சொக்கு பொடி போட்டாயே..!! சொர்ண காரிகையே..!! 06

4.6
(9)

Episode – 06

 

சொர்ணாவால் அவர்களின் பிடியில் இருந்து வெளியே வர முடியவில்லை.

 

முடிந்த வரையும் முயன்று பார்த்து விட்டு,

 

“விடுங்க…. ப்ளீஸ், என்ன விடுங்க….” என கத்த ஆரம்பித்தாள் அவள்.

 

அவர்களோ, அவளை இழுத்து வாகனம் உள்ளே தள்ள எத்தனிக்க,

 

பதிலுக்கு அவர்களை முழு பலத்துடன் தள்ளி விட்டு ஓட ஆரம்பித்தாள் பெண்ணவள்.

 

அந்தக் கயவர்களோ, இருந்த கோபத்தில், அவளது காலை இடறி விழ வைத்தனர்.

 

சொர்ணாக்கு விழுந்த வேகத்திற்கு எழுந்து ஓட, கால்கள் ஒத்துழைக்காத காரணத்தினால், கால்களைப் பிடித்துக்கொண்டு மெதுவாக எழும்ப,

 

மீண்டும் அந்தக் கூடடம் அவளை சுற்றிக் கொண்டது,

 

“என்ன திமிரடி உனக்கு?, எங்களயே அடிச்சிட்டு ஓடுறாய் என்ன?, உன்ன….” என அவளின் கையைப் பிடித்து முறுக்க,

 

புயல் வேகத்தில் அவர்களுக்கு அருகில் வந்து நின்றது ஒரு கார்.

 

அடுத்த நொடி காரில் இருந்து இறங்கினான் ஆரண்யன்.

 

அவனது கண்களில் கோப அனல் வீச, இருந்த கோபத்துக்கு அங்கு இருந்தவர் களை அடித்து நொறுக்கி ஆரம்பித்தான் அவன்.

 

அவனின் வேகத்திற்கும், ஒவ்வொரு அடிக்கும், தாக்குப் பிடிக்க முடியாது திணறிப் போயினர் அங்கு இருந்தவர்கள்.

 

முடிந்த வரையிலும், அவனிடம் இருந்து தப்பி ஓட முயன்றனர் அவர்கள்.

 

ஒவ்வொரு பக்கம் ஆளுக்கு ஒருவராய், பாய்ந்து தப்பிக்க முயல,

 

ஆரண்யனோ, விடாது துரத்தித் துரத்தி அடித்தவன்,

 

அவர்கள் உருண்டு புரண்டு “சார்…. சாரி சார்…. மன்னிச்சிடுங்க சார். இனி மேல் இந்தப் பக்கம் வர மாட்டம். தெரியாம வந்திட்டம்.” என கெஞ்சிக் கேட்டு காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு அங்கிருந்து ஓடிச் சென்றனர்.

 

ஆரண்யனும், அவர்களை மிரட்டி அனுப்பி வைத்தவன்,

 

அவர்கள் போனதும் அங்கே வலியில் கையை உதறிக் கொண்டு, நின்று இருந்த சொர்ணாவை ஒரு பார்வை பார்த்தவாறு,

 

“சரியான இம்சை.”என முணு முணுத்தான்.

 

“ம்ம்ம்ம்…. கிளம்பு, உன்ன நானே ட்ரோப் பண்ணிட்டுப் போறேன்.” என பல்லைக் கடித்துக் கொண்டு கூறியவன்,

 

அவள் அப்படியே நிற்கவும், “இங்க பாரு எனக்கு பொறுமை ரொம்ப ரொம்பக் கம்மி. இப்போ நீ மட்டும் வரலன்னா…. நான் என் பாட்டு க்கு போய்க் கிட்டே இருப்பன். அப்புறம் உன்னோட பாதுகாப்பு உன் கையில.” என அவன் கூறிவிட்டு நகர,

 

அவன் ஒருவனின் வன்மம் மட்டும் தான், இவ்வளவும் நடக்க காரணம் என எண்ணிப் பார்த்தவளுக்கு, உள்ளுக்குள் அத்துணை ஆதங்கம் உண்டானது.

 

ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள், அவளை நரகத்தின் விளிம்புக் கே அழைத்துக் கொண்டு சென்று வந்து விட்டான் அவன்.

 

அவனிடமே எப்படி உதவி கேட்பது என ஒரு கேள்வி மனதிற்குள் எழுந்தாலும்,

 

அவளுக்கும் இப்போதைக்கு வேறு வழி இல்லையே. அந்த இரவு வேளையில் அவளது மானத்திற்கு யார் உத்தரவாதம் தருவார்?

 

எதிரில் நிற்பவன் எதிரியாகவே இருந்தாலும், அவனால் தனது கற்பிற்கு எந்த ஆபத்தும் வராது என உறுதியாக நம்பிய காரணத்தினால் சொர்ணாவும், அமைதியாக அவனது காரில் சென்று ஏறி அமர,

 

தலையைக் கோதிக் கொண்டு, தானும் ஏறிக் கொண்டவன், புயல் வேகத்தில் காரை ஓட்ட ஆரம்பித்தான்.

 

இருவர் இடத்திலும் மௌனம் மட்டும் தான் பேசும் மொழியாக இருந்தது.

 

இடையில் அவளை திரும்பிப் பார்த்தவன், அவள் கண் மூடி அமர்ந்து இருக்கவும்,

 

ஒரு நொடி, பிரேக்கை அழுத்தமாக அழுத்த கார் குலுங்கிப் பின் பழைய நிலைக்கு வந்தது.

 

அந்த ஒரு நொடியில் திடுக்கிட்டு அவள் கண் விழித்து தன்னைத் தானே சுதாரிக்கும் முன்பாக,

 

சீட் பெல்ட் போடாமல் இருந்ததன் விளைவாக, தடுமாறி பேலன்ஸ் இல்லாமல் அதிரடியாக முன்னுக்கு சென்று பின்னுக்கு வந்தாள் அவள்.

 

அவனோ, அவளது செய்கையில் உதட்டுக்குள் சிரித்துக் கொண்டவன்,

 

“என்னாச்சு…. நானும் ரோட கவனிக்கல. அதான் பேலன்ஸ் இல்லாம போச்சுது.” என சீரியசாக கூறும் தொனியில் கிண்டல் செய்ய,

 

அவன் வேணும் என்றே செய்தான் என தெரிந்தும், பல்லைக் கடித்து அமைதி காத்தவள்,

 

வேறு புறம் பார்க்க, ஆரண்யனோ,

 

“உன்ன பழி வாங்கணும்னு எல்லாம் செய்ற நானே கடைசில உன்ன காப்பாத்துற நிலை வந்துடிச்சு. அத தான் என்னால தாங்க முடியல.” என கூறியவன், ஸ்டியரிங் கில் அடிக்க,

 

அவனது மன நிலையை எண்ணி அழுவதா?, சிரிப்பதா? என புரியாது பெரு மூச்சுடன் அமர்ந்து இருந்தாள் சொர்ணா.

 

அவளது வீடு இருக்கும் தெரு முனைக்கு அவள் வழி சொல்லும் முன்பாக காரை ஓட்டியவனைக் கண்டு புருவம் சுருக்கியவள்,

 

அவனைக் கேள்வியாக பார்க்க,

 

அவளைப் பார்க்காது வண்டியை ஓட்டியபடியே, “என்ன இவனுக்கு எப்படி என் வீட்டு அட்ரஸ் தெரியும்னு பார்க்கிறீங்களோ மேடம்?” என கேட்க,

 

அவள் உதட்டைக் கடித்தபடி முகத்தை திருப்ப,

 

“ஒருத்தர் என் வட்டத்துக்குள்ள வர்றாங்க ன்னா….அவங்கள பத்தின முழு டீடெயில்ஸ்சும் என்னோட கையில இருக்கும். அதுவும் மேடம் எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல் இல்லையா. சோ, கும்பகோணம் வரைக்கும் போய் என்னோட டீம் உன்னப் பத்தி துப்புத் துலக்கி இருக்காங்க. உனக்கு கூட உன்னப் பத்தி சில விஷயங்கள் தெரியாம இருக்கும். ஆனா எனக்கு அத்தனை விஷயமும் அத்துப் படி.” என கூறிய படி,

 

அவள் இருக்கும் தெருவில் அவளை இறக்கி விட்டவன்,

 

அவள் இறங்கி, அவனைப் பார்க்காது “நன்றி சார்.” என கூறவும்,

 

“உன்னோட நன்றி எனக்கு தேவையே இல்ல. என்னோட கம்பெனிக்கு முன்னால எந்த அசம்பாவிதமும் நடக்க கூடாது. அது எனக்குத் தான் தலை குனிவு. ஏற்கனவே உன்னால வந்த தலை குனிவுக்கு, நான் இன்னும் மீடியா முன்னாடி பதில் சொல்லிக் கொண்டு இருக்கன். இதில இதுவும் வெளில வந்தா எனக்கு தான் இன்னும் பிரச்சனை. அந்த ஒரு காரணத்துக்காக தான் உன்ன காப்பாத்தினன். அத புரிஞ்சுக்கோ. அத விட உன் மேல எனக்கு எந்த விதமான பரிதாபமும் இல்லை. பாசமும் இல்லை.” என கூற,

 

அதற்கு மேலும் அவனிடம் எதுவும் பேச முடியாது அங்கிருந்து விலக எத்தனித்தவளை,

 

“ஹலோ மேடம் ஒரு நிமிஷம்.” என சொடக்கிட்டவன்,

 

“நான் சொன்ன மாதிரி, இரண்டு நாளுல ஒழுங்கா வந்து வேலையில சேரப் பார். இல்லன்னா உனக்கு தான் சேதாரம் இன்னும் அதிகம் ஆகும். ஏற்கனவே உன் மேல நான் கொலை வெறில இருக்கன். புரிஞ்சு நடந்துக்கோ. எனக்கு வேண்டியது நடக்க, நான் எந்த எல்லைக்கும் போவன்.” என உறுமியவன் மீண்டும் புயல் வேகத்தில் காரை எடுத்துக் கொண்டு போக,

 

“ஏண்டா இவன் கண்ணில பட் டோம்?” என நொந்து போய் காரை வெறித்துப் பார்த்தபடி நின்று கொண்டு இருந்தாள் சொர்ணா.

 

அவள் வீட்டு வாசலை நெருங்கும் போதே, அவளுக்காக காத்துக் கொண்டு இருந்த அவளது தந்தை,

 

“அம்மாடி சொர்ணா, என்னாச்சும்மா, ஏன் இவ்வளவு நேரம்?, உனக்கு நான் எத்தன தடவ போன் பண்ணேன்?, ஏன்மா முகம் ஒரு மாதிரி இருக்கு?, நீ நல்லாத் தானே இருக்காய்?, வழியில யாரும் ஏதும் சொன்னாங்களா?, போன இடத்தில ஏதும் பிரச்சனையா?….” என தொடர் கேள்விகள் கேட்டவர்,

 

மகளின் கை சற்று வீங்கி இருப்பதை அப்போது தான் கண்டு கொண்டார்.

 

உடனே பதட்டத்துடன் “அம்மாடி, சொர்ணா இதென்ன கையில இப்படி ஒரு வீக்கம்?, விரல் அடையாளமும் சேர்ந்து இருக்கு போல….” என கூறி அவளது கையை திருப்பிப் பார்க்க,

 

“ஸ்ஸ்ஸ்ஸ்….”என கூறிய வாறு வலியில் கையை உதறி யவள்,

 

“இல்லப்பா…. அது கோவில்ல ஒருத்தங்க இடிச்சதுல சுவரோட போய் மோதிட்டன் அவ்வளவு தான். நீங்க பயப்பிடுற மாதிரி ஒண்ணும் இல்லப்பா. அவ கூட பேசிக் கொண்டு இருந்ததுல கொஞ்சம் டைம் ஆகிருச்சு. போன் கொஞ்சம் பிரச்சனை அப்பா. என்னன்னு பார்க்கணும். நீங்க கால் பண்ணினது எனக்கு வரல.” என தந்தையை மேலும் யோசிக்க விடாது கட கடவென கூறியவள், அவரின் முகத்தில் இன்னும் தெளிவு இல்லாததைக் கண்டு,

 

“அப்பா இங்க பாருங்க, கோவில்ல இன்னைக்கு கூட் டமே இல்லை. எனக்கு நல்ல தரிசனம் கிடைச்சுது. உங்களுக்காக ஸ்பெஷலா வேண்டிக் கிட்டன். இந்தாங்க ப்பா திருநீறு.” என கூறியவள்,

 

கோவிலில் நடந்த பூஜைகள், அம்மனுக்கு பாடிய ஸ்தோத்திரம், என அனைத்தையும் கூற,

 

அவளின் தந்தையும் கோவில் பற்றிய கதைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

 

தந்தையை சமாதானம் செய்து விட்டு, அறைக்குள் வந்தவளுக்கு அப்போது தான், ஆசையாக வாங்கிய சிலையின் நினைவு வந்தது.

 

“அச்சோ ஆசையா வாங்கின சிலை ஆச்சே. எங்க விழுந்து இருக்கும்…. ரோட்ல விழுந்த மாதிரி இல்லை. ஒரு வேள அந்த ஆளோட காரில விழுந்து இருக்குமோ…. சே…. அமைதியா இருக்கலாம்னு கோவிலுக்கு போனன். ஆனா இருந்த நிம்மதியும் போச்சு. எல்லாம் என்னோட விதி.” என முணு முணுத்துக் கொண்டு தூங்க சென்றவளுக்கு மனதில் பாரம் ஏறிப் போனது தான் உண்மை.

 

அதே நேரம் அவள் ஆசைப்பட்ட அதே சிலையை கையில் தூக்கிப் போட்டு விளையாடிக் கொண்டு இருந்தான் ஆரண்யன்.

 

“சிலை அழகா தான் இருக்கு. லவ் மேக்ஸ் லைப் பியூட்டிபுல்…. சே…. புல்ஷீட் இந்த வசனங்கள் எல்லாம் எங்க இருந்து கண்டு பிடிக்கிறாங்களோ தெரியல. இடியட்ஸ், இந்த மாதிரி செண்டிமெண்ட் பூல்ஸ் இருக்கிறதால தான் இன்னும் நிறைய காதல் தோல்வி, தற்கொலை நடக்குது. என்னவோ….” என உதட்டை வளைத்தவன்,

 

“இந்த சிலை கண்டிப்பா எனக்கு யூஸ் ஆகும். பார்த்துக்கலாம்.” என கூறிக் கொண்டு,

 

அந்த சிலையை பத்திரமாக வைத்துக் கொண்டான்.

 

அவனைப் பொறுத்த வரைக்கும் கையில் உள்ள உயிர் அற்ற சிலையும், நேரில் உள்ள உயிரான பெண் சொர்ணாவும் ஒன்று தான்.

 

பொம்மைகள் போல உருட்டி விளையாடலாம் என எண்ணத்தோடு இறுமாப்புக் கொண்டு முடிவுகளை எதைப் பற்றியும் யோசிக்காது எடுக்க ஆரம்பித்தான் அவன்.

 

அவனது எண்ணங்களின் விளைவு என்னவாக இருக்கும்?

 

சொர்ணா அவன் சொன்னதற்கு சம்மதிப்பாளா?, இல்லையா?

 

அடுத்த பதிவில் பார்க்கலாம்.

 

கண்டிப்பா உங்க ஆதரவை கொடுங்க மக்காஸ்.

 

அடுத்த எபி நாளை வரும்…😍😍😍 லேட் எபிக்கு மன்னிச்சு மக்காஸ்….

 

லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் ப்ளீஸ்….

 

இனி அடுத்தடுத்த எபிகள் இன்னும் அதிரடியா வரும் மக்காஸ்….

 

கொஞ்சம் வேலை மக்காஸ் அதான் எபி ரொம்ப லேட்.. இனி எபிகள் ஒழுங்காக வரும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

.

 

 

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!