Home Novelsவாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா..!வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 15

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 15

by Thivya Sathurshi
4.7
(36)

வாழ்வு : 15

புகழ் தீஷிதனுடன் பேசிக்கொண்டு வரும்போது புகழை ஒருமாதிரி பார்த்த தீக்ஷிதன், “நானாவது இப்பவாவது சொன்னேன் ஆனா நீ என்கிட்ட சொல்லவே இல்லையே புகழ்..” என்றான் ஒரு மாதிரியான குரலில். தீஷிதன் இப்படிக் கேட்டதும் புகழின் முகத்தில் ஒரு பதட்டம் தொற்றிக் கொண்டது.  

“தீஷி நீ என்ன சொல்ற?” என்று சற்றுத் தடுமாறியபடி கேட்டான். அவனின் தோளைத் தட்டிய தீஷிதன், “புகழ் நடிக்காதடா.. நீயும் மதுவும் லவ் பண்ற விஷயம் எனக்குத் தெரியும்..” என்று தீஷிதன் சொல்ல புகழ், “தீக்ஷி அது வந்து…” என்று அவனின் முகம் பார்க்க முடியாது குனிந்து கொண்டான். 

“இப்போ எதுக்கு புகழ் தல குனிஞ்சு உக்காந்துக்கிட்டு இருக்க? நீ எந்த தப்பும் பண்ணலையே.. எங்க வீட்ல இருந்து தங்கச்சியை நீ யாருக்கும் சொல்லாம கூட்டிகிட்டு ஓடி இருந்தால்தான் அது தப்பு.. ஆனா நீ எனக்கு ஒரு நல்ல லைஃப் கிடைக்கணும் அமைதியா பொறுமையா இருக்க, அது மட்டும் இல்ல மது சூசைட் பண்ண ட்ரை பண்ணதுக்கு அப்புறம் தான் நீ அவ காதல ஏத்துக்கிட்டணும் எனக்குத் தெரியும்.. நானும் காதலுக்கு எதிரி எல்லாம் இல்ல புகழ் உன்ன விட வேற யாரு நல்ல பையன் என் தங்கச்சிக்கு லைஃப் பார்ட்னரா கிடைப்பான்னு சொல்லு..”

“தீஷி நான் வேணும்னு உங்கிட்ட மறைக்கலடா.. ஆனா யாரும் இல்லாத ஒரு அநாதையான எனக்கு இப்படி ஒரு பெரிய குடும்பத்து பொண்ணை யாராவது கட்டிக் கொடுப்பாங்களா? அது மட்டும் இல்லடா உன்னோட ப்ரெண்ட்ஷிப் இல்லன்னா நான் இப்ப என்னவாக இருப்பேன்னு தெரியல.. அந்த நட்புக்கு நான் எப்பவுமே உண்மையா இருப்பேன்.. மது ஃபர்ஸ்ட் எங்கிட்ட லவ் வந்து சொல்லும் போது கூட சின்ன பொண்ணு மறந்திடுவானு நெனச்சேன்… லாஸ்ட்ல அவ சூசைட் பண்ண போயிட்டா.. அதனால தான் நான் அந்த லவ்வ ஒத்துக்கிட்டேன்.. ஆனா நிஜமா சொல்றேன் தீஷி யாருமே இல்லாத எனக்கு மது எல்லாமாவே இருந்தா.. எனக்கு இந்த உலகத்துல கடவுள் கொடுத்த ரெண்டு வரம்னா ஒண்ணு நீ மற்றது மது..” என்ற தனது நண்பனை அணைத்துக் கொண்டான் தீஷிதன். 

“புகழ் சீக்கிரமே உனக்கும் மதுவுக்கும் கல்யாணம் பண்ணிடுவோம்..”

“நோ தீஷி… எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்.. முதல்ல உன் லைப் செட்டில் ஆகணும் அதுக்கு அப்புறம் தான் நான் மதுவை கல்யாணம் பண்ணிப்பேன்..” என்று செக் வைத்தான் புகழ். 

“புகழ் அது அவ்ளோ சீக்கிரம் நடக்கும்னு நீ நினைக்கிறியா?” என்று தீஷிதன் புகழைப் பார்த்து கேட்க அதற்கு புகழும் அவனைப் பார்த்து புன்னகையுடன், “தீஷிதனால் முடியாதது ஒன்று இருக்கா என்ன?” என்றான். 

இதைக் கேட்டது தீஷிதனின் உதடுகளில் மர்ம புன்னகை ஒன்றும் மலர்ந்தது. “அப்படின்ற? சரி பாத்துக்கலாம்..” என்றவன் கம்பெனிக்குச் சென்றான். 

மதுவுடன் பேசிக்கொண்டு இருந்துவிட்டு சம்யுக்தா, அவள் ஓய்வெடுக்கட்டும் என்று தனது அறைக்குச் சென்றுவிட்டாள். 

………….……………………………………

இங்கே சென்னையில் தனது கம்பெனியில் உமேஸ்வரன் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்தார். தனது முன்னால் இருந்த பிரகாஷிடம், “பிரகாஷ் நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ தெரியாது.. அந்த லக்ஷ்மி குரூப் ஆஃப் கம்பெனியோட நடக்கிற மீட்டிங்ல நமக்கு அந்த ப்ராஜெக்ட் கிடைத்தே ஆகணும்.. அவங்க கூட சேர்ந்து ஒர்க் பண்ண நிறைய பேரு நான் நீனு போட்டி போட்டுட்டு இருக்காங்க.. ஆனா அத நம்ம கண்டிப்பா நாம எடுத்துக்கிட்டே ஆகணும்.. ஏன்னா அவங்க ரொம்ப பெரிய கம்பெனி.. பிரகாஷ் உன்னோட விளையாட்டுத்தனத்தை எல்லாம் இந்த விஷயத்துல எல்லாம் காட்டினே அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன்.. சொன்னதை நல்லா புரிஞ்சிப்பனு நினைக்கிறன்.. அந்த மணிகண்டன் கம்பெனிக்குக்கூட இந்த காண்ட்ராக்ட் போக கூடாது புரிஞ்சுதா?” என்று குரலில் மிகுந்த அழுத்தத்துடன் கேட்டார் உமேஸ்வரன். 

பிரகாஷ் சம்யுக்தாவின் பிரிவிற்கு பின்னர் உமேஸ்வரன் மற்றும் மணிகண்டன் இருவருக்கும் இடையிலான அந்த உறவு கூட முறிந்து விட்டது. இப்போது இருவரும் போட்டி போட்டு கொண்டு முட்டிக்கொண்டு நின்றனர். நண்பர்களாக இருந்தவர்கள் திடீரென்று எதிரிகளாக நிற்பதை பார்த்தவர்கள் இவர்களை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவும் முயன்றனர். 

இப்படியாக இருக்க, அந்த லக்ஷ்மி குரூப் ஆஃப் கம்பெனியுடன் சேர்ந்து ப்ராஜெக்ட் பண்ணுவதற்காக 

போட்டி இப்போது நடந்து கொண்டிருந்தது. உமேஸ்வரனின் வழிகாட்டலில் பிரகாஷ் அதற்கு தயாராகிக் கொண்டிருந்தான். இங்கே மறுபக்கமும் மணிகண்டன் இந்த லட்சுமி குரூப் ஆப் கம்பெனியுடன். இணைந்து ப்ராஜெக்ட் செய்வதற்காக அவர் தரப்பிலிருந்து அவர் தயாராகிக் கொண்டிருந்தார். இருவரும் நேர் வழியில் செல்லாமல், தாங்கள் குறுக்கு வழியில் எப்படியாவது அந்த கம்பெனியுடன் ப்ராஜெக்ட் செய்ய வேண்டும் என்று அதற்கான வழிகளையும் பார்க்க ஆரம்பித்தார்கள்.  

கீதாவிற்கு சீமாவிற்கு இடையே அடிக்கடி சண்டை வந்து கொண்டே இருந்தது. தன் மருமகள் தன்னிடம் அடிபணிந்து போக வேண்டும் என்பார் கீதா. ஆனால் சீமா, கீதாவை மதிக்கவே இல்லை. அவள் அவளின் விருப்பத்திற்கு இருந்தாள். நேரம் சென்று எழும்புவாள், நன்றாக உண்பால், பின்னர் எழுந்து வெளியே செல்லுவாள். இப்படியாக நடந்து கொண்டிருக்க வீட்டில் ஒரு வேலையும் சீமா செய்வதில்லை. கீதா ஏதாவது கேட்ட முயன்றால், உங்களுக்கு வாரிசு வேண்டுமா இல்லையா என்று அதை சொல்லிச் சொல்லியே அவரை அமைதிப்படுத்தி விடுவாள். இதெல்லாம் கீதாவிற்கு மிகவும் கடுப்பாக இருந்தது. தான் சொல்லுவதை ஒரு அடிமை போல செய்து கொண்டிருந்த சம்யுக்தா எங்கே.. தன்னையே சில சமயங்களில் வேலை வாங்கும் சீமா எங்கே என்று உள்ளுக்குள் குமைந்து கொண்டே இருந்தார் கீதா. 

……………………………………………….. 

மெல்ல மெல்ல புகழும் மதுவும் ஒருவருக்கொருவர் விரும்பும் விடயத்தை பரந்தாமனிடம் சொன்னான் தீக்ஷிதன். அவரும் விசயத்தைக் கேட்டதும் சந்தோஷப்பட்டாரே தவிர, அந்தக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஒரு ப்ராஜெக்ட் விஷயமாக புகழ் அமெரிக்காவுக்கு செல்ல வேண்டிய நிலை வந்தது. அதற்கு தீஷிதன், “புகழ் நீ ரொம்ப கவனமா இருக்கணும்.. ஏன்னா இந்த ப்ராஜெக்ட் நமக்கு ரொம்ப முக்கியம்.. பாத்து பத்திரமா போயிட்டு வா..” என்றான். புகழும், “கண்டிப்பா தீஷி.. நீ கவலைப்படாத இந்த ப்ராஜெக்டை சக்சஸ்ஃபுல்லா முடிச்சுட்டு வரேன்..”

“ப்ரொஜெக்ட் முக்கியம்தான் ஆனால் அதைவிட நீயும் ரொம்ப முக்கியம்.. கவனமாய் இரு..” என்று மீண்டும் அவனை பத்திரமாக இருக்கும்படி கூறி வழி அனுப்பி வைத்தான் தீஷிதன்.

தீஷிதன் புகழை வழியனுப்பி விட்டு, கேபினில் இருந்து முக்கியமான வேலை ஒன்றை பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது அவனிடம் சைன் வாங்குவதற்காக உள்ளே வந்தாள் சம்யுக்தா. வழமை போல அவனிடம் அனுமதி கேட்டு விட்டு உள்ளே வந்து, அவன் முன் நின்றவள், “சார் சைன்..” என்றாள். 

அவளைப் பார்க்காமல் தனது கையை நீட்டினான். அவனிடம் பைலை கொடுத்தவளிடம், “சம்யுக்தா ஈவினிங் ஏதாவது அப்பாயின்மென்ட் இருக்கா?”

“நோ சார் ஈவினிங் உங்களுக்கு எந்த அப்பாயின்மென்டும் இல்ல..” என்று சொன்னார் புகழ். புகழ் சென்றபின் தீஷிதனின் பிஏவாக சில நாட்களாக வேலைய பார்க்கின்றாள் சம்யுக்தா.   

“அப்படியா சார்? ஆனா ஈவினிங். ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு என்னோட ஜாயின் பண்ணிக்கோங்க..”என்று சீரியஸாக சொன்ன தீஷிதனைப் பார்த்தவள், “சரி ஆனா எனக்கு எந்த அப்டேட்டுமே கிடைக்கலையே..” என்றாள் தயங்கியபடி. 

“இது இப்பதான் சடனா ஃபிக்ஸ் ஆச்சுது..” என்றான். 

“ஓ ஓகே சார்.. எந்த பிளேஸ்ல சார் மீட்டிங்?”

“எனக்கு இன்பார்ம் பண்ணல இன்ஃபர் பண்ணதுக்கப்புறம் நான் உங்ககிட்ட சொல்றேன்..” என்றவன் அவள் நீட்டிய கோப்பில் சைன் பண்ணி மீண்டும் அவளிடம் கொடுத்தான். அதை வாங்கிக்கொண்டு தனது வேலையை பார்க்க சென்றாள் சம்யுக்தா. அவள் சென்றதும் தீஷிதனின் இதழ்களில் ஒரு புன்னகை. அந்த புன்னகை என்ன கூற வந்தது என்று அவன் மட்டுமே அறிவான்.

படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊

உங்கள் அன்புத்தோழி 

திவ்யசதுர்ஷி 💙

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 36

No votes so far! Be the first to rate this post.

You may also like

2 comments

Jeyapriya February 12, 2025 - 5:21 pm

Enna solla vanthan? …..

Eagerly waiting mam…..

Reply
Babubuvana February 13, 2025 - 4:45 am

Super divima

Reply

Leave a Comment

Best Tamil Novels

error: Content is protected !!