சொக்கு பொடி போட்டாயே..!! சொர்ண காரிகையே..!! 05

4.3
(8)

 

Episode – 05

 

வெளியில் வந்தவள் யாரையும் நிமிர்ந்தும் பார்க்காது, குனிந்த படியே லிப்ட்ற்குள் சென்று ஏறிக் கொண்டாள்.

 

லிப்ட் கதவு மூடியதும், முகத்தை மூடிக் கொண்டு ஒரு மூச்சு அழுது தீர்த்தவள்,

 

முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு, லிப்ட் திறக்க வெளியே வந்தவள்,

 

வேகமாக அந்தக் கட்டிடத்தில் இருந்தும் வெளியேறினாள்.

 

“இனி மேல் இந்தப் பக்கம் வரவே கூடாது.” என எண்ணிய படி, நடந்து சென்றவளுக்கு மனதில் பாரம் ஏறிப் போனது.

 

நேராக வீட்டுக்கு சென்றவளுக்கு, நேரடியாக தந்தையை எதிர் கொள்ளவும் முடியவில்லை.

 

அவரிடம் பேசினால் கண்டிப்பாக உடைந்து அழுது விடுவோம் என கண்டிப்பாக அவளுக்கு தெரியும்.

 

ஆகவே, அமைதியாக அறைக்குள் சென்று முடங்கிக் கொண்டாள்.

 

அவன் பேசிய பேச்சுக்களின் தாக்கம், இன்னும் அவளுக்குள் புயலை ஏற்படுத்திக் கொண்டு தான் இருந்தது.

 

“என்னவெல்லாம் பேசி விட்டான் அவன். எனக்கு என்ன தகுதி இருக்குன்னு கேட்டு அசிங்கப்படுத்திட்டான். நேரடியா சவால் வேற விட்டு இருக்கான். இன்னும் என்ன எல்லாம் நடக்கப் போகுதோ. அவனோட அந்தக் கண்ணுல இருக்கிற வெறி சாதாரண மானது இல்ல. என்ன பண்ணலாம்?, பேசாம அப்பாவ கூட்டிக் கொண்டு இங்க இருந்து போயிடலாமா?, ஆனா எங்க போறது?, இனி புதுசா வேற இடம் மாறுறதுன்னா அதுக்கு வேலையும் தேடணுமே. எல்லாம் குழப்பமாவே இருக்கே. சே…. அந்த ஒரு நாள் வாழ்க்கையில வராமல் போய் இருக்கலாம்னு நினைக்கிற அளவுக்கு என் நிலைமை மாறிப் போச்சு கடவுளே….” என பலதும் யோசித்தவள்,

 

கடைசியில், “அடுத்த கிழமை முழுதும் எதுக்கும் அமைதியா இருந்து பார்ப்பம். அவன் ஒண்ணும் பண்ணலன்னா ஜாப்ப தொடர்ந்து செய்வம். இல்லன்னா, வேற இடம் மாறிப் போகலாம்.” என முடிவு எடுத்துவள்,

 

இயன்ற வரையும், இயல்பாக இருக்க முயன்றாள்.

 

தந்தைக்கு தன் மீது கொஞ்சம் கூட சந்தேகம் வரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள் அவள்.

 

“அப்படி சிறிதாக ஏதும் தெரிய வந்தால் கூட அவர் நிறைய யோசிப்பதோடு, அவளையும் அழைத்துக் கொண்டு உடனடியாக ஊருக்கு பஸ் ஏறி விடுவார். அதன் பிறகு அவரை தடுக்க முடியாது.” என எண்ணியவள்,

 

கவனமாக தனது உணர்வுகளை வெளியே காட்டாது மறைத்துக் கொண்டு, தந்தையுடன் வழக்கம் போல சந்தோஷமாக நேரம் செலவழிக்க ஆரம்பித்தாள்.

 

அடுத்தடுத்த நாட்கள், எந்த விதமான பிரச்சனைகளும் இன்றி நார்மலாக கடந்து போனது.

 

அந்த வார இறுதி நாளில் கோவிலுக்கு செல்லலாம் என எண்ணியவள்,

 

மாலை நேரம் தந்தையிடம் சொல்லிக் கொண்டு, அருகில் இருந்த அம்மன் கோவிலுக்கு ஆட்டோவில் சென்றாள்.

 

அங்கு சென்று மனம் உருகி, “எனக்கு காசு பணம் நிறைய வேணும்னு இல்ல தாயே, மன நிம்மதி தான் வேணும் , என்னோட அப்பாவ நான் நல்லாப் பார்த்துக்கணும். நான் யாருக்கும் வேணும்னு தீங்கு செய்தது இல்லை. தெரியாம ஏதும் பண்ணி இருந்தா மன்னிச்சிடுங்க தாயே.” என கண்ணை மூடிக்கொண்டு வேண்டுதல் வைத்தாள்.

 

அவளின் வேண்டுதலைக் கேட்ட அம்மனோ,

 

“என்ன செய்ய சொர்ணா, உனக்கு இனி கொஞ்சம் கஷ்ட காலம் தான். அத நீ தாண்டியே ஆகணும். உனக்கு இன்னும் நிறைய சோதனைகள் காத்து இருக்கு.” என கூறிக் கொண்டார்.

 

கோவிலில் தரிசனம் முடித்தவள் சற்று நேரம் அங்கேயே அமர்ந்து விட்டு,

 

நேரத்தைப் பார்த்துக் கொண்டே வெளியே வந்து

, அங்குள்ள கடைகளைப் பார்த்தபடி நடந்தாள்.

 

அப்போது தான் அவளது கண்ணுக்கு அழகான ஜோடி லவ் பேர்ட்ஸ்சின் சிலை கண்களில் பட்டது.

 

அந்த சிலை குட்டியாக இருந்தாலும், அதில் இருந்த வசனம் தான் அவளை மேலும் கவர்ந்தது.

 

“லவ் மேக்ஸ் லைப் பியூட்டிபுல்.” என எழுதப் பட்டு இருந்தது.

 

ஏனோ சொர்ணாவின் மனதை அந்த சிலை கவர,

 

உடனே ஆசையுடன் அதனை வாங்கிக் கொண்டு நடந்தவள்,

அருகே ஒரு ஆட்டோ வந்து நின்றது.

 

அந்த டிரைவர், “மேடம் எங்க போகணும்?” என்று கேட்க,

 

சொர்ணாவும், “நல்ல காலம் ஆட்டோ பிடிக்கணும்னு யோசிக்கும் போதே வந்துடிச்சு.” என எண்ணிக் கொண்டு,

 

தான் தங்கி இருக்கும் இடத்தின் பெயரை சொல்லி விட்டு, ஆட்டோவில் ஏறி அமர்ந்தாள்.

 

ஆட்டோ எடுத்த உடனே வேகமாக செல்ல ஆரம்பித்தது.

 

அதே நேரம் அவள் சொன்ன பாதையை விடுத்து, வேறு பாதையிலும் செல்ல, பயந்து போனவள்,

 

“ஹலோ, இது நான் சொன்ன ரூட் இல்லையே. நீங்க போற பாதை பிழை. முதல்ல வண்டிய நிறுத்துங்க.” என பதட்டமாக சொன்னாள் சொர்ணா.

 

ஆனால் ஆட்டோக் காரனோ, முன்பை விட ஆட்டோவை வேகமாக செலுத்தினானே தவிர எந்தப் பதிலும் கூறவில்லை.

 

சொர்ணாவோ, பயத்தில் வியர்த்து ஒழுக,

 

“ஹலோ…. ஹலோ…. நிறுத்துங்க…. நிறுத்துங்க…. ஏன் இப்படி வேகமா ஓட்டுறீங்க. யாரு நீங்க?, என்ன எங்க கூட்டிக் கொண்டு போறீங்க?, இப்போ ஒழுங்கா நீங்க நிறுத்தல, நான் போலீஸ்ற்கு போன் பண்ணுவன், இல்லன்னா வண்டில இருந்து குதிச்சிடுவன்.” என கத்தினாள் சொர்ணா.

 

அவளுக்கு என்ன செய்வது எனவும் புரியவில்லை.

 

அந்த ஆட்டோக் காரனோ, ஆட்டோவை ஓட்டிக் கொண்டே, ரிங் பண்ணிய தனது கை பேசியை எடுத்துப் பார்த்தவன்,

 

“அம்மா இது உங்களுக்கு வந்த போன் தான்மா. தயவு செய்து பேசுங்க.” என கூறி, போனை கொடுக்க,

 

“எனக்கா…. யாரு?, இந்த நேரத்தில எனக்கு எதுக்கு உங்க போன்…. முதல்ல நீங்க வண்டிய நிறுத்துங்க.” என சற்று அழுத்தம் கலந்த குரலில் கேட்டவள்,

 

ஆட்டோக் காரன் வாய் திறக்காது, போனை நீட்டியபடி ஓட்டவும்,

 

“சே….” என்ற படி, வேறு வழி இன்றி போனை வாங்கி காதில் வைத்து,

 

“ஹலோ யாருங்க நீங்க?….” சற்று எரிச்சலான குரலில் கேட்டாள்.

 

மறு புறம், பதில் எதுவும் இல்லாது போகவே,

 

“ஹலோ…. ஹலோ…. லைன்ல இருக்கீங்களா இல்லையா?, நேரம், காலம் புரியாம தொல்லை பண்ணிக் கிட்டு….” என கூற,

 

மறுபுறத்தில் இருந்து, “ம்க்கும்….” என்றகேலி குரலுடன் சிரிப்பு சத்தம் ஒன்று கேட்டது.

 

அந்த சிரிப்பு சத்தமே சொன்னது எதிரில் இருக்கும் அவன் யார் என?

 

“நீ…. நீங்க….மிஸ்டர் ஆரண் யன்….” என சொர்ணா தடுமாற,

 

“என்ன தடுமாற்றம் மேடம்?, சாட்சாத் நானே தான். அப்புறம் என்ன சொன்னீங்க நேரம் காலம் இல்லாமலா…. ஹா…. ஹா…. எல்லாம் நேரம் காலம் பார்த்து தான் நாங்க நடக்கிறம்.”

 

“சார்…. இப்போ எதுக்கு?, அப்போ இந்த ஆட்டோ டிரைவர்…. இது எல்லாம் உங்க செட் அ ப் தானா?”

 

“யெஸ், எல்லாத்துக்கும் காரணம் நானே…. சரி உன்னோட கதைக்க எனக்கு நேரம் இல்ல. எனக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு. நேர்ல வாங்க மேடம் பேசிக்கலாம்.” என கூறி விட்டு வைத்தவனை என்ன செய்வது எனப் புரியாது கண் கலங்கிப் போனாள் சொர்ணா.

 

அவள் நேரத்துக்கு வீட்டுக்கு போகவில்லை என்றால் தந்தை பயந்து விடுவார். அதோடு, கோவிலுக்கும் தேடி வந்து விடுவார். வயதான காலத்தில் அவரை அலைய வைக்க அவள் விரும்ப வில்லை.

 

அதே நேரம் என்ன காரணம் தந்தையிடம் சொல்வது. அவரிடம் பொய் பேசாதவள் இப்போது பொய் சொல்லியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப் பட்டு இருக்கிறாள்.

 

எல்லாம் அவன் ஒருவனால் தான் என எண்ணியவள், தந்தைக்கு போன் போட்டு,

 

“அப்பா, கோவிலுக்கு வந்த இடத்தில என்னோட ஸ்கூல் பிரன்ட பார்த்தன் அப்பா. அவ என்னை அவளோட கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பண்ண கூப்பிடுறா. எனக்கு என்ன பண்ண தெரியல அப்பா. நீங்க என்ன சொல்றீங்க?” என்று பொய் என தெரிந்தும் கேட்க,

 

“சரியான வெகுளிம்மா நீ. இதுக்கெல்லாம் போய் என்கிட்ட பெர்மிஸ்ஸன் கேட்கணுமா என்ன?, உனக்கு இருபத்து நான்கு வயசு ஆகுது. இன்னும் அப்பா கிட்ட கேட்டு எல்லாம் செய்யனும்னு நினைக்கிறாய் பார். உன்ன மாதிரி பொண்ணு கிடைக்க நான் கொடுத்து வைச்சு இருக்கணும். நீ போய்ட்டு வாம்மா. ஒண்ணும் அவசரம் இல்லை. என்ன ஒண்ணு கவனமா போய்ட்டு வாம்மா அது மட்டும் தான் மா.” என கூறி விட்டு வைத்தார் அவளின் தந்தை.

 

தந்தையின் பேச்சில் சொர்ணாக்கு இன்னும் குற்ற உணர்ச்சி அதிகரித்துக் கொண்டு போனது.

 

தேவை இல்லாமல், தந்தையிடம் பொய் சொல்கிறோமே என எண்ணி நொந்து போனாள் பெண்ணவள்.

 

அதன் பிறகு அவள் ஆட்டோக் காரனிடம் எதுவும் கேட்கவும் இல்லை. அவனும் எதுவும் பேசவும் இல்லை.

 

சரியாக, ஆரண்யனின் சாப்ட்வேர் சோலுஷனுக்கு முன்னாக ஆட்டோவை நிறுத்தியவன்,

 

அவள் இறங்காது இருக்கவும், “அம்மா, எனக்கு சொன்னத தான் நான் செய்றேன் தயவு செய்து இறங்குங்க. இல்லன்னா எனக்கு தான்மா பிரச்சனை. என்னோட பிழைப் பே ஆட்டோவ நம்பித்தான் இருக்கு. கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க.” என கெஞ்ச,

 

சொர்ணாக்கு அவரின் நிலை புரிய,

 

“சரி நான் இறங்குறன்.” என கூறி விட்டு, இறங்கியவள் அந்த கட்டிடத்தை ஒரு முறை நிமிர்ந்து பார்த்து விட்டு,

 

பெரு மூச்சு ஒன்றுடன், “ஒரு கிழமைக்கு முதல் தான் இந்த இடத்துக்கு திரும்ப வரக்கூடாதுன்னு வேண்டுதல் வைச்சேன். ஆனா விதி என்ன வைச்சு விளையாடுது.” என முணு முணுத்துக் கொண்டு,

 

ஆறாம் மாடியில் உள்ள அவனது கேபினுக்கு சென்றவள்,

 

அறை வாசலில் நின்று, “மே ஐ கம் இன் சார்?” என கேட்டாள்.

 

உள்ளே இருந்து “யெஸ், கம் இன்.” என்ற குரல் கேட்க,

 

கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றவள்,

அங்கே கால் மேல் கால் போட்டுக் கொண்டு லேப்பில் வேலை செய்து கொண்டு இருந்த ஆரண்யனை பார்த்து விட்டு,

 

“எதுக்காக இப்போ என்னை இப்படி வர வைச்சீங்க?” என கேட்க,

 

அவனோ, “ஸ்ஸ்ஸ்…. எனக்கு ஒரு வேலை இருக்கு அப்படி போய் உட்கார், எல்லாம் முடிச்சிட்டு பேசுறேன்.” என திமிராக கூறியவன்,

 

லேப்பில் தொடர்ந்து வேலை செய்ய ஆரம்பித்து விட்டான்.

 

அடுத்து என்ன செய்வது எனப் புரியாது அங்கிருந்த கதிரையில் அமர்ந்தவள்,

 

அடிக்கொரு தரம் நேரத்தை பார்த்துக் கொண்டாள்.

 

அவனும் அவள் படும் பாடுகளைக் கவனித்துக் கொண்டே, உதட்டைத் தாண்டாத ஒரு வன்மப் புன்னகை உடன், வேலை செய்து கொண்டு இருந்தான்.

 

அவன் வேணும் எண்டே செய்கிறான் என தெரிந்தும், எதுவும் செய்ய முடியாது அமர்ந்து இருந்தவள்,

 

ஒரு மணி நேரம் கடந்த பிறகும் அவன் அசையாது இருப்பதைக் கண்டு,

 

“சார், டைம் ஆகுது. நான் வீட்டுக்குப் போகணும், அப்பா பார்த்துக் கொண்டு இருப்பார். என்ன விஷயம்னு சொல்லுங்க. இல்லன்னா, நான் கிளம்புறேன்.” என கூறியவள்,

 

அவன் அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு, மீண்டும் வேலையைப் பார்க்கவும்,

 

அவளது பொறுமை எல்லையைக் கடக்க ஆரம்பித்தது.

 

அதற்கு மேலும் அரை மணி நேரம் பொறுமை காத்தவள்,

 

அவன் கல்லுப் போல அசையாது இருக்கவும்,

 

“சாரி சார்…. நான் இப்போ கிளம்பியே ஆகணும்.” என கூறி விட்டு,

 

கதவைத் திறக்க, அது திறந்தால் தானே…. இழுத்துப் பார்த்தவள் கதவு திறக்கவில்லை என்றதும்,

 

திரும்பி ஆரண்யனைப் பார்க்க,

 

அவனோ, ரிமோட்டை தூக்கிக் காட்டி விட்டு,

 

“என்னோட அனுமதி இல்லாம நீங்க வெளில போக முடியாது மேடம். ஒரு கிழமை ரொம்ப அமைதியா சந்தோஷமா இருந்தீங்க போல, என்னோட தொல்லை எதுவும் இல்லாம, அது தான் என் ஆட்டத்தை ஒரு குட்டி டெமொவோட ஸ்டார்ட் பண்ணலாம்னு இப்படிப் பண்ணேன்.” என கூறினான்.

 

அவனை, என்ன செய்வது எனப் புரியாது திண்டாடிப் போனாள் சொர்ணா.

 

“என்ன இவன் இப்படி இருக்கான்?, இப்போ நான் என்ன பண்றது?”, என யோசித்தவள்,

 

“நான் வீட்டுக்கு போகணும் சார், அப்பா ரொம்ப யோசிக்க ஆரம்பிச்சிடுவார். பாவம் அவர்.” என கூற,

 

“ஓஹ்…. அதுக்கு நான் என்ன பண்ணனும்?” என கேட்டான் ஆரண்யன்.

 

“சார் நீங்க ஒண்ணும் பண்ண வேணாம், தயவு செய்து கதவைத் திறந்து விடுங்க.” என சொர்ணா கேட்கவும்,

 

அவளின் பதட்டத்தை கண்டு புன்னகை புரிந்தவன்,

 

“ஓகே, உன்னைப் பார்த்தாலும் பாவமா இருக்கு. அதனால திறந்து விடுறேன். ஆனா அதுக்கு பதிலா நீ ஒண்ணு பண்ணணுமே.” என கூறினான் அவன்.

 

“என்ன பண்ணனும் சார்….” என சுற்றும் முற்றும் பார்த்தவாறு சற்று பயந்த குரலில் கேட்டாள் அவள்.

 

சொர்ணாவின் மூளை அதற்குள் எங்கு எல்லாமோ பயணம் செய்து விட்டு வந்தது.

 

“பெரிசா ஒண்ணும் இல்ல, நீ உன்னோட ஜாப்ப ரிசைன் பண்ணிட்டு என் கம்பெனில வந்து ஜோயின் பண்ணு. அப்போ தான் நீ என்னோட கண்ட்ரோலுக்குள்ள நீ இருப்பாய். இல்லன்னா உன் மேல என்னோட போக்கஸ் கொஞ்சம் குறைவா இருக்கு. என்ன நான் சொன்னத செய்றீயா?” என கேட்டான் ஆரண்யன்.

 

சொர்ணாவோ, “எத உங்க கம்பெனிலயா?, சார், நான் வேலை செய்றது சாப்ட்வேர் கம்பெனி….” என ஆரம்பித்து விட்டு,

 

தான் பேசுவது தப்பு என தெரிந்து பேச்சை நிறுத்தி விட்டாள் சொர்ணா.

 

பின்னே, அவள் இப்போது வந்து இருக்கும் அவனது கம்பெனியும் அதே வகை தானே ஆகவே அப்படி ஒரு காரணம் சொல்ல முடியாது. அதனால் தான் பேச்சை முடித்துக் கொண்டாள் அவள்.

 

அவள் எண்ணியது போலவே,

 

“அப்போ இது என்ன இரும்பு விக்கிற கம்பெனியா…. ஒழுங்கா இரண்டு நாளுல இங்க வந்து ஜோயின் பண்ணு. இல்லன்னா அதனோட பின் விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும். அப்புறம் உன் இஷ்டம். இப்போ நீ போகலாம்.” என கூறியவனை ஒரு நொடி அதிர்ந்து பார்த்தவள்,

 

அவன் ரிமோட்டை எடுத்து கதவைத் திறக்கவும்,

 

“இப்போதைக்கு இங்க இருந்து கிளம்பினா போதும். மிகுதியை பிறகு பார்த்துக் கொள்ளலாம்.” என எண்ணிக் கொண்டு வேகமாக அங்கு இருந்து வெளியேறினாள்.

 

போகும் அவளையே பார்த்து இருந்தவன்,

 

“ஓடு…. ஓடு…. இன்னும் எவ்வளவு தூரம் ஓடுறாய்னு நானும் பார்க்கிறன்.” என மனதிற்குள் எண்ணிக் கறுவிக் கொண்டான்.

 

அவள் போனதும் அவனும் கிளம்பி விட்டான்.

 

வேகமாக வெளியில் வந்து வீதியில் இறங்கி சுற்றும் முற்றும் பார்த்தவளுக்கு அந்த இராப் பொழுது பயத்தைக் கிளப்பியது.

 

ஒரு வாறு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, ஆட்டோ ஒன்றை ஆப்பில் புக் பண்ணி விட்டு,

 

வாசலில் காத்து இருக்க, அவளைக் கடந்து சென்றது ஆரண்யனின் கார்.

 

கடந்து போகும் அவனது காரை வெறித்துப் பார்த்தவள், கார்க் கண்ணாடியூடு அவன் தன்னைப் பார்க்கக் கூடும் என உணர்ந்து, அமைதியாக வேறு பக்கம் முகத்தை திருப்பினாள்.

 

நேரம் ஆக…. ஆக…. ஆட்கள் நடமாட்டம் குறைய, சொர்ணாக்கு நெஞ்சுக்குள் நீர் வற்றிப் போனது.

 

அதற்கு மேலும் அங்கு நிற்க முடியாது, மெதுவாக நடக்க ஆரம்பித்தவள்,

 

மனதிற்குள், ஆரண்யனை அர்ச்சிக்கவும் மறக்கவில்லை.

 

ஒரு பத்து அடி கூட நடந்து இருக்க மாட்டாள். அதற்குள் ஒரு குடிகாரக் கும்பல் அடங்கிய வாகனம் ஒன்று அவளை முந்திக் கொண்டு சென்று சடன் பிரேக் போட்டு நின்றது.

 

அதே நேரம், சொர்ணாவின் தந்தையும் அவளுக்கு அழைப்பு எடுத்தக் கொண்டே இருந்தார்.

 

அவள், போனை எடுக்க முதல், அந்த வாகனத்தில் இருந்து குதித்த ஒரு கும்பல் அவளை நோக்கி வர ஆரம்பித்தது.

 

அதற்கு மேலும் தாமதித்தால் ஆபத்து என உணர்ந்து, அவள் ஓட ஆரம்பிக்க,

 

அந்தக் கும்பல் சுற்றி வளைத்து அவளைப் பிடித்து இழுத்துக் கொண்டு தங்கள் வாகனத்தை நோக்கி சென்றது.

 

அடுத்து என்ன நடக்கப் போகிறது?

 

சொர்ணா எப்படி அவர்களிடம் இருந்து தப்பிக்கப் போகிறாள்?

 

அடுத்த பதிவில் பார்க்கலாம்.

 

கண்டிப்பா உங்க ஆதரவ கொடுங்க மக்காஸ்.

 

அடுத்த எபி நாளை வரும்…😍😍😍 குட்டி எபின்னாலும் வரும் மக்காஸ்…

 

லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் ப்ளீஸ்….

 

இனி அடுத்தடுத்த எபிகள் இன்னும் அதிரடியா வரும் மக்காஸ்….

 

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.3 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!