வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 17

4.8
(33)

வாழ்வு : 17

அதற்கு தீஷிதன், “பரவாயில்ல சம்யுக்தா.. உன்கிட்ட இப்படித்தான் கேட்கணும்றது என்னோட ஆசை.. நீ உன்னோட பதிலை சொல்லு..” என்றான். “ஐயோ சார் புரிஞ்சுக்கோங்க எனக்கு ரொம்ப சங்கடமா இருக்கு.. முதல்ல எந்திரிங்க சார் ப்ளீஸ்..” என்றவள் அனது கையைப் பிடிக்க, எழுந்து நின்றவன், “சரி இப்ப எந்திரிச்சிட்டேன்ல்ல சொல்லுங்க என்னைக் கல்யாணம் பண்ணிக்க உங்களுக்கு சம்மதமா?” என்று மீண்டும் அதையே கேட்க சம்யுக்தா அவனைப் பார்த்து, “சார் நீங்க ஏதோ தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கிறீங்கனு நினைக்கிறேன்.. நீங்க நினைக்கிற மாதிரி நான் கிடையாது.. நான் ஒன்னும் கல்யாணம் ஆகாதவ கிடையாது..” என்றாள். 

“ஆமா நீங்க கல்யாணமானவதான்.. இப்போ அதுக்கு என்ன? அதுதான் டைவர்ஸாயிடுச்சுல்ல..”என்றான் மிகவும் கூலாக. தீஷிதனைப் பார்த்த சம்யுக்தா மேலும் பேச வருவதற்கு முன்னர், “வாவ் சூப்பர்.. நீ இங்க தான் இருக்கியா? இன்னும் எத்தனை பேரை ஏமாத்திட்டு இருக்க? நான்கூட நீ கிணத்துலயோ குளத்துலயோ விழுந்து செத்திருப்பன்னு நெனச்சேன்..” என்ற பிரகாஷின் குரலைக் கேட்ட சம்யுக்தாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது.  

தீஷிதன், ‘யாருடா அது?’ என்று திரும்பிப் பார்க்க அங்கே பிரகாஷ் நின்று இருந்தான். பிரகாஷைப் பார்த்ததும் சம்யுக்தாவிற்கு பழைய ஞாபகங்கள் வர அவன் தனக்கு செய்த கொடுமைகளும் நினைவில் வர அவள் உடல் நடுங்கியது. மெல்ல அருகில் நின்றிருந்த தீஷிதன் கைகளை அவள் கரங்கள் பற்றின. தன் கரங்களை தீண்டிய அவளது கரங்களில் தட்டிக் கொடுத்தான் தீஷிதன். கலங்கிய கண்களுடன் அவனை நிமிர்ந்து பார்க்க, கண்களால் நான் இருக்கிறேன் என்று ஆறுதல் கூறியவன் பிரகாஷிடம் திரும்பினான். 

“என்ன சம்யுக்தா ரொம்ப ஜாலியா இருக்க போல இருக்கு.. உன்ன காணலைனு உன் தங்கச்சி ஒவ்வொரு மூலையா தேடிக்கிட்டு இருக்கா.. நீ இங்க வேற ஒருத்தன் கூட கூத்தடிச்சிட்டு இருக்க.. நல்லவ மாதிரி வேஷம் போட்டி.. நீ எல்லாம் ஒரு பொண்ணு.. கல்யாணமான புருஷன் விட்டுட்டு போயிட்டான்னு கொஞ்சம் கூட வருத்தமே இல்லாம ஹோட்டல்ல சுத்திட்டு இருக்க? ஆமா உன் அம்மா வேற நீ அவங்க பொண்ணு இல்லன்னு சொல்லிட்டாங்களாமே.. நீ பேசாம என் வீட்டுக்கு வேலைக்காரிய வந்து இருக்கலாம்ல்ல.. வாரிசுக்கு இல்லைன்னாலும் வசதிக்கு வச்சிப்பேன்.. உன் திமிருடி அதற்குத்தான். உனக்கு இப்படியெல்லாம் நடக்குது ஆமா இங்க என்ன வேலை பாக்குற? தினமும் ஹோட்டல்ல நைட்ஷிப் பாக்குறியா?” என்று அவன் வாய்க்கு வந்ததை பேச தீஷிதனுக்கு கண்கள் சிவந்து கைகள் புடைத்தன. அவனுக்கு வந்த கோபத்தில் பிரகாஷின் முகத்தில் ஓங்கி ஒரு குத்து வைத்தான். அவனின் மூக்கு உடைந்து இரத்தம் பொலபொலவென்று கொட்டியது. “ஹேய் யூ..” என்று பிரகாஷின் சட்டையை பிடிக்க, தீஷிதனும் பதிலுக்கு அவன் சட்டையைப் பிடித்து, “எங்க வந்து என்ன பேசுற? மரியாதை இங்கிருந்து ஓடிடு.. இல்ல நீ பேசின பேச்சுக்கு உன்னை கொன்னு மழையிலிருந்து தள்ளிவிட்டுருவேன்… நீ வந்ததுக்கான தடயமும் இருக்காது அதுபோல நீ செத்ததுக்கான தடயமும் இருக்காது..” என்றான் தீஷிதன். அவனின் மிரட்டலில் பாய்ந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாத பிரகாஷ், “நீ யாருடா? எதுக்கு இவ கூட இருக்க? எவ்வளவு பே பண்ற அவ கூட இருக்கிறதுக்கு? என்று வார்த்தையை மேலும் விட சம்யுக்தாவிற்கு இப்படியே நிலமுடைந்து கீழே சென்று விடமாட்டோமா என்ற இருந்தது. தீஷிதன் பிரகாஷை மீண்டும் மீண்டும் அடிக்கப் பாய்ந்தான். “என்னடி உன் கஷ்டமர்க்கிட்ட என்னை அடி வாங்க வைக்கிறியா? எங்கிட்ட தனியா மாட்டுவல அப்போ வச்சுக்கிறேன்..” என்று பிரகாஷ் சொல்லிக் கொண்டே செல்ல, “டேய் நிறுத்துடா.. யாரைப் பார்த்து என்ன பேச்சுப் பேசுற? அவர் யார் தெரியுமா? அவருடைய இடம் தெரியுமா?” என்று சம்யுக்தா பத்ரகாளியாக மாற, இத்தனை நாட்களில் சம்யுக்தாவை இப்படியான ஒரு நிலையை காணாத தீஷிதனும் பிரகாஷிம் அவளை திரும்பிப் பார்த்தனர். 

“இங்க பாரு இவரு என்னைக் கல்யாணம் பண்ணிக்க போறாரு.. என் வாழ்க்கையில நடந்தது அவருக்கு தெரியாது.. அப்பிடி இருந்தும் என்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு சொல்லாறு.. இவரை கல்யாணம் பண்ணிக்க ஆயிரம் பேரு கியூல நிக்கிறாங்க.. அப்பிடி இருந்தும் டைவர்ஸான என்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு நிக்கிறாரே இவரு தான் மனுஷன். நீயும் இருக்கியே பொறுக்கி நாயே.. கட்டின பொண்டாட்டி உன்கூட இருக்கும்போது இன்னொருத்தி கூட போனவன் தானே நீ.. நீ என்னை தப்பானவனு சொல்றியா? இன்னும் அஞ்சு நாள்ல எப்படி ஐந்தே நாள்ல எனக்கும் இவருக்கு கல்யாணம்.. உனக்கு இன்விடேஷன் வரும்.. வந்து நல்லா கொட்டிக்க..” என்ற சம்யுக்தாவைப் பார்த்து மீண்டும் இருவரும் அதிர்ந்தனர். 

“என்னடி டிராமா பண்றியா? இவனாவது உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதாவது? உன் கண்ணாடியை துடைச்சிட்டு பாரு ஆள் எப்படி இருக்கான்னு.. இவனோட கலருக்கு எத்தனையோ பேர் வருவாங்க.. இதுல கண்ணாடியை போட்டுக்கிட்டு, இப்படி குண்டா இருக்கிற உன்னை கல்யாணம் பண்ணிக்குவானா? கண்ணு தெரியாதவன் கூட உன்னை தொட்டு பார்த்தா கூட கல்யாணம் பண்ணிக்க மாட்டான்..” என்று மேலும் அவளை வார்த்தையால் கஸ்டப்படுத்த, “என் மிஸ்டர் அதுதான் என் யுக்தா சொல்லிட்டால்ல.. என் பொண்டாட்டிய இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசின அவ்வளவுதான்.. நீ வா டார்லிங் நாம போலாம்.. நமக்கு கல்யாண வேலை இருக்கு…” என்று அவள் தோளில் கையை போட்டு அழுத்திக்கொண்டு சென்றான் தீக்ஷிதன். 

அவர்கள் இந்த சென்றது பிரகாஷிற்கு மிகவும் அவமானமாக போய் விட்டது. ஹோட்டலில் இருந்து வெளியே வந்த இருவரும் எதுவும் பேசாமல் காரில் அமர்ந்தனர். காரின் உள்ளே அமர்ந்ததுதான் தாமதம் தனது கைகளால் முகத்தை மறைத்துக்கொண்டு ஏங்கி ஏங்கி அழ ஆரம்பித்தாள் சம்யுக்தா. அவளின் நிலை புரிந்ததால் சிறிது நேரம் அவளை அழவிட்டான் தீஷிதன். ஆனால் அவள் அழுகை நின்றபாடில்லை. மெல்ல அவளை நெருங்கியவன் அவள் தோளில் கைபோட்டான். 

“யுக்தா இப்போ எதுக்கு அழுதிட்டு இருக்க.. கண்டநாய் ஏதோ பேசுதுனா அதை நீ பெருசா எடுத்துப்பாயா? அதை மறந்திடு.. வாழ்க்கையை உனக்காக வாழு..” என்று அவளை தேற்றியவன் கைகளை தட்டி விட்டாள். 

“நான் ரொம்ப துரதிர்ஷ்டசாலிங்க.. என்னை நீங்க கல்யாணம் பண்ணிக்க வேண்டாம்.. நான் ஏதோ கோபத்துல அப்பிடி பேசிட்டேன்.. நீங்க ரொம்ப நல்லவங்க.. மரியாதையான குடும்பத்தை சேர்ந்தவங்க.. உங்களுக்கு நான் எந்த விதத்துலயும் பொருத்தம் இல்லைங்க.. ப்ளீஸ் என்னை விட்டுடுங்க..” என்று அவனிடம் கையெடுத்து கும்பிட்டுக் கேட்க, அவளின் கையை தனது கரத்தினால் பிடித்தவன் அவளை இழுத்து தனது நெஞ்சில் சாய்த்துக் கொண்டான். அவனிடம் இருந்து விடுபட முயன்றவளை அவன் விடவில்லை. மேலும் அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான். அவன் நெஞ்சிலே குத்திக் கொண்டு அழுதாள் சம்யுக்தா. அவள் தலையை வருடிக் கொடுத்துக் கொண்டு இருந்தான் தீஷிதன். 

படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊

உங்கள் அன்புத்தோழி 

திவ்யசதுர்ஷி 💙

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 33

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!