அத்தியாயம் 6
ஏன்… அகல் என்னை காப்பாத்துன்னா?
என்ன தான் ஆதினி தன் தங்கையின் மீது கோபத்தில் இருந்தாலும் ஏனோ அவளை பார்த்தவுடன் அந்த மொத்த கோபமும் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனது. அதிலும் அவளுக்கு உடல்நலம் சரியில்லை என்று தெரிந்ததும் அவளை நினைத்து மிகவும் கவலைப்பட்டால்… மெல்ல அவள் அருகே சென்று அமர்ந்த ஆதினி அன்போடு பெண்ணவளின் தலை கோதி…
“நீ இன்னும் வளரவே இல்ல அம்மு… எனக்கு என்னமோ உன்னை இப்போ பார்க்கும் போது கூட சின்ன குழந்தை மாதிரி தான் டி தெரியுற..” என்றவள் கன்னம் வருட… அமுதினியின் உடலோ மிகவும் சில்லென்று இருந்தது.
“என்ன இது? அகல்யா இவளுக்கு காய்ச்சல்னு சொன்ன.. ஆனா உடம்பு ஏன் இவ்வளவு சில்லுன்னு இருக்குது?” என்று யோசித்த ஆதினி..
“அம்மு… அம்மு… இங்க என்னை பாரு…” என்று அவளை அழைத்தவள். அவளிடம் இருந்து எந்த ஒரு பதிலும் இல்லாமல் போகவே..
“அம்மு…: என்றவாறு அவளை தன் பக்கம் திருப்பிய ஆதினி அப்போதே அமுதினியின் கை மணிக்கட்டில் இருந்து வழியும் ரத்தத்தை கண்டால்… ஒரு நொடி அங்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் விழித்த ஆதினி…
“அ..ம்..மு.. அம்.. அம்மு…” என்று குரல் நடுங்க அழைத்தவள். பெண்ணவளின் கன்னம் தட்ட அப்போதும் அவள் கண் விழிக்கவில்லை என்றதும்…
“அம்மு…” என்று கண்களில் இருந்து கண்ணீர் வழிய அந்த அறையே அதிரும்படி கத்தினாள்… ஆதினியின் குரல் கேட்டு ஒரு நொடி பயந்து போனா அகல்யாவும் என்ன ஆனதோ ஏதேனதோ என்று மிகுந்த பதட்டத்தோடு அவள் அருகே ஓடி வந்தவள்..
“ஏய்… ஆதி… என்னாச்சு? எதுக்கு இப்போ இப்படி கத்துற?..” என்று கேட்டவாறு அந்த அறைக்குள் நுழைந்த அகல்யாவும் அமுதினி நிலை கண்டு ஒரு நொடி அதிர்ந்து தான் போனால்…
“ஏய்… அம்மு…” என்று அவளும் அழுகையோடு அவள் அருகே வரே
“அகல்யா… மொத போய் ஃபர்ஸ்ட் எய்ட் கிட்.. எடுத்துட்டு வா.. நமக்கு டைம் இல்ல ஆல்ரெடி நிறைய ரத்தம் போயிடுச்சு” என்று கூறிய ஆதினி அமுதினியின் மணிக்கட்டில் இருந்து ரத்தம் வராதவாறு பிடித்து கொள்ள.. அகல்யாவும் ஓடி சென்று தன் அறையில் இருந்த ஃபர்ஸ்ட் எய்ட் கிட்ட எடுத்து வந்து ஆதினி இடம் கொடுக்க… அவளும் உடனடியாக அதில் இருந்த பொருட்களைக் கொண்டு முதலில் அமுதினிக்கு முதலுதவி செய்தால்… பின் ஒரு சீட்டில் சில மருந்துகளை எழுதி அகல்யாவிடம் கொடுத்தவள்..
“சீக்கிரமா போய் இதை வாங்கிட்டு வா… ரொம்ப அர்ஜென்ட் லேட் பண்ணாத” என்ற ஆதினி கூற அவளும் அந்த சீட்டை வாங்கிக் கொண்டு பக்கத்தில் இருந்த மெடிக்கல் ஷாப்பிற்கு சென்று அதில் இருந்தவற்றை அனைத்தையும் வாங்கிக் கொண்டு வந்தவள்… தன் போனிலிருந்து யாருக்கோ அழைக்க அதுவோ எடுக்கப்படவில்லை..
“ இவன் ஒருத்தன்… இந்த மாதிரி நேரத்துல தான் போன எடுக்க மாட்டான் இடியட்” என்ற திட்டியவாரே அங்கு நடந்த அனைத்தையும் அவனுக்கு மெசேஜ் அனுப்பி விட்டு வீட்டிற்கு வந்தவள். தான் வாங்கி வந்த அனைத்தையும் ஆதினியிடம் கொடுக்க ஆதினியும் அதை வைத்து அமுதினிக்கு ட்ரீட்மென்ட் செய்தாள்.. தன் தோழிக்கு என்னானதோ எதனோதோ என்று தெரியாமல் தவிப்போடு அகல்யா ஹாலில் அமர்ந்திருக்க, அமுதினிக்கான ட்ரிட்மெண்டை முடித்த ஆதினி அந்த அறையில் இருந்து வெளியே வர..
“ ஆதி என்ன ஆச்சு? அவளுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே? நல்லா இருக்கா இல்ல?” என்று அகல்யா மிகுந்த பதட்டத்தோடு கேட்க, கண்கள் சிவக்க கோபத்தோடு அகல்யாவை நிமிர்ந்து பார்த்த ஆதினி..
“அத நான் தான் உன் கிட்ட கேக்கணும்? என்ன நடக்குது இங்க? அவ எதுக்கு இப்போ இப்படி ஒரு முடிவை எடுத்தா? உன்னை நம்பி தானே அவளை நான் இங்கே விட்டுட்டு போனேன்? சொல்லு அகல் உன்னை நம்பி தானே விட்டுட்டு போனேன்? அவ எதுக்கு இப்படி பண்ணுனா கண்டிப்பா உனக்கு தெரியாம இருக்காது சொல்லு அகல்” என்று ஆதினி மிகுந்த கோபத்தோடு கேட்க அகல்யாவுக்கோ என்ன சொல்வது என்று தெரியவில்லை.. சொல்ல போனால் அவளுக்கும் என்ன நடந்தது என்று முழுமையாக தெரியாதே…
அகல்யா திருதிருவென விழித்துக் கொண்டு நிற்பதை கண்டு மிகுந்த கோபம் உற்ற ஆதினி ஓங்கிய அகல்யாவின் கன்னத்திலேயே ஒரு அறை விட்டால்…
அந்நேரம் சரியாக அந்த வீட்டிற்குள் நுழைந்த அசோக் அகல்யாவை தன் கைகளில் தாங்கி பிடிக்க.. அகல்யாவோ தன் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு ஆதினியை சிறு பயத்தோடு பார்த்தால்..
“ சொல்லு அகல்… கண்டிப்பாக உனக்கு தெரியாமல் எதுவும் நடந்திருக்காது அவ இப்படி ஒரு முடிவு எடுக்க என்ன காரணம்?” என்று ஆதினி சற்றும் கோபம் குறையாமல் கேட்க
“ ஆதி… இந்த கேள்விக்கு பதில் உன் தங்கச்சி கிட்ட தான் இருக்கு… நீ அவ கிட்ட போய் கேளு… அதை விட்டுட்டு இவளை அடிச்சா என்ன அர்த்தம்?” என்று மிகுந்த கோபத்தோடு கேட்டான் அசோக்..
“ ஆதி சத்தியமாலுமே எனக்கே என்ன நடந்ததுன்னு முழுசா தெரியாதுடி… எனக்கு தெரிஞ்சதெல்லாம் அவ எங்க ஆபீஸ்ல ஒரு பையன லவ் பண்ணா.. அந்த பையனுக்கு நெக்ஸ்ட் வீக் மேரேஜ்… நேத்து கூட அவன்கிட்ட பேசி என்னோட லவ்வர் புரிய வைக்கிறேன்னு சொல்லிட்டு தான் அவன் கூட போனா ஆனா திரும்ப வரும் போது ஏதோ பித்து பிடித்தவ மாதிரி வந்தா… நான் அவகிட்ட பேச ட்ரை பண்ணப்போ அவ என்கிட்ட இதை பற்றி எதுவும் என்கிட்ட பேசல, அதுக்கு அப்றம் நானும் அவளை கேள்வி கேட்டு கஷ்ட்டப்படுத்த விரும்பல” என்று நேற்று நடந்த அனைத்தையும் அகல்யா ஆதினியிடம் கூற அதை அனைத்தையும் கேட்ட ஆதினிகோ தன் தங்கையின் மேல் மிகுந்த கோபம் ஏற்பட்டது.
“ போயும் போயும் தன்னை காதலிக்காத ஒருவனுக்காக தான் இப்படி செய்து கொண்டாளா?” என்று யோசிக்கையில் அவளுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை..
“ இங்க பாரு ஆதி… நானும் அம்மு கிட்ட எவ்வளவோ அவன் சரியில்ல.. நிறைய பொண்ணுங்க கூட அவனுக்கு ரிலேஷன்ஷிப் இருக்குன்னு சொல்லிட்டேன். ஆனா அவ தான் அது எதையும் காதுலேயே வாங்கிக்காம நான் அவரை என் உயிருக்கு உயிரா லவ் பண்றேன் நீ சொல்ற மாதிரியெல்லாம் அவர் ஒன்னும் இல்ல, அவர் நல்லவர் வல்லவருன்னு சொல்லிட்டு.. நான் சொல்றத கொஞ்சம் கூட புரிஞ்சுக்கல.. அதோட விளைவு தான் இது” என்று அசோக் தன் பங்கிற்கு கோபத்தோடு கூற, ஆதினியோ இருவர் கூறியதையும் கேட்டு தன் தலையில் கை வைத்தவாறு அப்படியே சோஃபாவில் அமர்ந்து விட்டால்…
“ ஆதி இப்போ அவளுக்கு என்ன ஆச்சு? இப்போ அவ நல்லா இருக்கா இல்ல? ஒன்னும் பிரச்சனை இல்ல?” என்று தன் தோழியின் மீது அக்கறையோடு அகல்யா கேட்க
“ இப்போ அவ நல்லா இருக்கா… ஆனா இன்னும் கொஞ்சம் லேட்டா மட்டும் நம்ப வந்து இருந்தா அவளை கண்டிப்பா காப்பாத்திருக்க முடியாது.. பிழைக்கவே கூடாது அப்படிங்கிற எண்ணத்தோட அவ கையை ரொம்ப ஆழமா கட் பண்ண ட்ரை பண்ணி இருக்கா… ஆனா அவளோட நல்ல நேரமோ என்னமோ அவ சரியா கட் பண்ணல.. இன்னும் ஒரு இன்ச் ஆழமா கட் பண்ணி இருந்த கூட, கண்டிப்பா அவளை காப்பாற்றி இருக்க முடியாது” என்று ஆதினி கூற, அதை கேட்ட அகல்யாவுக்கு அமுதினியின் மீது கோபம் கோபமாக வந்தது.
அடுத்த மூன்று மணி நேரம் கழித்து அமுதினி கண் விழிக்க, அவள் முன் மிகுந்த கோபத்தோடு அகல்யா நின்றிருந்தாள்..
மெல்ல எழுத்து அமர்ந்த அமுதினி தன் கையை பார்க்க.. அதுவோ கட்டுக்கட்டப்படிருந்தது..
“ஏன்… அகல் என்னை காப்பாத்துன்னா?” என்று அமுதினி கேட்க அடுத்த நொடியே ஓங்கி அவள் கன்னத்தில் ஒரு அரை விட்ட அகல்யா.
“அதை எதுக்கு என்கிட்ட கேக்குறே? வெளிய ஒரு பைத்திக்காரி உக்காந்து இருக்க பாரு அவகிட்ட போய் கேளு” என்று கூறிய அகல்யா அமுதினியை முறைத்தவாறு அங்கிருந்து சென்று விட, அமுதினியோ புருவம் சுருங்க யோசித்தவள். மெல்ல கட்டிலில் இருந்து இறங்கி வெளியே ஹாலுக்கு வந்தவள். அங்கு தன் அக்கா இருப்பதை கண்டு மிகவும் அதிர்ந்து தான் போனால்.
“ஆ… ஆதி.. நீ… நீ இங்க என்ன பண்ற? எ… எப்போ வ.. வந்த?” என்று கேட்டவாறு அவள் தன் அக்காவின் அருகே செல்ல.. ஆதினியோ கண்கள் சிவக்க தன் முன் நிற்பவளை முறைத்தவள். சோபாவில் இருந்து எழுந்த வேகத்தில் அவள் கன்னத்தில் ஓங்கி பல்லார் என்று அறைந்தவள்..
“எவ்வளவு தைரியம்? யாரை கேட்டு டி நீ இந்த மாதிரி ஒரு முடிவை எடுத்த? எவனோ ஒருத்தனுக்காக செத்துப் போயிடலாம்னு முடிவு பண்ணுவியா? அப்போ என்னை நீ ஒரு நிமிஷம் கூட நினைச்சு பார்க்கலையா?” என்று கோபத்தோடு ஆதினி கேட்க, அமுதினியோ தன் அக்காவை கட்டிக்கொண்டு கதறி கதறி அழுக ஆரம்பித்தாள்.
“நான் ஏமாந்துட்டேன் ஆதி… என்னை அவன் ஏமாத்திட்டான்.. நான் அவனுக்கு வேண்டாமாம்..” என்று கூறியதையே திரும்ப திரும்ப கூறி அமுதினி அழுக, பெண்ணவளின் மனநிலையை புரிந்து கொண்ட ஆதினியோ அவளின் முதுகை ஆறுதலாக வருடி கொடுத்தால்..
“சரி… விட்டு.. பார்த்துக்கலாம் அவன் இல்லைன்னா என்ன? இந்த உலகத்துல வேற ஆள இல்ல? அவனை விட வேற ஒரு நல்ல பையன் கண்டிப்பா உன் லைஃப்ல வருவான்.. நீ நினைச்சு கூட பார்க்காத அளவுக்கு அவன் உன்னை லவ் பண்ணுவான்” என்று ஆதினி கூற
“இல்ல ஆதி… அப்படி யாரும் என் லைஃப்ல வரமாட்டாங்க, அப்படியே வந்தாலும் நான் அவங்களுக்கு தகுதியானவள் இல்ல…” என்று அமுதினி கூற
“ஏய்… லூசு.. உனக்கு என்ன பைத்தியமா? உன்னோட லவ் ஃபெயில் ஆகிடுச்சு அவ்வளவு தான்.. சொல்ல போன இது லவ்வே இல்ல ஜஸ்ட் ஒரு இன்பெக்சிவேசன்… இன்னும் கொஞ்ச நாளே நீ இதை மறந்துடுவே” என்று ஆதினி கூற
“இல்ல அக்கா… அது என்னைக்கும் நடக்காது.. நான் அவரை எப்போவும் மறக்கவே முடியாது.. ஒவ்வொரு தடவையும் நான் கண்ணை மூடும் போதும் அவரும் நானும் ஒன்னா இருந்த அந்த நிமிஷம் மட்டும் தான் வந்து போகுது… அப்படி இருக்கும் போது என்னால எப்படி ஆதி அவரை மறக்க முடியும்?” என்று அமுதினி கேட்க
“இல்ல.. இப்போ நீ என்ன சொல்ல வர? ஒன்னா இருந்தீங்க அப்படின்னா… என்ன அர்த்தம்?” என்று ஆதினி குழப்பத்தோடு கேட்க.. அமுதினியோ தயங்கி தயங்கி தங்கள் இருவருக்கும் நடந்ததை கூற ஆரம்பித்தாள்.
அமுதினியின் காதலை ஆதினி சேர்த்து வைப்பாளா? இருவரின் உறவை பற்றி தெரிந்தால் ஆதினியின் முடிவு என்னவாக இருக்கும்? அடுத்தவர்கள் தப்பு செய்தாளே மன்னிக்காத ஆதினி தன் தங்கையின் தவறை மன்னிப்பாளா? இந்த கேள்விகளுக்கான விடையங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்..
யாருக்கு இங்கு யாரோ?
Post Views: 508