வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 16

4.8
(24)

வாழ்வு : 16

மாலை நேரம் அவன் கூறிய நேரத்துக்கு கேபினுக்குள் வந்தாள் சம்யுக்தா. தீஷிதனுக்கு அப்போதும் அவனின் வேலை முடியவில்லை. மிகவும் தீவிரமாக அந்த லேப்டாப்பில் வேலை பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்தவள், இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் சுற்றும் மற்றும் பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு பத்து நிமிடம் எடுத்துக் கொண்ட தீஷிதன், “சாரி சம்யுக்தா.. கொஞ்சம் அர்ஜென்ட் ஒர்க்..” என்றவன் அந்த வேலையை முடித்துவிட்டு லேப்டாப்பை மூடி வைத்து, எழுந்து நின்றான். 

“சார் லேட் ஆயிடுச்சு..” என்றாள். 

“யா போலாம்..” என்ற தீஷிதன் முன்னே செல்ல சம்யுக்தா அவன் பின்னால் சென்றாள். தீஷிதனைப் பார்த்ததும் கார் ட்ரைவரை வேகமாக காரைக் கொண்டு வந்து அங்கே நிறுத்தினார். அவனும் ட்ரைவரை வெளியே வரச் சொல்லிவிட்டு, “நீங்க வீட்டுக்கு போங்க.. எனக்கு முக்கியமான ஒரு மீட்டிங் இருக்கு நான் சம்யுக்தாவையும் அழைச்சிட்டு போறதா அப்பாக்கிட்ட சொல்லிடுங்க..” என்றவன் சுற்றி வந்து அந்த காரில் அமர்ந்தான். சம்யுக்தா முன்னாடி அமரலாமா? இல்லை பின்னாடி அமர்வதா? என்று யோசிக்கும்போதே தீஷிதன், “சம்யுக்தா முன்னாடியே உக்காருங்க..” என்றவன் குரலில் முன்னாடியே உட்கார்ந்தாள். 

‘மீட்டிங்னு சார் சொன்னாங்க ஆனா, ரொம்ப அமைதியா வர்றாங்க சார் என்னவா இருக்கும்?’ என்று யோசித்துக் கொண்டு இருந்தவள் விழிகள் அங்கும் இங்கும் அலைபாய்ந்தது. அந்திநேர தென்றல் காற்று அவள் கூந்தலை கலைக்க, அவள் முகத்தில் வந்து விழுந்த ஒரு முடிக்கற்றையை எடுத்துவிட துடித்தது அவனின் விரல்கள். 

கண்ணாடி போட்டு அவள் தனது கயல்விழிகளை மறைத்து இருந்தாலும் அந்த கயல்விழிகளின் அழகில் தொலைந்தது என்னவோ தீட்சிதனின் மனம். அவளை ஒரு பக்கம் அவள் அறியாமல் ரசித்தவாறு பாதையில் கவனத்தை வைத்துக் கொண்டு பயணத்தை ஆரம்பித்தான் அவன். 

ஊட்டியில் இருந்த ஒரு பிரபல்யமான ஹோட்டல் ஒன்றுக்கு அவளை அழைத்து வந்திருந்தான். மாலை மங்கிய நேரத்திலும் அந்த ஹோட்டல் இந்திரனின் அவை போல அழகாக ஜொலித்துக் கொண்டிருந்தது. காரைப் பார்க் பண்ணி விட்டு வர அவனுடன் இணைந்து நடந்தாள் சம்யுக்தா. தீட்சிதனை கண்ட பிறர் அவனிடம் வேகமாக வந்தார். 

“சார் நீங்க புக் பண்ண சீட் அங்க இருக்கு..” என்று அந்த இடத்தில் அவர்கள் இருவரையும் அழைத்து சென்றார். அவனிடம் தலையை சேர்த்து விட்டு, “கம் சம்யுக்தா..” என்று, அவன் முன்னால் செல்ல அங்கே தீட்ஷிதன் ஒரு கார்டன் ஏரியாவில் அழகாக மேசை போடப்பட்டிருக்க அதை சுற்றி இரண்டு நாற்காலிகள், அந்த மேஜையில் அழகிய வாசம் மிக்க மலர்கள் நிறைந்த பூச்சாடியும் வைக்கப்பட்டிருந்தது. அந்த இடம் பார்ப்பதற்கு அத்தனை ரம்யமாக இருந்தது. பின்னால் மெல்லிய டிஜே மியூசிக் இசைத்துக்கொண்டிருந்தது. மொத்தத்தில் அந்த இடம் ஒரு வித்தியாசமான மனநிலையை கொடுத்தது. சம்யுக்தா இத்தனை நாளில் இப்படியான ஒரு இடத்திற்கு மீட்டிங் என்று சென்றதே இல்லை. பெரும்பாலும் மீட்டிங்குகள் ஏதாவது ஒரு ஹோட்டலில் அல்லது ஆபீஸ்களில் இருக்கும் இப்படி ஹோட்டலில் உள்ள கார்டன் ஏரியாவில் என்றுமே நடந்ததில்லை. சம்யுக்தாவிற்கு ஒரே குழப்பமாக இருந்தது. அவளின் குழப்பத்தை அவளின் புருவங்களை பார்த்து அறிந்த தீஷிதன் தனக்குள் புன்னகைத்துக் கொண்டான். ஆனால் தீஷிதனுக்கு ஒரு பக்கம் பயமாகவும் இருந்தது. தனது காதலை சம்யுக்தா அவ்வளவு எளிதில் ஏற்றுக் கொள்ளுவாள் என்று அவன் நினைக்கவில்லை. அதற்கு அவன் பெரும் கடினப்பட வேண்டும் என்றும் அவனுக்குத் தெரியும். இருந்தாலும் அவளை எப்படியாவது சம்மதிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கிலேயே இருந்தான் தீஷிதன். சம்யுக்தா அங்கிருந்த நாற்காலியில் உட்காரச் சொன்னவன் அவளுக்கு எதிராக இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.  

சம்யுக்தா சுற்றும் மற்றும் பார்த்துக் கொண்டு, கையில் கட்டி இருந்த வாட்சையும் பார்த்துக்கொண்டே இருந்தாள். அவளது ஒவ்வொரு அசைவையும் தனது கூலிங் கிளாஸ் மாட்டி இருந்த விழிகளால் படம் பிடித்துக் கொண்டிருந்தான் தீக்ஷிதன். அங்கிருந்த பேரரை அழைத்தவன், இருவருக்கும் காபியை ஆர்டர் செய்தான். அவனைப் பார்த்த சம்யுக்தா, “சார்.. யார் கூட சார் மீட்டிங்? இன்னும் யாரும் வரல.. வீட்ல மது வேற வெயிட் பண்ணிட்டு இருப்பா.. லேட் ஆகுமா சார்?” என்றாள். அவள் பணிவுடன் பேசியதைப் பார்த்த தீக்ஷிதன், “கிளைண்ட் வந்துகிட்டு தான் இருக்காங்க வெயிட் பண்ணுங்க.. லேட் ஆகாது சீக்கிரமா போயிடலாம்..” என்றான். 

அவளும் சரி என்று சொல்லிக் கொண்டிருக்க அந்த வெயிட்டர் காபியை கொண்டுவந்து இருவர் முன்னும் வைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தார். “சாப்பிடுங்க..” என்ற தீஷிதன் ஒரு கப்பை எடுத்துக் கொள்ள, மறுகப்பை எடுத்தாள் சம்யுக்தா. இருவரும் எதுவும் பேசவில்லை. ஒரு மெல்லிய மௌனம் அங்கு நிலவிக் கொண்டிருந்தது. இரம்யமான வேளையில் பின்னணியில் இசைகள் ஒலித்தன. தீஷிதன் வார்த்தைகள் அங்கே மௌனமாக, தனது காதலை சொல்ல வார்த்தைகள் இன்றி தடுமாறினான். எத்தனையோ பேரை நிராகரித்த அவனால் இன்று தன் மனம் கவர்ந்தவளிடம் தனது காதலைச் சொல்லி அவளை மனைவியாக்க வார்த்தை இன்றி தவித்தான். இறுதியில் ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டவன் எழுந்து நிற்க, அவன் எழுந்து நிற்பதை பார்த்த சம்யுக்தாவும் சட்டென்று எழுந்து நின்றாள். 

“நீங்க உட்காருங்க சம்யுக்தா..” என்றான். 

“இல்ல சார் நீங்க எந்திரிச்சிட்டீங்க..” என்று இழுத்தவளை உட்காருங்க சம்யுக்தா, என்று அவளின் இரு தோள்களையும் பிடித்து உட்கார வைத்தான் அந்த நாற்காலியில். அவனது இந்த திடீர் தொடுதலில், சம்யுக்தா அவனை நிமிர்ந்து பார்க்க, புன்முறுவல் பூத்தவன் தனது பாக்கெட்டில் இருந்த ஒரு சிறிய பெட்டியை எடுத்தான்.  

சம்யுக்தா உட்கார்ந்திருக்க, அவள் முன்னாள் வந்து நின்றவன் தனது கையில் இருந்த சிறிய பெட்டியை அவள் முன்பாக நீட்டி, இடது காலை மடக்கி வலது காலை ஊன்றி அவளைப் பார்த்து கண்களால் சிரித்தவன், “சம்யுக்தா உங்களை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்.. கல்யாணம் பண்ணிக்கலாம்?” என்று கேட்டான். 

இப்படி ஒரு நிகழ்வு சம்யுக்தாவின் வாழ்க்கையில் இதுவரை நடந்ததே இல்லை. பிரகாஷ் கூட ஒரு தடவையும் இப்படி சம்யுக்தாவிற்கு முன்பால் முட்டி போட்டு நின்று எதுவும் கொடுத்ததும் இல்லை. அவளும் அவனிடம் எதிர்பார்த்ததும் இல்லை. இன்று தீக்ஷிதன் அவளின் முன்பாக மண்டியிட்டு இருக்கின்றான். அவளுக்கோ என்ன செய்வதென்று தெரியவில்லை. எத்தனையோ பேர் இவனிடம் அப்பாயின்மென்ட் கேட்டு தவிக்கின்றனர். ஆனால் இன்று இவன் தன்னிடம் இப்படி நடந்து கொள்கின்றானே என்று நினைத்த சம்யுக்தாவிற்கு பதட்டம் வர, “சார் முதல்ல எந்திரிங்க சார் ப்ளீஸ்..” என்றாள். 

படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊

உங்கள் அன்புத்தோழி 

திவ்யசதுர்ஷி 💙

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 24

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!