Episode – 04
மூன்று மணி ஆனதும் ஒருவாறு அருணாவிடமும் தனது மேல் அதிகாரிகளிடமும் சமாளிப் பாக ஒரு காரணத்தைக் கூறி சமாளித்து விட்டு,
தனக்கு பிடித்த காளி அம்மனை வேண்டிக் கொண்டு,
“அம்மா காளித் தாயே…. நீதான் என்ன அந்த சிடு மூஞ்சிக்கிட்ட இருந்து காப்பாத்தணும். அங்க என்ன நடந்தாலும் எனக்கு அத தாங்குற சக்திய கொடும்மா. போனமா…. சாரி சொன்னமா வந்தமான்னு இருக்கணும்.” என மனதிற்குள் உருப் போட்டுக் கொண்டு,
அவனின் சாப்ட்வேர் நிறுவனமான ஆரா சாப்ட்வேர் சொல்யூஷனின் முன்னாக போய் இறங்கினாள்.
இறங்கியவள் தனது முந்தானையால், முகத்தில் அரும்பிய வியர்வையை மெதுவாக துடைத்து விட்டு அங்கிருக்கும் வாட்ச்மேனிடம் தனது பெயரைக் கூற,
அவனும் மரியாதையாக கதவைத் திறந்து உள்ளே செல்ல அனுமதி கொடுத்தான்.
அந்தக் கட்டிடத்தின் பிரமாண்டமே அவளை மிரட்டுவதற்கு போதுமானதாக இருந்தது.
கால்கள் பின்னப் பின்ன மெதுவாக ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து உள்ளே சென்றவளுக்கு அந்த ஏசியிலும் வியர்த்து வழிந்தது.
உள்ளே சென்று, அங்கிருந்த ரிசப்சனிஸ்சிடம், “என்னோட நேம் சொர்ணாம்பிகை. எனக்கு இன்னைக்கு ஆரண்யன் சார சந்திக்க அப்பொய்ன்மெண்ட் கிடைச்சு இருக்கு.” என கூற,
அந்தப் பெண்ணும் அவளது ரெஜிஸ்டரில் ஒரு முறை செக் பண்ணியவள்,
“ஒன் செக் மேடம்.” என சொர்ணாவிடம் கூறி விட்டு,
போனை எடுத்து, ஆரண்யன் மெயின் கேபின் தளத்தில் இருக்கும் ரிசப்சனிஸ்ட்ற்கு கால் பண்ணினாள்.
மறு முனையில் பதில் கிடைத்ததும்,
சொர்ணாவிடம், “மேடம் நீங்க போகலாம். ஆறாவது மாடி தான் சாரோட கேபின் இருக்கிற புளோர். அங்க சார் உங்களுக்காக வெயிட் பண்ணிக் கொண்டு இருக்காராம் போங்க மேடம்.” என கூறி புன்னகை உடன் கையை லிப்ட்டை நோக்கி காட்ட,
“எத, காத்துக் கொண்டு இருக்காரா?” என உள்ளுக்குள் உதறலுடன் எண்ணிக் கொண்டவள்,
அந்தப் பெண்ணிடம், “தங்கி யூ.” என கூறி விட்டு, லிப்டில் ஏறிக் கொண்டாள்.
அவள் வந்ததில் இருந்து அவளின் ஒவ்வொரு செய்கை களையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டு இருந்தான் ஆரண்யன்.
அவள் படும் பாடுகள் அனைத்தையும் கூர்மையாக பார்த்துக் கொண்டு இருந்தான் அவன்.
பொதுவாக ஏதும் பிரச்சனை என்றால் மட்டும், சிசி டீவி பார்ப்பவன் முதன் முறை தனது நேரத்தை விரயமாக்கி சிசி டீவி பார்த்துக் கொண்டு இருந்தான்.
ஒருவாறு அந்த தளத்திற்கு, வந்து சேர்ந்தவள், அங்கிருந்த ரீசப்சனிஸ்சிடம் விடயத்தைக் கூற,
அந்தப் பெண்ணும், “ஓஹ்…. நேற்று என் கூட பேசினது நீங்க தானா மிஸ். உங்க நேம் சொர்ணாம்பிகை தானே.” என கேட்டவள்,
சொர்ணா, “யெஸ்.” என கூறவும்,
ஒரு புன் சிரிப்புடன், “யூ ஆர் லுக்கிங் கோர்ஜியஸ் மேம்.” என கூறினாள்.
அவளது பாராட்டில் ஒரு கணம் கன்னம் சிவந்து போனது சொர்ணாக்கு.
மறு நொடியே, “தங்கி யூ.” என புன் சிரிப்புடன் கூறியவள்,
அவனது அறையைக் கண்டு பிடித்து அவனின் அறைக்கு முன்னாக சென்று நின்றாள்.
அவனின் பெயரைக் கண்டதுமே,
அதுவரையும், நின்றிருந்த வியர்வை மீண்டும் ஊற்றெடுக்க ஆரம்பித்தது.
அவளின் தவிப்பு உள்ளே இருந்த ஒருவனின் பார்வையில் பட்டு அவனுக்கு உதட்டில் வன்மப் புன்னகையை வரவழைத்தது.
சொர்ணா, ஒருவாறு தனது மனதை சமன் செய்து கொண்டு,
“சார், மே ஐ கம் இன்?” என கேட்டாள்.
அவளின் கேள்விக்கு, உள்ளே இருந்து பதில் வராது போகவே,
மேலும் இரண்டு தடவை கூப்பிட்டுப் பார்த்தவள், எதுவும் வராது போகவே,
கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றாள்.
அவள் உள்ளே கால் வைத்த அந்த நொடி,
“வாங்க…. மிஸ் சொர்ணாம்பி கை வெங்கட மூர்த்தி குரு க்கள். ஆரண்யனின் பிரமாண்ட அறை உங்களை அன்புடன் வரவேற்கிறது.” என அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டு கூறினான்.
சொர்ணா அவனது குரலில், திகைத்துப் போய் நிமிர்ந்து பார்க்க,
அங்கே சுழல் நாற்காலியில் அமர்ந்து, அவளையே பார்த்த வண்ணம், கையில் பேனையை வைத்து சுழற்றிக் கொண்டு இருந்தவன்,
அவள் அவனையே உறைந்து போய் பார்த்துக் கொண்டு இருப்பதைக் கண்டு,
“என்ன மேடம், கதவுக்கு உள்ள வர்ற ஐடியா இருக்கா…. இல்லையா…. எதுக்கு என்ன பார்க்க வந்து இருக்கீங்கன்னு கொஞ்சம் உள்ள வந்து சொல்றீங்களா ப்ளீஸ்.” என கிண்டலாக கேட்டான்.
அவளோ, உதட்டைக் கடித்துக் கொண்டு உள்ளே வந்தவள்,
அவனின் மேசைக்கு முன்னாக வந்து நின்று,
“சார் அது வந்து….” என ஆரம்பிக்க,
கை நீட்டி அவளின் பேச்சைத் தடுத்தவன், அவளை ஒரு முறை மேலிருந்து கீழாக பார்த்தான்.
மெல்லிய ஊதா நிற வாயில்ப் புடவையை ஒழுங்காக அணிந்து இருந்தவள்,
முகம் எந்த ஒப்பனையும் இல்லாது சிம்பிளாக இருந்தது.
கரு நிறப் பொட்டும், அவள் அணிந்து இருந்த வெள்ளைக் கல்லு மூக்குத்தியும் அவளுக்கு ஒரு வித அழகை கொடுத்தது.
முகத்தில் அரும்பிய வியர்வை கூட அவளுக்கு அழகு சேர்த்தது.
கூந்தல் அங்கும் இங்கும் பறந்து இருக்க, அவனையே பயப் பார்வை பார்த்தவளை ஒரு கணம் கூர்ந்து பார்த்து விட்டு,
“முதல்ல உட்காருங்க மேடம், அப்புறம் பேசுங்க.” என கூற,
அவளுக்கும் கால்கள் சற்றுப் பலம் இழந்தது போல இருக்கவே, அமைதியாக கதிரையில் அமர்ந்து கொண்டவள்,
அவனை நிமிர்ந்து பார்க்காது, சுற்றிப் பார்த்தவாறு,
“நேற்றுக்கு முதல் நாள் நான் ஆரா ஹோட்டலுக்கு வந்து இருந்தேன்.” என ஆரம்பிக்க,
மறு புறம் அவனிடம் இருந்து “ஓகே…. அப்புறம்” என்ற குரல் கேட்டது.
சொர்ணாவும், அவனைப் பார்க்காது,
“அங்க நீங்க பேரரா இருந்தீங்க.” என நலிந்த குரலில் கூறினாள்.
“ம்ம்ம்ம்…. அப்புறம்….”
“நான்…. நீங்க…. சாப்பாடு மாறிப் போச்சுன்னு….”என அடுத்த வார்த்தை வராது தடுமாறிய சொர்ணா,
“……………….”
மறு புறம் அவன் சைலன்டாக இருக்கவும்,
“தெரியாம…. உங்கள அடிச்சிட்டேன்.” என கூறி முடித்தாள்.
“ஓஹ்…. அப்புறம்….”
“அன்னைக்கு இருந்த டென்ஷன்ல என்னால மன்னிப்பு கேட்க முடியல.”
“ஆஹ்…. அப்புறம்….”
“இல்ல…. நீங்க யாருன்னு எனக்கு அப்போ சரியா தெரியல. இப்போ தான் தெரிஞ்சுது. அதான் அன்னைக்கு நடந்த சம்பவம் ஒரு மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் அப்படின்னு உங்க கிட்ட சொல்லி….” என அவள் நிறுத்த,
கதை கேட்கும் பாணியில் “ம்ம்ம்ம்…. சொல்லி….” என கிண்டலாக அவனும் இழுக்க,
“மன்னிப்பு கேட்க வந்தன் சார்.” என ஒருவாறு சொல்லி முடித்தாள் சொர்ணா.
சற்று நேரம் அங்கு அமைதியே நிலவியது.
மெதுவாக நிமிர்ந்து பார்த்தவள், அவன் அவளையே கூர் விழிகளுடன் பார்த்துக் கொண்டு இருக்கவும்,
பட்டென தலையைக் குனிந்து கொண்டு,
“என்ன மன்னிச்சிடுங்க. வேணும்னு நான் எதுவும் பண்ணல. தெரியாம தான் அது நடந்துது. உங்க ரேஞ்ச் வேற…. என்னோட ரேஞ்ச் வேற. இதுக்கு மேல இத வளர்க்க வேண்டாம் சார் ப்ளீஸ்.” என கை எடுத்துக் கும்பிட்டவள்,
அவனை நிமிர்ந்தும் பார்க்காது, பட்டென எழுந்து, கதவிற்கு அருகில் செல்ல,
அவளின் பின்னே சொடக்கிடும் ஒலி ஒன்று கேட்டது.
சொர்ணாவும், சந்தேகமாக திரும்பி அவனைப் நோக்க,
“என்ன மேடம் வந்தீங்க?, நீங்களே பேசிட்டு கிளம்புறீங்க?, கொஞ்சம் இருங்க இனி தானே மேடம் நான் பேசணும்.” என கூறியவன், எழும்பி மேசைக்கு முன்னால் வந்து ஸ்டைலாக சாய்ந்து நின்று அவளை ஒரு பார்வை பார்த்தான்.
அவனின் ஸ்டைலிற்கும் அவனது பார்வைக்கும் சம்பந்தமே இல்லை.
ஆம், அவன் விழிகளில் தெரிந்தது என்னவோ வேட்டையாடும் அதே புலியின் பார்வை தான்.
அவனின் பார்வையில் உள்ளுக்குள் கிலி பிறந்தாலும்,
வெளியில் காட்டாது மறைத்துக் கொண்டவள்,
“சொல்லுங்க சார். உங்க டைம வேஸ்ட் பண்ண வேணாம்னு தான் மன்னிப்பு கேட்டுட்டு உடனே கிளம்பினன்.”
“ஓஹ்…. மேடம் எனக்காக பார்க்கிறீங்க போல. என்ன ஒரு தாராள மனசு உங்களுக்கு இல்ல….” என கேலி பேசியவன்,
“அன்னைக்கு நீ அடிச்ச ஒரு அடியால எனக்கு எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா?, என் அப்பா முன்னாடி நான் கூனிக் குறுகிப் போய் நின்னன். எத்தனையோ பிசினஸ்களுக்கு ஓனர் நான். எனக்கு வேலை செய்ய எல்லாரும் லைன்ல நிக்கிறாங்க. ஆனா நான் எதுக்காக அப்படி பேரர் வேலை செய்தன்னு தெரியுமா?, உன்னால என்னோட ஒரு பெரிய கனவு வேஸ்ட்டா போயிடுச்சு. எங்க அப்பாக் கிட்ட செஞ்ச சேலஞ்சில மோசமா தோத்துப் போயிட்டேன் நான். அதோட அந்த மீடியாக்காரங்க…. சே…. ” என பல்லைக் கடித்தவன், திரும்பி மேசையில் ஓங்கிக் குத்தி விட்டு,
சொர்ணாவை நோக்கி கை நீட்டி,
“உன்னால தான்…. உன்னால மட்டும் தான் இத்தனையும் எனக்கு நடந்துச்சு. நீ என்னடான்னா சிம்பிளா சாரி சொல்லிட்டு கிளம்புறாய்?” என உறுமிய படி கேட்க,
அப்படியே கதவோடு சாய்ந்து நின்று கொண்டவளுக்கு அவனின் தோற்றம் பெரும் பயத்தைக் கிளப்பியது.
“தெரியாம தான்….” என ஆரம்பிக்க,
“ஸ்ஸ்ஸ்…. நீ ஒரு வார்த்தை பேசக்கூடாது. இங்க நான் மட்டும் தான் பேசுவன். நான் சொல்றது மட்டும் தான் நடக்கணும்.”
என மீண்டும் ஒரு முறை அழுத்தமாக கூற,
அதனைக் கண்டு மொத்தமாக பயந்து ஒடுங்கிப் போய் நின்றாள் பெண்ணவள்.
வேறு ஒரு ஆண் மகனாக இருந்தால் அவள் நிலையைக் கண்டு கொஞ்சம் இரங்கி இருப்பான்.
ஆனால் இங்கு இருப்பவன் ஆரண்யன் ஆயிற்றே.
அவனுக்கும் இரக்கத்திற்கும் தான் ரொம்ப தூரம் ஆயிற்றே.
இரக்கமா…. அப்படி என்றால்
என்ன? என கேட்பவன் தானே அவன்.
“உன்னோட சாரி எவனுக்கு வேணும். சும்மா ஒருத்தன் என்ன முறைச்சுப் பார்த்தாலே பதிலுக்கு வச்சு செய்றவன் நான்.
என்ன நீ அடிச்சு இருக்காய். என்னோட அப்பாவே என்ன இதுவரைக்கும் அடிச்சது இல்ல. நீ யாரு என் மேல கைய வைக்க. வாழ்க்கை முழுக்க நீ நிம்மதி இல்லாம வாழுற மாதிரி பண்ணினா தான் என்னோட மனசுல இருக்குற காயம் ஆறும்.” என அசட்டையாக கூறியவனிடம் எதிர்த்து பேசும் அளவிற்கு தைரியம் சொர்ணாவுக்கு இல்லையே.
அவனின் பண பலம், ஆள் பலம் அனைத்தும் அறிந்தவளுக்கு அவனிடம் இறங்கிப் போவதை தவிர வேறு வழியும் இருக்கவில்லை.
அவனை எதிர்த்து அவளால் என்ன செய்து விட முடியும்?
ஆகவே, “சார் கொஞ்சம் என் பக்கம் இருந்தும் யோசிச்சுப் பாருங்க. அவ்வளவு பெரிய தண்டனை எல்லாம் எனக்கு வேணாம். நான் என்ன செய்யணும்னு சொல்லுங்க அத செய்றன். வேணும்னா நீங்க இங்க வச்சு என்ன திருப்பி கூட அடிங்க. இல்லன்னா அன்னைக்கு மாதிரி அந்த ஹோட்டல்ல வைச்சு திருப்பி அடிச்சுடுங்க.” என கூறியவளை,
இளக்காரமாக பார்த்தவன், “நீ என்ன அடிச்சதும், நான் உன்னை அடிக்கிறதும் ஒன்னா…. உன்ன இந்த ஊர்ல எவனுக்காச்சும் தெரியுமா?, ஆனா நான் அப்படியா?, என்ன இந்த ஊர்ல தெரியாதவன் எவனாச்சும் இருக்கிறானா?, இந்த லட்சணத்தில நீயும் நானும் ஒன்னா?” என கேலியாக மீண்டும் கேட்டவன்,
ஒவ்வொரு வார்த்தைகளிலும் அவளைக் குத்திக் குதறி எடுத்தான்.
அவனின் பேச்சுக்களே அவளின் அழுகையை மேலும் அதிகரிக்க போதுமானதாக இருந்தது.
பொறுத்துப் பொறுத்து பார்த்தவளுக்கு அதற்கு மேல் இயலாது போகவே,
“இப்போ நான் என்னதான் செய்யணும்னு சொல்றீங்க?” என அழுதபடி ஆற்றா மையுடன் கேட்டு விட்டாள் அவள்.
“ஹே…நீ ஒண்ணும் செய்ய வேணாம். இனி மேல் என் அதிரடித் தாக்குதலுக்கு தயாரா இரு. எந்த நேரமும் என்கிட்ட இருந்து உனக்கு அடி விழலாம். அத சொல்லத் தான் உன்ன சந்திக்கணும்னு சொன்னன். நான் ஒருத்தர அடிச்சாலும், அழிச்சாலும் சொல்லிட்டுத் தான் செய்வன். மீட்டிங் முடிஞ்சுது. நீ போகலாம்.” என கூறியவன், விரல்களால் போகுமாறு சைகை செய்ய,
அதற்கு மேல் அங்கு நிற்க முடியாது, அவசரமாக கதவைத் திறந்து கொண்டு வெளியே ஓடிச் சென்றாள் சொர்ணா.
சொர்ணா எடுக்கப் போகும் முடிவு என்ன?
இனி ஆரண்யன் ஆடப் போகும் ஆட்டம் எப்படி இருக்கும்?
அவன் அவளை ஆட்டுவிப்பானா?
அடுத்த பதிவில் பார்க்கலாம்.
கண்டிப்பா உங்க ஆதரவ கொடுங்க மக்காஸ்.
அடுத்த எபி நாளை வரும்…😍😍😍
லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் ப்ளீஸ்….
இனி அடுத்தடுத்த எபிகள் அதிரடியா வரும் மக்காஸ்….