அன்று ஒரு நாள் அகல்யா தன் அம்மாவிற்கு உடல்நிலை சரி இல்லை என்று கூறி அவள் தன் வீட்டிற்கு சென்று இருக்க, அந்த நேரம் தான் தேவ் தன் பிறந்த நாளுக்காக தன் அலுவலகத்தில் வேலை செய்த அனைவரையும் பார்ட்டிக்கு இன்வைட் செய்து இருந்தான்…
அமுதினியும் எப்படியாவது இன்று தன் காதலை அவனிடம் கூறி விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு அந்த பார்ட்டிக்கு சென்று இருந்தால்… அகல்யா இருந்திருந்தால் கண்டிப்பாக அவளை இது போன்ற பார்ட்டிக்கு எல்லாம் செல்ல விட்டிருக்கவே மாட்டாள். ஆனால் விதி யாரை விட்டது…
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்… என்று அனைவரும் கையில் ஒரு மது கிளாஸ் உடன் ஆளுக்கு ஒரு ஜோடியோடு ஆடிக் கொண்டிருந்தனர்… ஆனால் அமுதினி மட்டும் ட்ரிங்க்ஸ் எதுவும் சாப்பிடாமல் வெறும் ஜூஸை மட்டும் தன் கையில் வைத்துக் கொண்டு அமைதிக்காக ஒரு ஓரமாக அமர்ந்திருக்க… இதை கவனித்த தேவ்..
“என்ன அம்மு… எதுவும் சாப்பிடாமல் உக்காந்து இருக்க? நான் வென உனக்கு எதாவது ட்ரிங்ஸ் ஆடர் பண்ணட்டுமா?” என்று தேவ் கேட்க
“ஐயோ அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்… எனக்கு இந்த ஜூஸே போதும்…” என்று அவள் கூற
“என்ன ஜூஸ் மட்டும் போதுமா? என்ன விளையாடுறீயா? என்னோட பர்த் டே பார்ட்டிக்கு வந்துட்டு நீ எப்படி ட்ரிங்ஸ் பண்ணாம போகலாம்?” என்று அவன் கேட்க
“இல்ல தேவ் எனக்கு வேண்டாம் எனக்கு இந்த பழக்கம் எல்லாம் இல்ல…” என்று அவள் கூற
“ஓகே…. ட்ரிங்ஸ் தான் பண்ண மாட்டா… அங்க வந்து எங்க கூட டான்ஸாவது ஆடலாம்ல? ஏன் இப்படி தனியா உக்காந்து இருக்க?” என்று அவன் கேட்க
“ஆக்சுவலி எனக்கு இந்த மாதிரி இடத்துக்கு எல்லாம் வந்து பழக்கமே கிடையாது… அதோட என் கூட என் ப்ரெண்ட் அகல்யா கூட வரல… அவ இருந்த கூட எனக்கு கொஞ்சம் கம்போர்ட்டபிளா இருந்திருக்கும்… அவளும் என் கூட இல்லையா, அதான் ஒரு மாதிரியா இருக்கு” என்று கூறிய அமுதினி சற்று தயக்கத்தோடு அமர்ந்திருக்க
“ ஏன் அகல்யா மட்டும் தான் உன்னோட பிரண்டா? இங்க இருக்குற வேற யாரு உன்னோட பிரண்டு இல்லையா என்ன? என்னமோ தெரியாத வெளி ஆட்கள் கூட சேர்ந்து உன்ன டான்ஸ் ஆட சொன்ன மாதிரி இவ்வளவு தயங்குற? அவங்க எல்லாரும் நம்ப ஆபீஸ் கொலிக்ஸ் தானே? அப்றம் என்ன கம்” என்றவன் அவளையும் அந்த கூட்டத்திற்கு நடுவே இழுத்துச் சென்று விட்ட, அவளும் சற்று தயக்கத்தோடு தன் உடலை அசைத்து டான்ஸ் ஆட ஆரம்பித்தாள்… நேரம் ஆக ஆக அவளும் தன்னை மறந்து அனைவருடனும் மியூசிக் ஏற்றது போல் ஆடியவள். தேவ்வுடன் சேர்ந்தும் ஆடினால், ஒரு கட்டத்தில் சோர்ந்து போய் மீண்டும் தன் இடத்திலேயே வந்த அமர்ந்தவள்… என்றும் இல்லாத ஒரு புதுவித உணர்வு அவளுக்குள் தோன்ற பெண்ணவளின் கண்களோ அங்கு இருக்கும் யாரையும் கண்டுகொள்ளவே இல்லை… பெண்களுக்கு நடுவே போதையில் ஆடிக்கொண்டு இருக்கும் தேவ்வை மட்டுமே கண்ணிமைக்காமல் காதலோடு பார்த்துக் கொண்டிருந்தால்… அவனும் எப்பொழுதும் போல் அனைத்து பெண்களுடனும் பிளட் செய்து கொண்டு பார்ட்டியை நன்றாக என்ஜாய் செய்து கொண்டிருந்தான்..
அப்படி இப்படி என்று பார்ட்டி முடிந்து ஒவ்வொருவராக அங்கிருந்து கிளம்ப தேவ் தனக்காக அங்கேயே புக் செய்த பட்டிருந்த அறையை நோக்கி சென்றான்.
என்றும் இல்லாத அளவிற்கு இன்று சந்தோசத்தில் சற்று அதிகமாக குடித்திருந்தவன். தள்ளாடியப்படியே அந்த அறைக்கு அவன் செல்ல அமுதினியும் அவனை ஃபாலோ செய்து கொண்டு அவன் பின்னாலே சென்றாள்.. அப்பொழுது அவன் தடுமாறி கீழே விழ போக அதை கண்ட அமுதினியும் ஓடி சென்று அவனை தாங்கிப் பிடித்தவள் அவன் கையில் இருந்த அறை தாவியை வைத்து அவனது அறைக்கு கூட்டி வந்து அவனை பெட்டில் படுக்க வைத்தாள்..
அப்பொழுது சரியாக போதையில் இருந்த தேவ் பெண்ணவளின் கழுத்தில் கைப்போட்டு தன்னோடு சேர்த்து இழுக்க, அதில் அமுதினியும் நிலை தடுமாறி அவன் மேலே விழுந்தால்.. போதையில் என்ன செய்கிறோம் என்று தெரியவில்லையே அவளை தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்துக் கொண்டவன்.
“ஏய்…. நீ இங்க என்ன பண்ற?” என்று கேட்டவன் பெண்ணவளின் கழுத்தில் முகம் புதைத்து முத்தமிட,
“தேவ்…. என்ன பண்றீங்க?” என்று அவள் தன் வார்த்தைகளை முடிக்கும் முன்பே அவள் இதழோடு இதழ் சேர்த்த முத்தமிட்டான்.. இதை எதிர்பார்க்காத அமுதினி முதலில் அவனிடம் இருந்து விலகப் போராடினாள்..
“ தேவ் ப்ளீஸ் என்ன விடுங்க, விடுங்க தேவ்… இது தப்பு.. நீங்க இப்போ நிதானத்திலேயே இல்லை” என்று அவள் அவனிடம் இருந்து எவ்வளவோ விலக போராடியும் ஆடவனோ பெண்ணவளை விடுவது போல் தெரியவில்லை… கொஞ்சம் கொஞ்சமாக அவன் அவளிடம் அத்துமீற ஒரு கட்டத்திற்கு மேல் அமுதினியும் கொஞ்சம் கொஞ்சமாக தன் கட்டுப்பாட்டை இழக்க… காதல் கொண்ட மனமோ அவனை எதிர்த்துப் போராட முடியாமல் அவனிடமே சரணடைந்தது….
அடுத்த நாள் காலை அவள் கண்விழித்து பார்த்த போது தேவ் அவள் அருகே இல்லை… அவளும் அந்த அறை முழுக்க சுற்றி பார்த்தும் அவன் அங்கு இல்லை என்று அவளுக்கு புரிந்தது… ஆனால் அங்கிருந்த மேசையின் மீது ஒரு காகிதத்தில்
“ Thank you so much for an unforgettable night. I loved it…” என்று எழுதி இருக்க அதை படித்தவரின் கன்னங்கள் இரண்டும் வெட்கத்தில் தானாக சிவந்தது…
“உங்களுக்கு மட்டும் இல்ல தேவ்… இது எனக்கு மறக்க முடியாத ஒரு நைட் தான்… ஐ லவ் யூ சோ மச் தேவ்…” என்று கூறியவள் அதன் பின் அங்கிருந்து கிளம்பி விட்டால்..
*…—…*
அன்று தனக்கும் தேவுக்கும் நடந்த அனைத்தையும் ஆதினியிடம் அம்மு கூறி முடிக்க அவள் கூறி முடிக்கும் வரை பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த ஆதினி…
“அதுக்கப்புறம்? இத பத்தி நீங்க ரெண்டு பேரும் எதுவும் பேசவே இல்லையா?” என்று ஆதினி கேட்க
“ இல்ல அதுக்கு அப்புறம் அவர் வேலை விஷயமா வெளியூர் போயிட்டாரு… நேத்து தான் ஊர்ல இருந்து திரும்ப வந்தார். வந்தவுடனே கல்யாணம்னு சொல்லி எல்லாருக்கும் பத்திரிக்கை கொடுத்தார்… என்னால் அது தாங்கிக்கவே முடியல கண்டிப்பா எங்களுக்குள்ள நடந்தது அவருக்கு ஞாபகம் இருக்குன்னு எனக்கு தெரியும் அதனால நான் அவர்கிட்ட பேசினேன் ஆனா” என்றவள் நேற்று தேவ்விடம் பேசியவற்றையும் தன் அக்காவிடம் கூறியவள். தன் அக்காவை கட்டி பிடித்துக் கொண்டு அழுக… அவளும் ஒரு பெருமூச்சோடு தன் தங்கையின் முதுகை வருடி கொடுத்தவள். பின் மெல்ல அவளை தன்னிடம் இருந்து விலகி ஒரு நொடி கண் மூடி ஒரு திறந்து தன் முன் கண்களில் கண்ணீரோடு நிற்கும் தன் தங்கையை பார்த்தவள்.
அடுத்த நொடியே யாரும் எதிர்பார்க்காத நேரம் அவள் கன்னம் பழுக்கும் அளவிற்கு ஒரு அரை கொடுத்தால்.. இதை எதிர்பார்க்காத அமுதினி சுருண்டு போய் கீழே விழ…
“ ஆதி என்ன பண்ற நீ? அவளே பாவம் இப்ப தான் செத்து பொழைச்சு வந்திருக்கா… அவள போய் அடிக்கிற?” என்று அகல்யா தன் தோழிக்கு சப்போர்ட் செய்து கொண்டு வர அவளை எரிக்கும் பார்வை பார்த்த ஆதினி
“ எனக்கு தெரிஞ்சி இவ உயிரோட இருக்குறதுக்கு பதிலா செத்தே போய் இருக்கலாம்…” என்று ஆதி கோபத்தோடு கூற
“உனக்கு என்ன பைத்தியமா புடிச்சிருக்கு?” என்று அசோக் கேட்க
“நீங்க யாரும் எதுவும் பேசாதீங்க, எனக்கு இருக்கிற கோபத்துக்கு அப்படியே இவ்வளவு கொன்னு போடலாம் போல இருக்கு… யாருன்னு தெரியாத ஒருத்தன், அவன் மேல காதல் அப்படின்னு ஒரு கன்றாவி… இது போதாதுன்னு அவன் கேட்டானாம் இவங்க கொடுத்துட்டாளாம்… அது என்ன கடையில விக்கிற கடலைமிட்டாய்யா தூக்கி கொடுக்க?” என்று அதீத கோபத்தோடு கேட்டவள். மீண்டும் அவளை அடிக்க கையை ஓங்க அகல்யாவோ சட்டென்று ஆதனியின் கையை பிடித்து தடுத்து விட்டாள்…
அமுதினிக்கு அதினியின் கோபம் பற்றி தெரிந்தாலும் அவள் இது நாள் வரை ஒரு முறை கூட தன் தங்கையை அதட்டி பேசியதும் இல்லை கோப்பட்டு கை நீட்டி அடித்ததும் இல்லை… அப்படி இருக்க அவள் இன்று அடித்ததும் அதை எதிர்பார்க்காத அமுதினியின் உடல் பயத்தில் நடுங்க அமர்ந்திருக்க..
“ஏய்… ஆதி அவ ஏதோ தெரியாம பண்ணிட்ட விடு, இப்ப நீ கோவப்பட்டு அவளை அடிக்கிறதுனால மட்டும் நடந்தது எல்லாம் இல்லைன்னு ஆகிடுமா என்ன? இப்போ நம்ம அடுத்தது என்ன பண்றதுனு அப்படிங்கறதை பத்தி மட்டும் தான் யோசிக்கணும்” என்று அகல்யா கூற
“என்ன யோசிக்க சொல்ற அகல்? அவனைத் தேடிப் போய் அவன் கல்யாணத்தை நிறுத்தி இவளுக்கும் அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க சொல்றியா?” என்று ஆதி கோபத்தோடு கேட்க
“வேற என்ன ஆதி பண்ண சொல்ற?” என்று அசோக் கேட்க
“அப்படியே நீங்க சொல்ற மாதிரி அவன தேடி புடிச்சு அவன் கல்யாணத்தை நிறுத்தி இவளுக்கும் அவனுக்கும் கல்யாணம் பண்ணி வைக்க ட்ரை பண்ணாலும் நேத்து இவளை என்ன கேள்வி கேட்டானோ அதே தான் எல்லார் முன்னாடி வெச்சும் அசிங்கமா கேட்பான்… அதை விட அவன மாதிரி ஒரு பொம்பள பொறுக்கிக்கு என் தங்கச்சியை கல்யாணம் பண்ணி கொடுக்க நான் தயாரா இல்ல, அப்படி ஒரு வாழ்க்கையும் என் தங்கச்சிக்கு தேவையில்லை… இங்க பாரு அம்மு ஒழுங்கும் மரியாதையா அவனை மறந்துட்டு வேலையை பாரு… நானே அப்பா அம்மா கிட்ட சொல்லி உனக்கு ஒரு நல்ல பையனா பார்க்கிறேன்.. இன்னொரு தடவை அவனுக்காக தற்கொலை பண்ணிக்கிறேன் அதை பண்ணிக்கிறேன்னு ஏதாவது பண்ணுனேன்னு வச்சுக்கோ தங்கச்சின்னு கூட பாக்க மாட்டேன் நானே உன்னை கொன்று போட்டுவிடுவேன்” என்று ஆதினி மிகுந்த கோபத்தோடு கூற அமுதினியும் வேறு வழியில்லாமல் எதுவும் பேசாமல் அமைதியாக அழுது கொண்டு அமர்ந்திருந்தால்…
“சரி ஆதி.. இப்போ நம்ம அடுத்தது என்ன பண்ணப் போறோம்?” என்று அசோக் கேட்க
“இனி இவ இங்க இருக்க தேவையில்லை, நான் இப்பவே இவளை என்கூட ஊருக்கு கூட்டிட்டு போறேன்.. கல்யாணம் முடியட்டும் அதுக்கப்புறம் அப்பாகிட்ட பேசி இவளை பத்தி எடுத்து சொல்லி இவளை புரிஞ்சு மனசார ஏத்துக்குற நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கலாம்..” என்று ஆதி கூற
“ ஆனா அது ஒன்னும் நீ சொல்ற அளவுக்கு சாதாரண விஷயம் இல்ல ஆதி?” என்று அகல்யா கூற
“ எனக்கும் அது தெரியும் அகல் ஆனா, இப்போதைக்கு நமக்கு வேற வழியில்லை. இவளை இங்க நான் விட்டுட்டு போனா திருப்பியும் இந்த மாதிரி பைத்தியக்காரத்தனமா ஏதாவது பண்ணுவா.. அங்கே அப்படின்னா எப்பவும் சுத்தி ஆளுங்க இருப்பாங்க இவளால அங்க இருக்கிறவங்களை மீறி எதுவும் பண்ண முடியாது சோ.. இப்போ நான் இவளை என் கூட கூட்டிட்டு போறேன். நீங்க எல்லாம் கல்யாணத்துக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடியே அங்க வந்துருங்க..” என்று கூற அசோக்கும் அகல்யாவும் சரி என்று தலையசைத்தனர்..
“ இப்படியே உட்கார்ந்து எவ்வளவு நேரம் அழுதுகிட்டு இருக்க போற? எழுந்து போய் உன்னோட டிரஸ் எல்லாம் பேக் பண்ணு கிளம்பலாம்” என்று ஆதினி கூற. அமுதினியும் வேறு வழியில்லாமல் எழுந்து சென்று தன் உடைகளை எல்லாம் பேக் செய்து கொண்டு வந்தால்..
ஆதினி தன் தங்கையை அழைத்துக் கொண்டு தனது சொந்த ஊருக்கு செல்ல,
“நீ எனக்கு நல்லது பண்றதா நினைச்சு, தப்பு பண்ற அக்கா… நான் இங்க இருந்த கூட கொஞ்சம் கொஞ்சமா எல்லாத்தையும் மறந்துட்டு வேலையை பார்த்து இருப்பேன். ஆனா அங்க ஒவ்வொரு நிமிஷமும் நரகத்தில் இருக்குற மாதிரி வெந்து சாகனும்..” என்று மனதிற்குள் நினைத்த அமுதினி இனி நடக்கப் போகும் விஷயங்களை நினைத்து மேலும் நொந்து தான் போனது….
கிட்டத்தட்ட… நள்ளிரவில் தங்கள் வீட்டை வந்தடைந்த ஆதினி காரில் இருந்து இறங்க அவள் பின்னோடு அமுதினியும் இறங்கினாள்… எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் போன தன் மகள் திரும்பி விட்டாள் என்று முகம் முழுக்க புன்னகையோடு ஆதினியை நெருங்கிய அம்பிகா அமுதினியை பார்த்ததும் சட்டென்று கோபம் ஆனார்..
தன்னை பார்த்ததும் தன் தாயின் முகம் மாறியதைக் கண்டு அமுதினியின் மனம் மேலும் காயப்பட்டு போக, அவள் இதழோ ஏளனமாக ஒரு புன்னகை செய்தது…
“அடடே என்னோட ரெண்டு செல்ல பொண்ணுங்களும் ஒருவழியா வந்து சேர்ந்துட்டாங்களா? … ரொம்ப சந்தோஷம் உள்ள வாடா அம்மு உன்னை பார்த்து எத்தனை நாளாச்சு? எப்படியோ உன்னோட அக்கா நெனச்ச காரியத்தை சாதிச்சிட்டாளே..” என்று கூறியவாறு முத்துசாமி
தன் இரண்டாவது மகள் நெற்றியில் அன்போடு முத்தம் கொடுக்க அவளோ லேசாக புன்னகை செய்தால்…
“ நாங்க கூப்பிட்ட அப்போ எல்லாம் வர மாட்டேன்.. வர மாட்டேன்னு எனக்கு வேலை இருக்குது, அது இருக்குன்னு சொல்லிட்டு அக்கா கூப்பிட்ட உடனே வந்துட்டே பார்த்தியா? என்ன இருந்தாலும் எங்களை விட உனக்கு அவ மேல தான் பாசம் அதிகம்?” என்று கேட்ட முத்துச்சாமி தன் முகத்தை கோபத்தோடு திருப்பி கொள்ள
“அப்படியெல்லாம் இல்லப்பா… எனக்கு அக்கா மேல எவ்வளவு பாசம் இருக்கும் அதை விட அதிகமா உங்க மேலயும் அம்மா மேலயும் இருக்கு…” என்று சிறு தயக்கத்தோடு ஒரு ஓரமாக நின்றிருந்த தன் தாயை பார்த்து அமுதினி கூற.. அவள் அப்படி கூறியதும் அம்பிகாவோ கோபத்தோடு தன் முகத்தை திருப்பிக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டார்..
“சரி சரி இப்படியே வெளியே நின்னு எவ்ளோ நேரம் பேசிக்கிட்டு இருக்க?… உள்ள வாங்க யாராவது பார்த்தா ஏதாவது நினைக்க போறாங்க.. ஏற்கனவே உன்னோட அக்கா இந்த நேரத்துல ஊரை தாண்டி வெளிய போனது யாருக்கும் தெரியாது, தெரிஞ்சா அவ்வளவு தான்” என்று கூறியவர் அமுதினியின் கையில் இருந்த அவளது லக்கேஜை வாங்கிக் கொண்டு முத்துசாமி முன்னே சென்றவர் அவள் அறையில் வைத்து விட்டு வர..
“ அப்புறம் கண்ணு…” என்று அவர் ஏதோ ஆரம்பிக்க
“ அப்பா ஏற்கனவே மணியாயிடுச்சு எதா இருந்தாலும் காலைல பேசிக்கலாம் இப்ப போய் தூங்குங்க… போங்க கல்யாண வேலை நிறைய இருக்கு… இன்னும் ரெண்டு நல்ல திருவிழா வேற அதற்கான வேலை வேற இருக்கு, நாளைக்கு எல்லாரும் வர ஆரம்பிடுவாங்க… அவங்களை எல்லாம் கவனிச்சிக்கணும்.. இவ்வளவு வேலை இருக்கும் போது நீங்க இங்க நின்னு நியாயம் பேசிட்டு இருக்காதீங்க போங்க…” என்று ஆதினி கட்டளையோடு கூற
“ உத்தரவு மகாராணி.. உங்க பேச்சை மீற முடியுமா என்ன?” என்று கூறிய முத்துசாமி சிறு புன்னகையோடு அங்கிருந்து சென்ற விட, தன் தந்தை அங்கிருந்து சென்றவுடன் அமுதனையின் பக்கம் திரும்பிய ஆதினி
“ இங்க பாரு அம்மு முட்டாள் தனமா ஏதாவது யோசிச்சு மறுபடியும் ஏதாவது ட்ரை பண்ண.. நான் ஏற்கனவே சொன்ன மாதிரி தான் தங்கச்சின்னு கூட பாக்க மாட்டேன் நானே உன்ன கொன்னுடுவேன். ஒழுங்கும் மரியாதையா அவன மறந்துட்டு உன்னோட வாழ்க்கையை பாரு.. உனக்கு என்ன கிடைக்கணும்னு இருக்கோ அது கண்டிப்பா கிடைக்கும்” என்று கூறிய ஆதினி தன் அறைக்கு சென்ற விட அமுதினியும் ஆதனி கூறியதைப் பற்றி யோசித்தவரே தன் அறைக்குள் வர… அவள் பின்னோடு வந்த அவளது அன்னை அம்பிகா
“ ஏய்… நான் தான் உன்னை இந்த பக்கமே வரக்கூடாதுன்னு சொன்னல, அப்புறம் எதுக்கு இங்க வந்த? லட்சுமி வந்து கூப்பிட்டா கூட நீ ஊருக்கு வர கூடாதுன்னு சொன்ன இல்ல..” என்று கோபத்தோடு அம்பிகா கேட்க
“ ஆனா அம்மா. அக்கா…” என்று அவள் ஏதோ கூற வர
“என்ன ஏதாவது சாக்கு சொல்லி தப்பிக்க போற அப்படித்தானே? வந்தும் தான் வந்து தொலைஞ்சிட்டே வெளியே எங்கேயும் போகாத இப்படியே இந்த ரூம்குள்ளே இரு, உனக்கு சாப்பாடு வேலைக்கு நானே இங்க கொடுத்து விடுகிறேன்.. யாரும் உன்னை பார்க்க கூடாது உன்னால இந்த கல்யாணத்துல ஏதாவது பிரச்சனை வந்துச்சு அப்புறம் நான் மனுஷியாக இருக்க மாட்டேன் பாத்துக்கோ” என்று தன் சொந்த மகளையே மிரட்டி விட்டு அங்கிருந்து சென்றார் அம்பிகா..
அம்பிகா ஏன் தன் மகளை இவ்வளவு வெறுக்கிறார்? சொந்தம் மகளையே ஏன் அவர் மிரட்ட வேண்டும்? அவர் மிரட்டுவதற்கான காரணம் என்ன? அமுதினியினால் ஆதினியின் திருமணத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்படுமா? நம் கதையின் நாயகன் தான் யார்? இந்த கேள்விகளுக்கான விடயங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்…