?” என்று உள்ளிருந்து குரல் கொடுத்தால் மதுரா. 

வெளியே இருந்து, “மது நான் தான்..” என்ற சம்யுக்தாவின் குரல் கேட்டது. “ஐஐஐ அண்ணி உள்ள வாங்க.. நான் கதவை லாக் பண்ணல..” என்றாள். அவளின் அண்ணி என்ற அழைப்பு சம்யுக்தாவிற்கு கடுப்பாக்கினாலும் நீண்ட நாட்களின் பின் வீட்டுக்கு வந்த அவளிடம் மன நோகும்படி எதுவும் பேசக்கூடாது என்று பொறுமை காத்தாள். கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த சம்யுக்தா, “அப்புறம் மது எப்படி இருக்க? இனிமே என்ன பண்ணலாம்னு இருக்க?” என்று கேட்க மதுராவும், “அண்ணி சூப்பரா இருக்கிறேன்.. ஆனா என்னோட ஃப்ரெண்ட்டை ரொம்ப மிஸ் பண்ணுவேன் அண்ணி.. இத்தனை நாள் அவ கூட ரொம்ப ஜாலியா இருந்தேன்.. இனிமே அவளும் பிஸி ஆயிடுவா நானும் பிஸி ஆயிடுவேன்.. என்னோட அண்ணன் இருக்காரே அவரு எப்பவோ சொல்லிட்டாரு.. நான் காலேஜ் முடிஞ்சு வந்ததும் கம்பெனில ஒரு பொறுப்பை எடுத்துக்கணும்னு.. நான் கொஞ்ச நாள் வீட்ல ஃப்ரீயா ரிலாக்ஸா இருக்கணும்னு நினைக்கிறேன்.. பாக்கலாம் அண்ணன்கிட்ட அப்புறமாதான் பேசி பாக்கணும்..” என்று அங்கலாய்த்தவளை பார்த்த சம்யுக்தாவிற்கு சிரிப்பு வந்தது.  

“அண்ணி என்ன சிரிப்பா? இங்க பாருங்க நானாவது அண்ணன் கிட்ட இருந்து எஸ்கேப் ஆயிடுவேன்.. ஆனா நீங்க எஸ்கேப் ஆகவே முடியாது..”

“ஏன் நான் எஸ்கேப்பாக முடியாது? அதெல்லாம் நான் எஸ்கேப் ஆயிடுவேன்..” என்று சவால்விட்டாள் சம்யுக்தா. 

“ஐயோ அண்ணி.. நான் உங்களை அண்ணி.. அண்ணி.. என்று கூப்பிடுவது மரியாதைக்காக மட்டும் இல்ல.. என் அண்ணனோட மனசு புரிஞ்சதால தான்.. இன்னைக்கு வந்த எனக்கே புரிஞ்சுது மூணு மாசமா இங்கேயே இருக்கிற உங்களுக்கு புரியலையா?”

“மது நீ என்ன சொல்ற? எனக்கு ஒன்னும் அப்படி புரியலையே.. சார் என்கூட பேசவே மாட்டாங்க.. எல்லாரையும் புரிஞ்சிக்கிற என்னால ஒருவேளை அவரை புரிஞ்சிக்க முடியலையா?” என்று பதட்டமானாள் சம்யுக்தா. 

அவளின் பதட்டத்தைப் பார்த்த மதுரா, “அண்ணி இப்ப எதுக்கு பதட்டப்படுறீங்க?”

“பதட்டப்படாமல் என்ன மது பண்ண சொல்ற? நீ இப்ப வந்து என்ன ரொம்ப குழப்புற..”

“அண்ணி நான் உங்கள விட ரொம்ப சின்னவ தான்.. ஆனா இந்த அனுபவத்துல உங்களை விட நான் பெரியவ” என்றாள். 

“ஏய் மது என்ன சொல்ற நீ?”

“ஆமா அண்ணி.. நான் ஆல்ரெடி கமிட்டட்.. அண்ணி யார் கிட்டயும் சொல்லிடாதீங்க ப்ளீஸ்..” 

“என்னது நீ கமிட்டடா? இங்க பாரு மது இப்படி ஒரு அண்ணனை வச்சுக்கிட்டா நீ கமிட்டட்னு சொல்ற? தீஷி சார் மட்டும் இதைக் கேட்டாரு அப்புறம் அந்தப் பையன் ரொம்ப பாவம்..” என்ற சம்யுக்தாவிடம், “அண்ணி ஏன் ஆளு யாருக்கும் பயப்பட மாட்டாரு.. அண்ணனுக்கு கொஞ்சம் லைட்டா பயப்படுவாரு.. ஆனா என் அண்ணனுக்கு நான் யாரை லவ் பண்றேன்னு தெரிஞ்ச உடனே கல்யாணம் பண்ணி வச்சிடுவாரு தெரியுமா?” 

“அப்படினா மது நீ லவ் பண்ற ஆளு யாருனு சொல்லு மது.. நானும் தெரிஞ்சுக்கிறேன்..” என்று ஆர்வமாக மதுவின் அறைக்குள் போடப்பட்டிருந்த சோபாவில் ஏறி அமர்ந்து அவளிடம் கேட்டாள். 

அவள் கேட்டதும் மதுராவிற்கு வெட்கம் எட்டிப் பார்த்தது. “ஐயோ அண்ணி, நான் எப்படி சொல்றது? எனக்கு வெக்க வெக்கமா வருதே..” என்றாள். 

அவளை கேலி செய்த சம்யுக்தா “பாருடா.. உனக்கு வெக்கம் எல்லாம் வருமா மது?” என்று அவளின் காலை வாரினால் சம்யுக்தா. “அண்ணி என்ன என்கிட்டயே லந்தா? எனக்கும் டைம் வரும்ல.. அப்போ உங்களை பாத்துக்கிறன்..”

“அத அப்புறம் பாத்துக்கலாம்.. இப்ப உங்க லவ் ஸ்டோரிய சொல்லு..” என்று ஆவலாய் அவளின் கதையைக் கேட்பதற்கு ஆவலாய் இருந்தாள் சம்யுக்தா.

படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊

உங்கள் அன்புத்தோழி 

திவ்யசதுர்ஷி💙

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 22

No votes so far! Be the first to rate this post.

1 thought on “வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 11”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!